Magalir Urimai Thogai : இந்த சில தவறுகளால் மகளிர் உரிமைத் தொகை கிடைக்காமல் போகலாம்.. முழு விவரம்!
Kalaignar Magalir Urimai Thogai Scheme | தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், புதிய பயனர்களை இணைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக முகாம்கள் நடத்தப்பட்டு வரும் நிலையில், சில காரணங்கள் காரணமாக மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படலாம் என கூறப்படுகிறது.

தமிழகத்தில் 2023 ஆம் ஆண்டு முதல் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் (Kalaignar Magalir Urimai Thogai Scheme) செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் இதுவரை ஒரு கோடிக்கும் அதிகமான மகளிர் பயன்பெற்று வருகின்றனர். இந்த நிலையில், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில், புதிய பயனர்களை இணைக்கும் பணி நடைபெற்று வருகிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில், முகாம்கள் அமைக்கப்பட்டு புதிய பயனர்களை இணைப்பதற்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், இந்த சில தவறுகள் காரணமாக மகளிர் உரிமைத் தொகை கிடைக்காமல் போகலாம் என கூறப்படுகிறது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.
ஒரு கோடிக்கும் அதிகமான மகளிர் பயன்பெறும் மகளிர் உரிமைத் தொகை திட்டம்
2021 சட்டமன்ற தேர்தலின் போது திமுக ஆட்சிக்கு வந்தால் மகளிருக்கு மாதம் ரூபாய் ஆயிரம் வழங்கும் கலைஞர் மகளிர் தொகை திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி ஆட்சிக்கு வந்த திமுக அரசு, 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் 15 ஆம் தேதி கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை தொடங்கி வைத்தது. இந்த திட்டத்தில் தற்போது வரை ஒரு கோடியே 14 லட்சம் மகளிர் பயன்பெற்று வருகின்றனர். ஆனால் தமிழகத்தில் மொத்தம் 2 கோடியே 16 லட்சம் குடும்ப அட்டைகள் உள்ள நிலையில், மீதமுள்ள தகுதியுள்ள மகளிருக்கு, மகளிர் உரிமை தொகை வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று சட்டப்பேரவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.




சட்டப்பேரவையில் அறிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
விடுபட்டவர்களுக்கு விரைவில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை, ஜூன் முதல் மீண்டும் விண்ணப்பிக்கலாம்.
சட்டப்பேரவையில், கழகத் தலைவர், மாண்புமிகு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்கள்#TNAssembly pic.twitter.com/KOf34SAW8d
— DMK (@arivalayam) April 25, 2025
இந்த சில காரணங்கள் காரணமாக மகளிர் உரிமைத் தொகை கிடைக்காமல் போகலாம்
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் புதிய பயனர்களை இணைக்கும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், சில காரணங்கள் காரணமாக மகளிர் உரிமைத் தொகை கிடைக்காமல் போகலாம் என கூறப்படுகிறது.
ஆதார் விவரங்களில் தவறு
கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்கும் நபரின் ஆதார் கார்டில் உள்ள பெயர், முகவரி மற்றும் வங்கி கணக்குடன் இணைக்கப்படாத ஆதார் உள்ளிட்ட காரணங்கள் காரணமாக விண்ணப்பம் நிராகரிக்கப்பட வாய்ப்புள்ளது.
போதிய ஆவணங்கள் இனமை
கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்கும் நபரிடம் வருமான சான்று, ரேஷன் கார்டு போன்ற முக்கிய ஆவணங்கள் இல்லை என்றால் விண்ணப்பம் நிராகரிக்கப்பட வாய்ப்புள்ளது.
விண்ணப்ப படிவத்தில் பிழைகள்
கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்கும் நபர்கள், விண்ணப்ப படிவத்தில் தவறான தகவல்களை நிரப்புவது, அல்லது முழுமையான விவரங்களை வழங்காமல் இருப்பது உள்ளிட்ட காரணங்கள் காரணமாக விண்ணப்பம் நிராகரிக்கப்பட வாய்ப்புள்ளது.