எதுவும் இந்த உலகில் நிரந்தரம் இல்லை… அனைவரிடமும் கனிவாக இருங்கள் – ராஷ்மிகா மந்தனா
Actress Rashmika Mandanna: தெலுங்கு சினிமா மட்டும் இன்றி தென்னிந்திய சினிமா ஏன் பான் இந்திய சினிமாவை ஒரு கலக்கு கலக்கி வருபவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் இறுதியாக நடித்த 3 படங்களுமே 1000 கோடி வசூல் சாதனை செய்தது குறிப்பிடத்தக்கது.

நடிகர் தனுஷ் (Actor Dhanush) நாயகனாகவும் நடிகை ராஷ்மிகா மந்தனா (Actress Rashmika Mandanna) நாயகியாகவும் நடித்து உள்ள படம் குபேரா இந்தப் படத்தின் வெளியீட்டிற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி நேற்று 15-ம் தேதி ஜூன் மாதம் 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியானது. இந்த நிகழ்ச்சியில் படத்தில் நடித்த தனுஷ், ராஷ்மிகா மந்தனா மற்றும் நாகர்ஜுனா (Actor Nagarjuna) என நடிகர்கள் படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டனர். படம் குறித்தும் படத்தில் நடித்த அனுபவம் குறித்தும் பொதுவான சில விசயங்களையும் நடிகர்கள் தங்களது ரசிகர்களிடையே பேசினர். அந்த வகையில் நடிகை ராஷ்மிகா மந்தனா அந்த நிகழ்ச்சியில் பேசியது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
குபேரா பட நிகழ்ச்சியில் நடிகை ராஷ்மிகா மந்தனாவின் பேச்சு:
குபேரா படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் நடிகை ராஷ்மிகா மந்தனா படத்தின் நடித்த அனுபவம் குறித்து பேசினார். பிறகு சமீபத்தில் அகமதாபாத்தில் நடைப்பெற்ற விமான விபத்து குறித்து பேசிய நடிகை ராஷ்மிகா மந்தனா அந்த செய்தி தன்னை மிகவும் நடுக்கத்திற்கு ஆளாக்கியது என்று தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய நடிகை ராஷ்மிகா மந்தனா, இந்த விமான விபத்து மூலம் இந்த உலகில் யாருடையா வாழ்க்கையும் நிரந்தரம் இல்லை என்பதை புரிந்துகொண்டேன். யார் எத்தனை நாள் இருப்போம் என்றும் தெரியவில்லை. அதனால் முடிந்தவரை அனைவரும் அனைவருடனும் கனிவாக நடந்துகொள்ளுங்கள் என்று தெரிவித்துள்ளார். இது தற்போது ரசிகர்களிடையே கவனம் பெற்று வருகின்றது.
நடிகை ராஷ்மிகா மந்தனாவின் இன்ஸ்டாகிராம் பதிவு:
View this post on Instagram
ஜூன் 20-ம் தேதி திரையரங்கில் வெளியாகும் குபேரா படம்:
தெலுங்கு சினிமாவின் பிரபல இயக்குநராக வலம் வருபவர் சேகர் கம்முலா. தமிழ் சினிமாவில் சில இயக்குநர்களின் படங்களில் நடிக்க வேண்டும் என்பது பல நடிகர்களின் கனவாக இருக்கும். அப்படி தெலுங்கு சினிமாவில் சேகர் கம்முலாவின் இயக்கத்தில் நடிக்க பல நடிகர்கள் ஆசைப்படுவது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இவர் தற்போது நடிகர் தனுஷை வைத்து குபேரா படத்தை இயக்கியுள்ளார்.
இது நடிகர் தனுஷ் நட்டிக்கும் இரண்டாவது தெலுங்கு படம் ஆகும். முன்னதாக இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் வாத்தி படத்தில் நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது குபேரா படத்தின் பணிகள் முடிவடைந்து படம் வெளியீட்டிற்காக காத்திருக்கின்றது. அதன்படி படம் வருகின்ற 20-ம் தேதி ஜூன் மாதம் 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.