AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

24 மணி நேரத்தில் இந்தியாவின் வரி மேலும் உயரும் – எச்சரிக்கை விடுத்த ட்ரம்ப்

Trump Threatens India : அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்தியாவின் ரஷ்ய எண்ணெய் இறக்குமதி குறித்து மீண்டும் மிரட்டல் விடுத்துள்ளார். ரஷ்ய வர்த்தகத்தை இந்தியா நிறுத்தாவிட்டால், அடுத்த 24 மணி நேரத்தில் இறக்குமதி வரியை 25%லிருந்து மீண்டும் அதிகரிப்பேன் என எச்சரித்துள்ளார்.

24 மணி நேரத்தில் இந்தியாவின் வரி மேலும் உயரும் – எச்சரிக்கை விடுத்த ட்ரம்ப்
ட்ரம்ப்
C Murugadoss
C Murugadoss | Published: 05 Aug 2025 20:00 PM IST

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியாவுக்கு இரண்டாவது முறையாக மிரட்டல் விடுத்துள்ளார். இந்தியா ஒரு நல்ல வர்த்தக கூட்டாளியாக இல்லை என்று ஏற்கனவே வெளிப்படையாக டிரம்ப் கூறினார். இந்தியா தொடர்ந்து ரஷ்ய எண்ணெயை வாங்கி வருவதாகவும் அவர் குற்றம் சாட்டினார். தற்போது ட்ரம்ப் மேலும் ஒரு எச்சரிக்கையை விடுத்துள்ளார். ரஷ்ய வர்த்தகத்தை இந்தியா உடனடியாக நிறுத்தவில்லை என்றால், அடுத்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான தற்போதைய 25 சதவீத வரி விகிதத்தை மேலும் அதிகரிப்பேன் என அவர் குறிப்பிட்டுள்ளார். சிஎன்பிசிக்கு அளித்த பேட்டியில் டிரம்ப், இந்தியாவின் முக்கிய பிரச்சனை அதன் கடமைகள் மிக அதிகமாக இருப்பதுதான் என்றார்.

இந்தியா விமர்சனம்

உக்ரைனில் போர் நடந்து கொண்டிருந்த போதிலும், ரஷ்யாவுடன் அதிக அளவில் வர்த்தகம் செய்து வரும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம், ரஷ்யாவின் எண்ணெய் கொள்முதல் தொடர்பாக நியாயமற்ற முறையில் இந்தியாவை குறிவைப்பதாக இந்திய அரசு கடுமையாக விமர்சித்துள்ளது. பாரதிய ஜனதா கட்சியும் (BJP) பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸும் ட்ரம்ப் விமர்சித்ததைக் கண்டித்தன. இது தொடர்பாக திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட ஒரு அறிக்கையில், இந்தியாவை விமர்சிக்கும் நாடுகள் தாங்களும் ரஷ்யாவுடன் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளன என்பதை மறுக்க முடியாது என குறிப்பிட்டுள்ளது

Also Read : பூமி மீது படையெடுக்க உள்ள வேற்று கிரக வாசிகள்?.. பூமியை நோக்கி வரும் மர்ம பொருள் குறித்து விஞ்ஞானிகள் கூறுவது என்ன?

மேலும், இந்தியாவை தனிமைப்படுத்துவது நியாயமற்றது என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியம் 2024 ஆம் ஆண்டில் ரஷ்யாவுடன் 67.5 பில்லியன் யூரோக்கள் (78.02 பில்லியன் டாலர்) வர்த்தகம் செய்ததாகவும், இதில் 16.5 மில்லியன் மெட்ரிக் டன் எல்என்ஜி இறக்குமதி சாதனையாக இருந்ததாகவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது. அமெரிக்கா தனது அணுசக்தித் துறையில் பயன்படுத்துவதற்காக ரஷ்ய யுரேனியம் ஹெக்ஸாஃப்ளூரைடு, பல்லேடியம், உரங்கள் மற்றும் ரசாயனங்களை தொடர்ந்து இறக்குமதி செய்து வருவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திடீர் விரிசல்

ஜூலை 31 ஆம் தேதி, அமெரிக்காவிற்கு அனுப்பப்படும் இந்தியப் பொருட்களுக்கு 25 சதவீத வரி விதிப்பதாக டிரம்ப் அறிவித்தார். இந்நிலையில் தற்போது மீண்டுமொரு எச்சரிக்கையை அவர் விடுத்துள்ளார். இந்த தொடர் எச்சரிக்கைகள் இந்தியா – அமெரிக்கா இடையேயான வர்த்தக நட்பை பிளவுபடுத்தி வருகின்றன. இந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூன் வரை ஒரு நாளைக்கு சுமார் 17.5 லட்சம் பீப்பாய்கள் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்து, ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெயை அதிகம் வாங்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும்.

Also Read : கழிவறையில் ரகசிய கேமரா.. 13,000 வீடியோக்களை எடுத்ததாக வாக்குமூலம்.. இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் கைது!

இது ஒரு வருடத்திற்கு முன்பு இருந்ததை விட 1 சதவீதம் அதிகம். இதற்கிடையே, டிரம்பின் வரிகள் இந்தியாவின் பொருளாதாரத்தை மோசமாகப் பாதிக்கக்கூடும் என்று வர்த்தக நிபுணர்கள் கூறுகின்றனர். அதேவேளையில் இந்த வரி உயர்வால் அமெரிக்காவிலும் சில பாதிப்புகளும் ஏற்படும் என கணிக்கப்பட்டுள்ளது.

Follow Us