AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

செஷெல்ஸ் பயணத்தில் அரிய சந்திப்பு… உலகின் மூத்த ஆமையை பார்க்கும் பிரதமர் மோடி

பிரதமர் மோடியின் இந்தப் பயணம் இந்தியா - செஷெல்ஸ் இடையேயான இருதரப்பு உறவை மேலும் வலுப்படுத்தும் என செஷெல்ஸ் வெளியுறவுத்துறை அமைச்சர் பாரி ஃபோர் தெரிவித்துள்ளார். குறிப்பாக, கடல்சார் பாதுகாப்பு, விண்வெளி ஒத்துழைப்பு, இணைய பாதுகாப்பு (Cyber Security), பரஸ்பர சட்ட உதவி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையே புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் கூறியுள்ளார்.

செஷெல்ஸ் பயணத்தில் அரிய சந்திப்பு… உலகின் மூத்த ஆமையை பார்க்கும் பிரதமர் மோடி
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 27 Jun 2026 14:13 PM IST

ஜூன் 27, 2026: இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ஜூன் 27 முதல் 29 வரை நடைபெறும் தனது செஷெல்ஸ் பயணத்தின் போது, உலகின் மிக வயதான நில வாழ் உயிரினமாகக் கருதப்படும் ‘ஜோனதன்’ என்ற ஆமையை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. செஷெல்ஸ் அதிபர் பாட்ரிக் ஹெர்மினியின் அழைப்பின் பேரில், அந்நாட்டின் தேசிய தின பொன்விழா கொண்டாட்டங்களில் சிறப்பு விருந்தினராக பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக செஷெல்ஸ் செல்கிறார். இந்தப் பயணத்தின் போது, செஷெல்ஸ் தேசிய தாவரவியல் பூங்காவிற்கும் அவர் செல்ல உள்ளார். அங்கு நினைவாக ஒரு மரக்கன்றையும் நட உள்ளார்.

யார் இந்த ஜோனதன்?

உலகின் மிக வயதான நில வாழ் உயிரினமாக அங்கீகரிக்கப்பட்டுள்ள ‘ஜோனதன்’ என்ற மாபெரும் ஆமை, தெற்கு அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள செயிண்ட் ஹெலினா தீவில் வசித்து வருகிறது. இதன் வயது சுமார் 193 என மதிப்பிடப்பட்டுள்ளது.

1882-ஆம் ஆண்டு, பரிசாக செயிண்ட் ஹெலினா தீவுக்கு கொண்டு வரப்பட்ட ஜோனதன், அன்றிலிருந்து அங்குள்ள ஆளுநர் மாளிகை வளாகத்திலேயே வசித்து வருகிறது.

உலக சாதனைப் புத்தகமான கின்னஸ் உலக சாதனை (Guinness World Records), ஜோனதனை ஒரு “சின்னம்” (Icon) என அங்கீகரித்துள்ளது. வயது முதிர்ந்திருந்தாலும், நல்ல உடல்நிலையுடனும் ஆரோக்கியமான உணவுப் பழக்கத்துடனும் இருப்பதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இருப்பினும், முதுமை காரணமாக அதற்கு மோப்ப சக்தி (மணம் அறியும் திறன்) குறைந்துள்ளது.

மேலும், மனிதர்களின் செல்களைப் போல இல்லாமல், ஜோனதனின் உடல் செல்கள் எளிதில் மாற்றமடைவதில்லை என்பதால், அதன் டி.என்.ஏ. குறித்து தற்போது ஆராய்ச்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சமீபத்தில் ஜோனதன் உயிரிழந்ததாக சமூக வலைதளங்களில் வதந்திகள் பரவின. ஆனால், அந்த தகவலை கின்னஸ் உலக சாதனை நிறுவனம் மறுத்ததுடன், ஆளுநர் மாளிகை தோட்டத்தில் மேலும் மூன்று ஆமைகளுடன் ஜோனதன் ஆரோக்கியமாக வாழ்ந்து வருவதாக தெரிவித்தது.

இந்தியா – செஷெல்ஸ் உறவு மேலும் வலுப்படும்:

பிரதமர் மோடியின் இந்தப் பயணம் இந்தியா – செஷெல்ஸ் இடையேயான இருதரப்பு உறவை மேலும் வலுப்படுத்தும் என செஷெல்ஸ் வெளியுறவுத்துறை அமைச்சர் பாரி ஃபோர் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக, கடல்சார் பாதுகாப்பு, விண்வெளி ஒத்துழைப்பு, இணைய பாதுகாப்பு (Cyber Security), பரஸ்பர சட்ட உதவி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையே புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் கூறியுள்ளார்.

இந்தியாவின் ‘விஷன் மகாசாகர்’ (Vision MAHASAGAR) திட்டத்தில் செஷெல்ஸ் முக்கிய கடல்சார் கூட்டாளியாக இருப்பதாகவும், உலக தெற்கு நாடுகளின் (Global South) முன்னேற்றத்தில் இரு நாடுகளும் இணைந்து செயல்படுவதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

மேலும், இரு நாடுகளின் மக்களின் முன்னேற்றம், இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தின் பாதுகாப்பு மற்றும் வளமான வளர்ச்சிக்காக இந்தப் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Follow Us