AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

US Israel Iran War Live : அமெரிக்கா – இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது தாக்குதல்… பதில் தாக்குதலை தொடர்ந்த ஈரான் – பரபரப்பு தகவல்கள்

மத்திய கிழக்கு பகுதியில் பதற்றம் தீவிரமடைந்து வரும் நிலையில், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கு பதிலடியாக ஈரானும் தாக்குதல் நடத்தி வருவதாக கூறப்படும் நிகழ்வுகள், சர்வதேச அளவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Karthikeyan S
Karthikeyan S | Updated On: 28 Feb 2026 16:23 PM IST
Share
US Israel Iran War Live : அமெரிக்கா – இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது தாக்குதல்… பதில்  தாக்குதலை தொடர்ந்த ஈரான் – பரபரப்பு தகவல்கள்
அமெரிக்கா – இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது தாக்குதல்

LIVE NEWS & UPDATES

  • 28 Feb 2026 04:30 PM (IST)

    இஸ்ரேல் – அமெரிக்க தாக்குதலில் பள்ளி மாணவிகள் உயிரிழப்பு… ஈரான் தகவல்

    இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து மேற்கொண்ட தாக்குதலில், ஈரானின் தெற்கு பகுதியில் உள்ள ஒரு பெண்கள் பள்ளி மீது தாக்குதல் நடத்தப்பட்டதில் 5 மாணவிகள் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஈரான் அரசின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனம் வெளியிட்ட தகவலை மேற்கோள் காட்டி, இந்த செய்தியை சர்வதேச செய்தி நிறுவனம் அசோசியேட்டெட் பிரஸ் வெளியிட்டுள்ளது. தாக்குதல் நடைபெற்ற போது பள்ளி வளாகம் சேதமடைந்ததாகவும், இதில் படித்து வந்த மாணவிகள் பலியாகியதாகவும் கூறப்படுகிறது.

  • 28 Feb 2026 04:25 PM (IST)

    ஈரான் மீது தாக்குதல் – டிரம்புக்கு நன்றி தெரிவித்த இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு

    ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து தாக்குதல் நடத்தியுள்ள நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து வெளியிட்ட அறிக்கையில், ஈரான் உருவாக்கி வரும் அச்சுறுத்தலை நீக்கும் நோக்கில் இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து ராணுவ நடவடிக்கையை தொடங்கியுள்ளது. ஈரான் அரசு நீண்ட காலமாக இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுக்கு எதிராக செயல்பட்டு வருகிறது. அந்த நாடு அணு ஆயுதங்களை பெற்றுக்கொள்வதை அனுமதிக்க முடியாது என்றும் தெரிவித்தார்.

  • 28 Feb 2026 04:10 PM (IST)

    மத்திய கிழக்கில் நிலவும் சூழ்நிலை ஆபத்தானது – ஐரோப்பிய கமிஷன் துணைத் தலைவர் எச்சரிக்கை

    மத்திய கிழக்கு பகுதியில் நடைபெற்று வரும் சமீபத்திய நிகழ்வுகள் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளதாக ஐரோப்பிய கமிஷன் துணைத் தலைவர் காஜா கல்லாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ஈரான் அரசு, ஆயிரக்கணக்கான மக்களின் உயிரிழப்புக்கு காரணமாக இருந்துள்ளதாக குற்றம்சாட்டினார். மேலும், ஈரானின் பாலிஸ்டிக் ஏவுகணை மற்றும் அணு ஆயுத திட்டங்கள் உலக பாதுகாப்புக்கு பெரிய அச்சுறுத்தலாக உள்ளதாகவும் கூறினார்.

  • 28 Feb 2026 03:55 PM (IST)

    குவைத்தில் எச்சரிக்கை சைரன் ஒலி

    மேற்கு ஆசிய பகுதிகளில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் அபுதாபி மற்றும் பஹ்ரைன் பகுதிகளில் வெடி சத்தங்கள் கேட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஈரானின் தாக்குதலை தொடங்கியுள்ளதாக கூறப்படும் நிலையில் இந்த வெடி சத்தங்கள் கேட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. இதற்கிடையில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக குவைத்தில் எச்சரிக்கை சைரன்கள் ஒலிக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

  • 28 Feb 2026 03:40 PM (IST)

    ஈரானில் பொதுக்கட்டிடங்கள் சேதம்

    அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மேற்கொண்ட விமான தாக்குதல்களில், நாட்டின் பல நகரங்களில் உள்ள பொது கட்டிடங்கள் சேதமடைந்துள்ளதாக ஈரான் குற்றம் சாட்டியுள்ளது. இதுகுறித்து ஈரான் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், அமெரிக்கா மற்றும் ஈரான் தாக்குதல்கள் காரணமாக பொதுமக்கள் பகுதிகளையும் பாதித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • 28 Feb 2026 03:24 PM (IST)

    இஸ்ரேல் – ஈரான் பதற்றம் தீவிரம் – மேற்கு ஆசிய வான்வெளி மூடல்

    இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், மேற்கு ஆசிய பிராந்தியத்தில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் தலைநகர் டெஹ்ரான் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. மேலும் ஈரானும் பதிலடி தாக்குதலை மேற்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் அந்த பகுதியில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது. இந்த சூழ்நிலையில், பாதுகாப்பு காரணங்களால் கத்தார், குவைத் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட பல நாடுகள் தங்களது வான்வெளியை தற்காலிகமாக மூடியுள்ளன.

மத்திய கிழக்கு பகுதியில் பதற்றம் தீவிரமடைந்து வரும் நிலையில், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கு பதிலடியாக ஈரானும் தாக்குதல் நடத்தி வருவதாக கூறப்படும் நிகழ்வுகள், சர்வதேச அளவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பிப்ரவரி 8, 2026 அன்று அதிகாலை நடைபெற்ற இந்த தாக்குதலில், ஈரான் தலைநகர் டெஹ்ரான் உள்ளிட்ட முக்கிய பகுதிகள் குறிவைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. தாக்குதல் நடைபெற்ற பகுதிகளில் இருந்து கரும்புகை எழுந்த காட்சிகள் வெளியாகியுள்ளன. தற்போது கிடைத்த சில தகவல்களின் படி, ஈரானின் மதத் தலைவரான அயத்துல்லா அலி கமேனேய் அலுவலகத்தின் அருகிலும் தாக்குதல் நடைபெற்றதாக கூறப்படுகிறது. தாக்குதல் நடைபெற்றதைத் தொடர்ந்து, ஈரான் வான்வெளி வழியாக சென்ற பல சர்வதேச பயணிகள் விமானங்கள் அவசரமாக தங்கள் பாதையை மாற்றி பயணிக்க தொடங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பாதுகாப்பு காரணங்களால் பல விமானங்கள் மாற்று வழிகளில் இயக்கப்பட்டன. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஈரான் ஏவுகணை தாக்குதலை தொடங்கியதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. குறிப்பாக அமெரிக்க கடற்படை தளம் குறிவைக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

Published On - Feb 28,2026 3:04 PM

Follow Us