Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

காத்திருக்கும் பேரழிவு.. 5 ஆண்டுகளில் உச்சமடையும் வெப்பநிலை.. வறட்சி, அதிக மழை பொழிவு ஏற்படும் அபாயம்!

WMO Predicts Temperature rise in Next 5 years : உலக நாடுகளில் அடுத்த ஐந்து ஆண்டுகளில் வெப்பநிலை புதிய உச்சத்தை தொடும் என்று உலக வானிலை ஆராய்ச்சி மையம் கணித்துள்ளது. இதனால், கடல் நீர்மட்டம் உயர்ந்து அதிக மழை பொழிவும், வறட்சி, சுனாமி போன்ற பிரச்னைகளை உலக நாடுகள் சந்திக்கலாம் என கணித்துள்ளது.

காத்திருக்கும் பேரழிவு.. 5 ஆண்டுகளில் உச்சமடையும் வெப்பநிலை..  வறட்சி, அதிக மழை பொழிவு ஏற்படும் அபாயம்!
வெப்பநிலைImage Source: PTI/Getty
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 29 May 2025 10:25 AM

உலக நாடுகள் காலநிலை மாற்றத்தால் பெரும் பிரச்னையை சந்தித்து வருகிறது. இந்த சூழலில், உலக வானிலை ஆராய்ச்சி அமைப்பு (World Meteorological Organization) அதிர்ச்சியூட்டும் தகவல்களை பகிர்ந்துள்ளது. அதாவது, அடுத்த ஐந்து ஆண்டுகளில் உலக நாடுகளில் வெப்பநிலை புதிய உச்சத்தை தொடும் என கணித்துள்ளது. இதற்கு 80 சதவீத வாய்ப்புகள் இருப்பதாகவும் உலக வானிலை ஆராய்ச்சி அமைப்பு கூறியுள்ளது. காலநிலை மாற்றத்தால் உலக நாடுகள் பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வருகிறது. உயிரிழப்புகள், பொருளாதார சிக்கல்கள் போன்றவற்றை சந்தித்து வருகிறது. அதிக அளவில் மழை பொழிவதற்கும், நிலச்சரவு, வெள்ளம், பூகம்பம், இயல்பை விட வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதற்கு காலநிலை மாற்றமே காரணம் என விஞ்ஞானிகள் கூறி வருகின்றனர்.

5 ஆண்டுகளில் உச்சமடையும் வெப்பநிலை

2024ஆம் ஆண்டு முதல் தற்போது வரை, உலக நாடுகள் காலநிலை பிரச்னையை சந்தித்தன. எனவே, அடுத்து ஐந்து நாடுகள் காலநிலை மாற்றம் உச்சத்தை எட்டும் என உலக வானிலை ஆராய்ச்சி மையம் கூறியுள்ளது.

இதுகுறித்து உலக வானிலை ஆராய்சி மையம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, 2025ஆம் ஆண்டு முதல் 2029ஆம் ஆண்டு வரை ஐந்து ஆண்டுகளில் சராசரி வெப்பநிலை 1.5 டிகிரி செல்சியஸைத் தாண்டும் என்றும் இதற்கு 80 சதவீதம் வரை வாய்ப்பு இருக்கதாக கணிக்கப்பட்டுள்ளது.

அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஒரு வருடமானது 2024ஆம் ஆண்டை விட அதிக வெப்பமான ஆண்டாக மாற 80 சதவீதம் வாய்ப்புள்ளது. இதன் காரணமாக அடிக்கடி கடுமையான வெப்ப அலைகள், வறட்சி, அதிக மழை பொழிவு, கடல் வெப்பமடைதல், பனிப்பாறைகள் உருகுதல் போன்ற நிலைமைகள் ஏற்படும் என்றும் கூறியுள்ளது.

