Ration Card : ரேஷன் கடையில் வரவுள்ள அசத்தல் அம்சம்.. இனி பொதுமக்களுக்கு கவலை வேண்டாம்!
Digital Weighing Scales in Ration Shops | பொதுமக்களுக்கு பயனளிக்கும் வகையில் அரசு ரேஷன் அட்டை திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதன் மூலம் ஏராளமான பொதுமக்கள் பயனடைந்து வரும் நிலையில், பொதுமக்களுக்கு மேலும் பயனளிக்கும் வகையில் அசத்தல் திட்டம் ஒன்றை அறிமுகம் செய்வதற்கான பணியில் அரசு இறங்கியுள்ளது.

இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் அரசு ரேஷன் அட்டை (Ration Card) திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் ஏராளமான பொதுமக்கள் பயன்பெற்று வரும் நிலையில், பொதுமக்களுக்கு பயனளிக்கும் வகையில் பல பல்வேறு சிறப்பு அறிவிப்புகள் மற்றும் அம்சங்களை அரசு அறிவித்து வருகிறது. அந்த வகையில் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்கும் வகையில் புதிய நடவடிக்கை ஒன்றை மேற்கொள்ள உள்ளது. இதன் மூலம் ரேஷன் கார்டை பயன்படுத்தும் லட்சக்கணக்கான பொதுமக்கள் பயனடைவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
ரேஷன் அட்டை திட்டம் மூலம் பயனபெறும் லட்சக்கணக்கான பொதுமக்கள்
இந்தியா முழுவதும் உள்ள மாநிலங்களில் அரசு ரேஷன் அட்டை திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தில் வருமை கோட்டின் கீழ் உள்ள பொதுமக்களுக்கு மானிய விலையில் அரிசி, பருப்பு, கோதுமை, எண்ணெய் உள்ளிட்ட உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுமக்கள் தங்களது அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்துக்கொள்ளும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இந்த திட்டத்தில் கோடிக்கணக்கான பொதுமக்கள் பயன்பெற்று வருகின்றனர். பசியில்லா நாட்டை கட்டமைக்க வேண்டும் என்பதன் காரணமாக அரசு இந்த திட்டத்தை செயல்படுத்தி வரும் நிலையில், வருமை கோட்டின் கீழ் உள்ள பொதுமக்களின் வாழ்வாதாரமாக இந்த திட்டம் விளங்குகிறது. இவ்வாறு பொதுமக்களின் நலன் காக்கும் திட்டமாக இது உள்ள நிலையில், பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று அரசு ஒரு முக்கிய நடவடிக்கையை மேற்கொள்ள உள்ளது.
பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று புதிய நடவடிக்கை மேற்கொள்ளும் அரசு
தமிழ்நாடு முழுவதும் சுமார் 37,328 ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த ரேஷன் கடைகள் மூலம் லட்சக்கணக்கான பொதுமக்கள் பயனடைந்து வரும் நிலையில், பொதுமக்கள் மத்தியில் நீண்ட நாள் கோரிக்கை ஒன்று இருந்து வருகிறது. அதாவது, ரேஷன் கடைகளில் வழங்கப்படும் பொருட்கள் சரியான எடையில் இல்லை என்றும், பல முறைகேடுகள் நடைபெறுவதகாவும் நுகர்வோர் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இதற்கு தீர்வு காணும் வகையில் சில ரேஷன் கடைகளில் பிஓஎஸ் கருவியுடன் மின்னணு தராசு இணைக்கப்பட்டு சோதனை நடைபெற்று வருகிறது. இந்த சோதனை வெற்றி பெரும் பட்சத்தில் தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் இந்த முறை அமல்படுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.