AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
Ration Card

Ration Card

Ration Card

ரேஷன் அட்டை என்பது இந்திய குடும்பங்களின் அடையாள அட்டையாக உள்ளது. இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் ரேஷன் அட்டை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாநிலத்திற்கு ஏற்றார் போல் திட்டங்களின் சிறப்பு அம்சங்கள் மாறுபடும். அந்த வகையில், தமிழ்நாட்டில் ரேஷன் அட்டை மூலம் பொதுமக்களுக்கு இலவசமாக அரசி வழங்கப்படுகிறது. அதுமட்டுமன்றி கோதுமை, சர்க்கரை, எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் மாநிய விலையில் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த ரேஷன் அட்டை திட்டத்தின் மூலம் ஏராளமான குடும்பங்கள் பயன்பெற்று வருகின்றன. பயனர்களின் பொருளாதார நிலையை கருத்தில் கொண்டு ரேஷன் அட்டைகள் வகைப்படுத்தப்படுகின்றன. அதன்படி, பொருளாதார நிலையில் மிகவும் குறைவாக உள்ளவர்களுக்கு PHH ரேஷன் அட்டை வழங்கப்படுகிறது. இதெபோல வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு PHH-AAY ரேஷன் அட்டை வழங்கப்படுகிறது. பெரிய பொருளாதார சிக்கல்கள் இல்லாத குடும்பங்களுக்கு NPHH ரேஷன் அட்டையும், பொருளாதார பாதிப்புகள் இல்லாத குடும்பங்களுக்கு NPHH-S ரேஷன் அட்டையும் வழங்கப்படுகிறது. மேலும், பொருளாதாரத்தில் உயர்ந்த நிலையில் உள்ளவர்களுக்கு NPHH-NC ரேஷன் அட்டை வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Read More

ரேஷன் கடைகளில் விரைவில் ஸ்மார்ட் திட்டம்.. விரல் ரேகைக்கு குட்பை.. முகத்தை காட்டி பொருட்கள் வாங்கும் புதிய வசதி!

Ration Shops Facial Recognition: தமிழகத்தில் செயல்படும் ரேஷன் கடைகளில் முக அங்கீகாரம் வாயிலாக ரேஷன் பொருள்கள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக அந்த துறையின் அமைச்சர் வெங்கடரமணன் தெரிவித்துள்ளார். இந்த திட்டம் தொடர்பான முழு விவரங்களை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

ரேஷன் அட்டைதாரர்களுக்கு குட் நியூஸ்.. இனி இதை செஞ்சே ஆகணும்.. அமைச்சர் அதிரடி!!

ரேஷன் கடைகளில் நடக்கும் எடைக் குறைபாடு மற்றும் கடத்தல் புகார்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க புதிய 'ப்ளூடூத்' எடை இயந்திரங்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக அமைச்சர் வெங்கடரமணன் தெரிவித்துள்ளார். மேலும், முதியவர்களுக்கான 'தாய்மாணவன்' திட்டம் மற்றும் விவசாயிகளுக்கான மாற்றுப் பயிர் திட்டங்கள் குறித்தும் அவர் விளக்கியுள்ளார்.

ரேஷன் கார்டு பயனர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு.. நாளை மிஸ் பண்ணிடாதீங்க!

Ration Card Camp On July 11 | தமிழகத்தில் ரேஷன் அட்டை திட்டம் மூலம் ஏராளமான பொதுமக்கள் பயன்பெற்று வருகின்றனர். இந்த நிலையில், அது தொடர்பான முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது நாளை (ஜூலை 11, 2026) தமிழகம் முழுவதும் ரேஷன் கார்டு முகாம்கள் நடைபெற உள்ளன.

3 லட்சம் ரேஷன் கார்டுகள் அச்சடிக்கும் பணி.. பரிசீலனையில் 3 லட்சம் கார்டுகள்.. எப்போது வழங்கப்படும்!

Ration Cards: தமிழகத்தில் 3 லட்சம் புதிய ரேஷன் அட்டைகள் அச்சடிக்கப்பட்டு வருவதாகவும், மேலும் 3 லட்சம் ரேஷன் அட்டைகள் பரிசீலனையில் உள்ளதாக குடிமைப் பொருள் வழங்கல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த அட்டைகள் எப்போது வழங்கப்படும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு.. குடும்ப உறுப்பினர்களின் கைரேகை பதிவு இனி கட்டாயம்.. கூட்டுறவுத்துறை அதிரடி உத்தரவு!

ரேஷன் விநியோகத்தில் நடக்கும் இதுபோன்ற முறைகேடுகளைத் தடுக்கவும், தகுதியான பயனாளிகளுக்குச் சரியாகப் பொருட்கள் சென்றடைவதை உறுதி செய்யவும் கூட்டுறவுத்துறை தற்போது புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. ரேஷன் கார்டில் பெயர் உள்ள ஒவ்வொரு குடும்ப உறுப்பினரும் தங்களது கைவிரல் ரேகைப் பதிவை ரேஷன் கடைகளில் வழங்கி அதனை உறுதி செய்வது அவசியமாக்கப்பட்டுள்ளது.

ரேஷன் கார்டு தொடர்பான அனைத்து சேவைகளும் ஒரே நாளில்.. ஜூன் 13 ஆம் தேதி மிஸ் பண்ணிடாதீங்க!

