Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

நீண்ட நேரம் உட்கார்ந்திருக்கிறீர்களா? அதிகரிக்கும் மாரடைப்பு அபாயம்

Prolonged Sitting Risk : சமீப காலமாக இளைஞர்களிடையே இதய நோய் ஆபத்துகள் அதிகரித்திருக்கிறது. இதற்கு நீண்ட நேரம் அமர்ந்தபடி வேலை பார்ப்பது முக்கிய காரணமாக கூறப்படுகிறது. இந்த கட்டுரையில் அதற்கான காரணம் என்ன? எப்படி தவிர்ப்பது என்பது குறித்து விவரமாக பார்க்கலாம்.

நீண்ட நேரம் உட்கார்ந்திருக்கிறீர்களா? அதிகரிக்கும் மாரடைப்பு அபாயம்
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 03 Sep 2025 23:22 PM

இன்றைய நவீன வாழ்க்கை முறையில், குறிப்பாக வேலைக்கு சார்ந்து, லேப்டாப்பின் (Laptop) முன் மணிக்கணக்கில் அமர்ந்திருப்பது பொதுவானதாகிவிட்டது. இந்தப் பழக்கம் நம் ஆரோக்கியத்தில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பது இதய ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும், இது அமைதியாக மாரடைப்பு(Heart Attack) அபாயத்தை அதிகரிக்கிறது என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். தொடர்ந்து உட்கார்ந்திருப்பது இப்போது புதிய புகைபிடித்தல் என்றும் அழைக்கப்படுகிறது. அதாவது உட்கார்ந்தபடியே இருப்பது புகைப்பிடிப்பதற்கு சமம் என கூறப்படுகிரது.

இதயத்தை எவ்வாறு பாதிக்கிறது?

நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பது இரத்த ஓட்டத்தை மெதுவாக்குகிறது என்று  மருத்துவ நிபுணர்கள் கூறுகிறார்கள். இதன் காரணமாக, இரத்தமும் ஆக்ஸிஜனும் இதயத்தை சரியாக சென்றடையாது. இந்த நிலைமை மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கிறது. இதனுடன், தொடர்ந்து உட்கார்ந்திருப்பது உடல் பருமன், நீரிழிவு நோய், உயர் இரத்த அழுத்தம் மற்றும் முதுகுவலி போன்ற பிரச்சனைகளையும் அதிகரிக்கும். இருப்பினும், உட்கார்ந்திருப்பது நேரடியாக மாரடைப்பை ஏற்படுத்தாவிட்டாலும், அது மாரடைப்பு அபாயத்தை அதிகரிக்கும், குறிப்பாக ஏற்கனவே உள்ள உடல்நலப் பிரச்சினைகள் உள்ளவர்களுக்கு ஆபத்து அதிகம்.

இதையும் படிக்க : தினமும் இவற்றை சாப்பிட்டால் போதும்! உங்களுக்கு ஒருபோதும் மாரடைப்பு வராது..!

அமைதியான மாரடைப்பு என்றால் என்ன?

ஒரு சாதாரண மாரடைப்புக்கு மார்பு வலி, வியர்வை மற்றும் மூச்சுத் திணறல் போன்ற வெளிப்படையான அறிகுறிகள் இருக்கும். ஆனால் அமைதியான மாரடைப்பில், இந்த அறிகுறிகள் மிகவும் லேசானவை அல்லது பெரிதாக வெளியே தெரியாது. இதயத்திற்கு இரத்த ஓட்டம் நிறுத்தப்பட்டாலும், உடல் அதிக எச்சரிக்கையை வழங்குவதில்லை. பலர் அதை சோர்வு, வாயு அல்லது மன அழுத்தம் என்று நினைத்து புறக்கணிக்கிறார்கள்.

இது ஏன் மிகவும் ஆபத்தானது?

அமைதியான மாரடைப்பின் மிகப்பெரிய பிரச்சனை என்னவென்றால், அறிகுறிகள் இல்லாததால் நோயாளிக்கு சரியான நேரத்தில் மருத்துவ உதவி கிடைக்காது. இதயம் கடுமையாக சேதமடைந்த பின்னரே விஷயம் தெரியும். இது திடீர் மரண அபாயத்தை அதிகரிக்கிறது.

இதையும் படிக்க : 40 வயதுக்கு மேற்பட்ட ஆண்களா நீங்கள்..? ஆரோக்கியத்திற்கு இந்த உணவுமுறை மாற்றம் தேவை!

யாருக்கு அதிக ஆபத்து உள்ளது?

  • நீண்ட நேரம் உட்கார்ந்தபடி வேலை செய்பவர்கள்
  • பருமன் உள்ளவர்கள் அல்லது வயிற்றைச் சுற்றி கொழுப்பு உள்ளவர்கள்
  • உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு நோயாளிகள்
  • அதிகமாக புகைபிடிப்பவர்கள், மது அருந்துபவர்கள்
  • கடுமையான மன அழுத்தம், தூக்கமின்மையால் பாதிக்கப்படுபவர்கள்

பாதுகாப்பது எப்படி?

  • இந்த ஆபத்தைக் குறைக்க சில வாழ்க்கை முறை மாற்றங்கள் அவசியம்.
  • ஒவ்வொரு நாளும் லேசான உடற்பயிற்சி மற்றும் இயக்கம் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
  • ஆரோக்கியமான, சீரான உணவை உட்கொள்வது முக்கியம்.
  • ஒவ்வொரு 30 முதல் 40 நிமிடங்களுக்கும் எழுந்து சிறிது நேரம் நடப்பது நல்லது, உடலை நீட்டுவது நல்லது.
  • புகைபிடித்தல் மற்றும் மது அருந்துவதைத் தவிர்க்கவும்.
  •  குறைந்தது 7-8 மணிநேரம் தூங்குவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
  • வழக்கமான உடல்நலப் பரிசோதனைகளை மேற்கொள்ளுங்கள்.