Magalir Urimai Thogai : இதை செய்யவில்லை என்றால் மகளிர் உரிமைத் தொகை ரூ.1,000 கிடைக்காது! உடனே செக் பண்ணுங்க!
Mandatories of Kalaignar Magalir Urimai Thogai | கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் புதிய பயனர்களை இணைக்கும் பணியை அரசு தொடங்கியுள்ளது. இதற்கான முகாம்கள் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெற முக்கியமாக உள்ள அம்சம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் (Kalaignar Magalir Urimai Thogai Scheme) 2023 ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் தற்போது வரை ஒரு கோடியே 14 லட்சம் பெண்கள் பயன் பெற்று வரும் நிலையில், புதிய பயனர்களை இணைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் புதிய பயனர்களை இணைப்பதற்கான முகாம்கள் தொடங்கப்பட்டு அதற்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் பயன்பெற சில ஆவணங்கள் முக்கியமாக உள்ள நிலையில், இந்த ஒரு அம்சமும் கட்டாயமாக உள்ளது. குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் இதை செய்யவில்லை என்றால் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெற முடியாது என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில், அது என்ன அம்சம் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
கோடிக்கணக்கான பெண்கள் பயன்பெறும் மகளிர் உரிமைத் தொகை திட்டம்
2021 சட்டமன்ற தேர்தல் வாக்குறுதியின் படி, 2023 செப்டம்பர் 15 ஆம் தேதி அண்ணா பிறந்தநாள் அன்று கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தில் தற்போது வரை சுமார் ஒரு கோடி 14 லட்சம் பெண்கள் பயன்பெற்று வருகின்றனர். தமிழகத்தில் மொத்தம் 2 கோடியே 16 லட்சம் ரேஷன் அட்டைகள் உள்ள நிலையில், மீதமுள்ள தகுதியான பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்குவதற்கான நடவடிக்கையை அரசு மேற்கொண்டுள்ளது. அதன்படி, முகாம்கள் அமைக்கப்பட்டு அதற்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெற சில விதிகள் மற்றும் தகுதிகள் கட்டாயமக உள்ள நிலையில் ஆதார், வங்கி கணக்கு மற்றும் மொபைல் எண் ஆகிய மூன்றும் ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட வேண்டியதற்கான அவசியம் உள்ளது.
ஆதார், வங்கி கணக்கு மற்றும் மொபைல் எண் மூன்றும் இணைக்கப்பட வேண்டும்
கலைஞர் மகளிர் உரிமைத் தொகையை பெற ஆதார், வங்கி கணக்கு மற்றும் மொபைல் எண் ஆகிய மூன்றும் ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட வேண்டும். அதாவது ஆதார், வங்கி கணக்குடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். இதேபோல வங்கி கணக்கு மொபைல் எண்ணுடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். இதில் முக்கியமாக ஆதார் மற்றும் வங்கி கணக்கில் கொடுக்கப்பட்டுள்ள மொபைல் எண்கள் ஒரே எண்ணாக இருக்க வேண்டும். காரணம் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் நேரடி நன்மை பரிமாற்றத்தின் கீழ் வருகிறது. இதன் காரணமாக ஆதார் மற்றும் வங்கி கணக்கில் வெவ்வேறு மொபைல் எண்கள் கொடுக்கப்பட்டிருக்கும் நிலையில், உங்களால் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை ரூ.1,000 பெற முடியாமல் போய்விடும் என்பது குறிப்பிடத்தக்கது.