AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

2026 பட்ஜெட் கூட்டத்தொடர்.. ஜன.27ல் அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு அழைப்பு..

Centre calls all-party meeting: நாடாளுமன்றக் கூட்டத்தொடருக்கு முன்பு, ஆளும் கட்சி நாடாளுமன்ற நடவடிக்கைகள் மற்றும் முக்கிய தேசியப் பிரச்சினைகள் குறித்து அனைத்துக் கட்சிகளுடனும் கலந்தாலோசனை நடத்தும். அதன்படி, இந்த பட்ஜெட் கூட்டத்தொடருக்குத் தயாராகும் வகையில், ஜன.27ல் அனைத்துக் கட்சிக் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற உள்ளது.

2026 பட்ஜெட் கூட்டத்தொடர்.. ஜன.27ல் அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு அழைப்பு..
ஜன.27ல் அனைத்துக்கட்சி கூட்டம்
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 25 Jan 2026 08:04 AM IST

டெல்லி, ஜனவரி 25: பட்ஜெட் கூட்டத்தொடருக்கு முன்னதாக, இம்மாதம் 27ஆம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. 2025-2026 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் இந்த மாதம் 28ஆம் தேதி தொடங்குகிறது. இந்தக் கூட்டத்தொடரை இரண்டு கட்டங்களாக நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, கூட்டத்தொடரின் முதல் கட்டம் பிப்ரவரி 13ஆம் தேதி வரை நடைபெறும். கூட்டத்தொடரின் இரண்டாம் கட்டம் மார்ச் 9ஆம் தேதி முதல் ஏப்ரல் 2ஆம் தேதி வரை நடைபெறும். அந்தவகையில், 28ஆம் தேதி கூட்டத்தொடர் தொடங்கும் நாளன்று, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றுகிறார்.

மேலும் படிக்க: குடியரசு தின விழாவில் CRPF ஆண்கள் பிரிவை வழிநடத்தப்போகும் பெண் கமாண்டன்ட்.. யார் இந்த சிம்ரன் பாலா?

பிப்.1ல் பட்ஜெட் தாக்கல்:

இதைத் தொடர்ந்து, பிப்ரவரி 1ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். இது மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் 9வது பட்ஜெட் ஆகும். பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பிறகு, 2ஆம் தேதி முதல் 4ஆம் தேதி வரை குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெறும். குடியரசுத் தலைவர் உரை மற்றும் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் நாட்களில் கேள்வி நேரம் இருக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்துக் கட்சிக் கலந்தாய்வுக் கூட்டம்:

பொதுவாக, நாடாளுமன்றக் கூட்டத்தொடருக்கு முன்பு, ஆளும் கட்சி நாடாளுமன்ற நடவடிக்கைகள் மற்றும் முக்கிய தேசியப் பிரச்சினைகள் குறித்து அனைத்துக் கட்சிகளுடனும் கலந்தாலோசனை நடத்தும். அதன்படி, இந்த பட்ஜெட் கூட்டத்தொடருக்குத் தயாராகும் வகையில், இந்த மாதம் 27ஆம் தேதி அனைத்துக் கட்சிக் கலந்தாய்வுக் கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தக் கூட்டம் அன்றைய தினம் காலை 11 மணிக்கு நாடாளுமன்ற வளாகக் கட்டிடத்தில் நடைபெறும் என்று நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எந்த மசோதாக்கள் தாக்கல் செய்யப்படும்?

மக்களவையின் உள்சுற்றறிக்கையின்படி, விக்சித் பாரத் ஷிக்ஷா அதிஸ்தான் மசோதா, 2025; பத்திரங்கள் சந்தைக் குறியீடு, 2025; மற்றும் அரசியலமைப்பு (நூற்று இருபத்தொன்பதாவது திருத்தச்) சட்டம், 2024 ஆகிய மசோதாக்கள் மீது விவாதங்கள் நடைபெறும். இந்த மசோதாக்கள் மேலதிக ஆய்விற்காக நாடாளுமன்ற நிலைக்குழுக்கள் அல்லது தேர்வுக் குழுக்களுக்கு அனுப்பப்பட்டன.

மேலும் படிக்க: குற்றவாளி முகம் தெரிந்தாலே அலெர்ட்.. குடியரசு தின பாதுகாப்பில் களமிறங்கும் AI கண்ணாடி!

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதிச் சட்டத்திற்கு (MGNREGA) பதிலாக குளிர்காலக் கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட்ட விக்சித் பாரத் – ரோஸ்கர் மற்றும் ஆஜீவிகா இயக்கம் (கிராமப்புறம்) சட்ட மசோதா குறித்தும் விவாதம் நடைபெறலாம். இந்த மசோதாவுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி தொடர்ந்து மத்திய அரசை விமர்சித்து வருகிறது, மேலும் இது தொடர்பாக மத்திய அரசுக்கு எதிராக நாடு தழுவிய பிரச்சாரத்தையும் நடத்தி வருகிறது.

Follow Us