Resolve All Ration Card Issues On One Day | ரேஷன் கார்டு தொடர்பான அனைத்து சேவைகளையும் ஒரே நாளில் பெற, ஜூன் 13, 2026 அன்று ரேஷன் கார்டு குறை தீர்ப்பு முகாம் நடைபெற உள்ளது. உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் மண்டல உதவி ஆணையாளர் அலுவலகங்களுக்கு சென்று சேவைகளை பெற்றுக்கொள்ளலாம்.

ரேஷன் கார்டில் இத செய்யவில்லை என்றால் அரிசி கிடைக்காது.. முக்கிய அறிவிப்பு!

Do This To Get Rice With Ration Card | ரேஷன் கார்டில் மானிய விலையில் பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட பொருட்களை வாங்க முடியும். இலவசமாக அரிசி வாங்கிக்கொள்ளலாம். இந்த நிலையில், ரேஷன் கார்டில் கேஒய்சி மேற்கொள்ளவில்லை என்றால் இலவச அரிசி கிடைக்காது என கூறப்பட்டுள்ளது.

“புதிய ரேஷன் கார்டு”.. விரைவில் சிறப்பு முகாம்கள்.. அமைச்சர் வெங்கடரமணன் சொன்ன GOOD NEWS!!

New Ration Cards: தேர்தல் நடைமுறைகள் தொடங்குவதற்கு நான்கு மாதங்களுக்கு முன்பிருந்தே புதிய ரேஷன் கார்டுகள் வழங்கும் வழக்கமான பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததாக அமைச்சர் தெரிவித்தார். தற்போது தேர்தல் நடைமுறைகள் நிறைவடைந்துள்ள சூழலில், நிலுவையில் உள்ள விண்ணப்பங்களை ஆய்வு செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இனி புதிய ரேஷன் கார்டு பெற கூடுதல் தாமதம்.. வெளியான முக்கிய தகவல்!

Name Removal In Ration Card | ரேஷன் அட்டையில் ஒருவரது பெயரை இணைப்பது எவ்வளவு முக்கியமோ அதே அளவுக்கு பெயரை நீக்கம் செய்வதும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. இந்த நிலையில், ரேஷன் கார்டில் இருந்து பெயர் நீக்கம் செய்வது தொடர்பான முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.

புதிய ரேஷன் கார்டு கிடைப்பதில் சிக்கல்?.. வெளியான முக்கிய தகவல்!

New Ration Card Delay | இந்தியர்களுக்கான மிக முக்கிய ஆதாரமாக ரேஷன் கார்டு உள்ளது. இந்த நிலையில், 2026 சட்டமன்ற தேர்தலுக்கான விதிகள் அமலில் உள்ள நிலையில், பொதுமக்களுக்கு புதிய ரேஷன் கார்டு கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

ரேஷன் அட்டையில் கைரேகை பதிவு செய்து விட்டீர்களா.. உடனே செக் பண்ணுங்க.. முக்கிய தகவல்!

Add Fingerprints of Family Members In Ration Card | ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களின் உண்மை தன்மையை சோதிக்க கை ரேகை பதிவு செய்ய மத்திய அரசு 2024-ல் உத்தரவு பிறப்பித்தது. ஆனால், தமிழகத்தில் இன்னும் 28 லட்சம் ரேஷன் அட்டை தாரர்கள்ம் கை ரேகை பதிவு செய்யாமல் உள்ளனர்.

இந்த ரேஷன் அட்டை தாரர்களுக்கு பொங்கல் பரிசு ரூ.3,000 கிடைக்காது.. எந்த எந்த அட்டைகள்!

Pongal Gift 3000 Rupees | 2026 ஆம் ஆண்டு பொங்கலுக்கு பொங்கல் சிறப்பு தொகுப்புடன் ரூ.3,000 பணம் வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. அதே சமயம் சில ரேஷன் அட்டை தாரர்களுக்கு பொங்கல் சிறப்பு பரிசு வழங்கப்படாது என்று அரசு கூறியுள்ளது.

இன்று முதல் 4 நாட்களுக்கு.. வீடு தேடி வரும் ரேஷன் பொருள்கள்!!

thayumanavar scheme: முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்காக செயல்படுத்தப்படும் இத்திட்டத்திற்காக 30 கோடியே 16 லட்சம் ரூபாய் செலவாகும் என்று மதிப்பிடப்பட்டிருந்தது. இந்நிலையில், தற்போது திட்டத்திற்கான வயது வரம்பையும் அரசு தளர்த்தி அறிவித்துள்ளது. தகுதியுள்ள முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள், இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு, இல்லங்களிலேயே ரேஷன் பொருட்களை பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Ration Card : இந்த விஷயங்களை கட்டாயம் பின்பற்றுங்கள்.. இல்லையெனில் உங்கள் ரேஷன் கார்டு ரத்து செய்யப்படலாம்!

Prevent Ration Card Deactivation | தமிழகத்தில் போலி ரேஷன் கார்டுகள் மூலம் நடைபெறும் மோசடி சம்பவங்களை தடுக்க அரசு பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், உங்கள் ரேஷன் கார்டு ரத்து செய்யப்படாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்று தெரிந்துக்கொள்ளுங்கள்.

புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிப்பது எப்படி?.. ஆன்லைன் மூலம் சுலபமாக செய்து முடித்துவிடலாம்!

How to Apply Ration Card | இந்தியாவில் உள்ள குடும்பங்களுக்கு ரேஷன் கார்டு ஒரு முக்கிய அடையாள ஆவணமாக உள்ளது. இந்த நிலையில், ஆன்லைன் மூலம் புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிப்பது எப்படி அதற்கு என்ன என்ன ஆவணங்கள் முக்கியமாக உள்ளது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.