AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Viral Video : பாடல் பாடிய பாதுகாவலர்.. கட்டி அணைத்தபடி மெய் மறந்து கேட்ட யானை.. வைரல் வீடியோ!

Elephant Viral Video | யானைகள் தொடர்பான வீடியோக்கள் ஒவ்வொரு நாளும் இணையத்தில் வெளியாகி வைரலாகும். அந்த வகையில், யானை ஒன்று தனது பாதுகாவலரின் பாடலை மெய் மறந்து கேட்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அது குறித்து பார்க்கலாம்.

Viral Video : பாடல் பாடிய பாதுகாவலர்.. கட்டி அணைத்தபடி மெய் மறந்து கேட்ட யானை.. வைரல் வீடியோ!
வைரல் வீடியோ
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 07 Sep 2025 23:00 PM IST

யானைகள் தொடர்பான வீடியோக்கள் ஒவ்வொரு நாளும் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வகையில், யானை ஒன்று பாடல் பாடும் தனது பாதுகாவலரை கண்டி அணைத்துக்கொண்டு இருக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வீடியோவை பார்க்கும் பலரும் அது குறித்து உணர்ச்சி பொங்க தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். இந்த நிலையில், இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

பாடல் பாடிய பாதுகாவலர் – கட்டி அணைத்தபடி மெய் மறந்து கேட்ட யானை

யானை மற்ற விலங்குகளை விட சற்று வித்தியாசமான உயிரினம் ஆகும். விலங்கு இனத்திலேயே அதிக உணர்வு கொண்ட உயிரினமாக யானை உள்ளது. அந்த வகையில், யானைகள் தங்களது அபாரமான குணத்தால் செய்யும் ஒருசில செயல்கள் தொடர்பான வீடியோக்கள் அவ்வப்போது இணையத்தில் வெளியாகி வைரலாகும். அந்த வகையில், பாடல் பாடும் பாதுகாவலரை யானை ஒன்று கட்டி அணைத்தபடி மெய் மறந்து பாடல் கேட்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க : Viral Video : தாய் அன்பிற்கே ஈடேதம்மா.. குட்டி யானைக்கு கரும்பை உடைத்து கொடுக்கும் தாய் யானை.. அழகிய வீடியோ!

இணையத்தில் வைரலாகும் வீடியோ

 

View this post on Instagram

 

A post shared by Lek Chailert (@lek_chailert)

இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில் யானை பாதுகாவலர் ஒருவர் புல் தரையில் அமர்ந்துக்கொண்டு இருக்கிறார். அப்போது யானை ஒன்று தனது ஒரு காலை எடுத்து பாதுகாவலரின் கால் மீது வைத்துக்கொண்டு நிற்கிறது. அப்போது தனது பாதுகாவலரை எந்தவித தொந்தரவும் செய்யாமல் மெய்மறந்து பாடலை கேட்டுக்கொண்டு இருக்கிறது. இவை அனைத்தும் அந்த வீடியோ காட்சியில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க : Viral Video : வானை பிளந்துக்கொண்டு பயங்கர சத்ததுடன் தாக்கிய மின்னல்.. அலறி அடித்துக்கொண்டு ஓடிய இளைஞர்கள்!

வைரல் வீடியோவுக்கு நெட்டிசன்கள் கருத்து

இந்த வீடியோ இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வரும் நிலையில், மனிதர்காள் கூட இவ்வளவு அழகாக பாடலை ரசிக்க முடியாது என பலரும் கருத்து பகிர்ந்து வருகின்றனர்.

Follow Us