வறட்சி, அதிக மழை பொழிவு ஏற்படும் அபாயம்


2025-2029 க்கு இடையில் ஒவ்வொரு ஆண்டும் சராசரி வெப்பநிலை 1.2 டிகிரி செல்சியஸ் முதல் 1.9 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும். கடந்த 60 ஆண்டுகளில் காணப்பட்ட வெப்பநிலையை விட மிக அதிகமாக அடுத்த ஐந்து ஆண்டுகளில் இருக்கும். ஆர்க்டிக் பகுதியில் உள்ள பனிப்பிரதேசம், மற்ற பகுதிகளை விட 3.5 மடங்கு வேகமாக வெப்பமடைந்து உருகும்.

இதனால், கடலின் நீர்மட்டம் உயரும் என்றும் உலக ஆராய்ச்சி மையம் கூறியுள்ளது. தற்போதைய வெப்பமயமாதல் அளவு ஏற்கனவே அதிக தீங்கை ஏற்படுத்தி வருவதாகவும், இன்னும் வெப்பமயமாதல் அதிகரித்தால் வெப்பஅலைகள், தீவிர மழை நிகழ்வுகள், கடுமையான வறட்சி, பனிப்படலங்கள் உருகுதல், கடல் வெப்பமடைதல் மற்றும் கடல் மட்டம் உயர்வு ஆகியவற்றை ஏற்படுத்தும் என்று கணிதுத்துள்ளது. இதானல், உயிரிழப்புகளும் ஏற்படலாம் என கணிக்கப்பட்டுள்ளது.

 

ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம் வெளியிட்ட புதிய அறிவிப்பு!
ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம் வெளியிட்ட புதிய அறிவிப்பு!...
இன்ஸ்டாகிராமில் Quality ஆன ரீல்ஸ்களை பதிவேற்றம் செய்வது எப்படி?
இன்ஸ்டாகிராமில் Quality ஆன ரீல்ஸ்களை பதிவேற்றம் செய்வது எப்படி?...
குழந்தைகள் ஆரோக்கியமாக இருக்க இந்த உடற்பயிற்சிகளை செய்யலாம்..!
குழந்தைகள் ஆரோக்கியமாக இருக்க இந்த உடற்பயிற்சிகளை செய்யலாம்..!...
பொது இடங்களில் மாஸ்க் கட்டாயம் - தமிழ்நாடு சுகாதாரத்துறை
பொது இடங்களில் மாஸ்க் கட்டாயம் - தமிழ்நாடு சுகாதாரத்துறை...
மாணவர்களுக்கு பஸ் பாஸ் பயண அட்டை குறித்து முக்கிய அறிவிப்பு..!
மாணவர்களுக்கு பஸ் பாஸ் பயண அட்டை குறித்து முக்கிய அறிவிப்பு..!...
குடும்பமே முக்கியம்! ஓய்வு குறித்து சூசகமாக பேசிய பும்ரா..!
குடும்பமே முக்கியம்! ஓய்வு குறித்து சூசகமாக பேசிய பும்ரா..!...
பணப் பேராசை தான் காரணம்.. நடிகர் கமல் வாழ்வில் நடந்த சம்பவம்!
பணப் பேராசை தான் காரணம்.. நடிகர் கமல் வாழ்வில் நடந்த சம்பவம்!...
அய்யயோ எப்படி நடந்திருக்கும்? பெண்ணின் காதில் நுழைந்த பாம்பு!
அய்யயோ எப்படி நடந்திருக்கும்? பெண்ணின் காதில் நுழைந்த பாம்பு!...
இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா.. இதுவரை 1,828 பாதிப்புகள் பதிவு!
இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா.. இதுவரை 1,828 பாதிப்புகள் பதிவு!...
வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் வந்த 4 புதிய அம்சங்கள் - என்ன என்ன தெரியுமா
வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் வந்த 4 புதிய அம்சங்கள் - என்ன என்ன தெரியுமா...
நாகதோஷம் இருந்தால் இப்படித்தான் நடக்கும்.. அறிகுறிகள் என்ன தெரியு
நாகதோஷம் இருந்தால் இப்படித்தான் நடக்கும்.. அறிகுறிகள் என்ன தெரியு...