Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

45 நாட்களில் நடவடிக்கை.. மகளிர் உரிமைத் தொகை குறித்து முக்கிய தகவல் சொன்ன அமைச்சர்!

Kalaignar Magalir Urimai Thogai Scheme | தமிழகத்தில் திராவிட முன்னேற்ற கழக அரசு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் பெண்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் ஏற்கனவே ஒரு கோடிக்கும் அதிகமான பெண்கள் பயன்பெற்று வரும் நிலையில், புதிய பயனர்களை இணைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

45 நாட்களில் நடவடிக்கை.. மகளிர் உரிமைத் தொகை குறித்து முக்கிய தகவல் சொன்ன அமைச்சர்!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 21 Jul 2025 11:23 AM

தமிழகத்தில் திராவிட முன்னேற்ற கழக (DMK – Dravida Munnetra Kazhagam) அரசு தொடங்கியுள்ள கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் (Kalaignar Magalir Urimai Thogai Scheme) முழு வீச்சில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் ஏற்கனவே ஒரு கோடிக்கும் அதிகமான பெண்கள் பயன்பெற்று வரும் நிலையில், இந்த திட்டத்தில் மேலும் புதிய பயனர்களை இணைக்கும் பணிகளை அரசு மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், முகாம்கள் நடத்தப்பட்டு, மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், மகளிர் உரிமைத் தொகை குறித்து அமைச்சர் சக்கரபாணி முக்கிய தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் முழு வீச்சில் செயல்படுத்தப்படும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம்

2021 சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தின் போது திமுக ஆட்சிக்கு வந்தால் மகளிருக்கு மாதம் ரூ.1,000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து ஆட்சிக்கு வந்த திமுக 2023, செப்டம்பர் 15 ஆம் தேதி அண்ணா பிறந்தநாள் அன்று கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை தொடங்கி வைத்தது. இந்த திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அது முதல் பெண்களின் வங்கி கணக்கில் மாதம் தோறும் ரூ.1,000 வரவு வைக்கப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த திட்டத்தின் மூலம் இதுவரை ஒரு கோடியே 16 லட்சம் பெண்கள் பயன்பெற்று வருகின்றனர்.

புதிய பயனர்களை இணைக்கும் பணிகள் தீவிரம்

தமிழகத்தில் மொத்தம் இரண்டு கோடிக்கும் அதிகமான குடும்ப அட்டைகள் உள்ள நிலையில், ஒரு கோடி பெண்கள் மட்டுமே மகளிர் உரிமைத் தொகை பெற்று வருகின்றனர். இந்த நிலையில், புதிய பயனர்களை இணைக்கும் பணி ஜூலை, 2025 முதல் தொடங்கும் என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி, முகாம்கள் அமைக்கப்பட்டு கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் – அமைச்சர் சொன்ன குட் நியூஸ்

இந்த நிலையில் திண்டுக்கலில் செய்தியாளர்களை சந்தித்த உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்ரபாணி, மக்களின் குறைகளை நேரடியாக கேட்டறியும் வகையில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நகர்புற மற்றும் கிராமப்புற பகுதிகளிலும் “உங்களுடன் ஸ்டாலின்” முகாம்கள் நடைபெற உள்ளன. தமிழ்நாட்டில் மொத்தம் 10,000 முகாம்கள் நடைபெற உள்ளன. இந்த நிலையில், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விடுபட்ட மகளிர் உங்களுடன் ஸ்டாலின் முகாம்களுக்கு சென்று விண்ணப்பத்தை அளிக்கலாம் என்று கூறியுள்ளார்.

மேலும், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கான விண்ணப்பங்கள் உங்களுடன் ஸ்டாலின் முகாம்களில் மட்டும் தான் வழங்கப்படும். இந்த முகாம்களின் பெறப்படும் விண்ணப்பங்களுக்கு 45 நாட்களில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.