Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

வாடிக்கையாளர்களின் ரூ.4.58 கோடி பணத்தை மோசடி செய்த வங்கி மேலாளர்.. உஷாராக இருப்பது எப்படி?

Bank Account Protection From Scams | இந்தியாவில் சமீப காலமாகவே வங்கி மற்றும் நிதி சார்ந்த மோசடிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்த நிலையில், வங்கி மோசடிகளில் இருந்து பாதுகாப்பாக இருக்கவும், நிதி இழப்பு ஏற்படாமல் தடுக்கவும் இந்த சில பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றுங்கள்.

வாடிக்கையாளர்களின் ரூ.4.58 கோடி பணத்தை மோசடி செய்த வங்கி மேலாளர்.. உஷாராக இருப்பது எப்படி?
மாதிரி புகைப்படம்
vinalin-sweety
Vinalin Sweety | Updated On: 10 Jun 2025 18:11 PM

இந்தியாவில் வங்கி மோசடி மிகப்பெரிய பிரச்னையாக உள்ளது. இத்தகைய மோசடிகளை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தாலும், நாளுக்கு நாள் மோசடிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதுவரை மோசடி கும்பல்கள் பொதுமக்களை ஏமாற்றி வங்கி கணக்கில் இருந்து பணத்தை கொள்ளையடித்து வந்த நிலையில், தற்போது புது விதமாக வங்கி மேலாளரே வாடிக்கையாளர்களின் பணத்தை மோசடி செய்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்த மோசடி சம்பவம் எங்கு நடைபெற்றது, மேலாளர் வாடிக்கையாளர்களின் பணத்தை மோசடி செய்தது எப்படி, இத்தகைய சிக்கல்களில் இருந்து பாதுகாப்பாக இருப்பது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

100 வாடிக்கையாளர்களின் பணத்தை மோசடி செய்த வங்கி மேலாளர்

தங்களது பணம் பத்திரமாக இருக்க வேண்டும் என்பதற்காக பொதுமக்கள் வங்கிகளில் டெபாசிட் செய்கின்றனர். ஆனால், வங்கியிலே மோசடி நடைபெற்றால் என்ன செய்வது. மின்ட் செய்தியின் படி, ராஜஸ்தானின் கோட்டா நகரத்தில் உள்ள ஐசிஐசிஐ வங்கியில் மேலாளராக பணியாற்றி வந்த சாஷி குப்தா என்ற 43 வயது பெண், வாடிக்கையாளர்கள் 110 பேரின் வங்கி கண்க்கில் இருந்து பணத்தை எடுத்துள்ளார். முன்னதாக, அவர்களின் வங்கி கணக்குடன் இணைக்கப்பட்டு இருந்த மொபைல் எண்களை மாற்றிய அவர், பின்னர் அவர்களின் கணக்கில் இருந்து பணத்தை எடுத்துள்ளார். இவ்வாறு சூரையாடிய வாடிக்கையாளர்களின் பணத்தை அவர் பங்குச்சந்தையில் முதலீடு செய்த நிலையில், அவரை கைது செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதன் காரணமாக பலர் தங்களது பணத்தை இழந்து தவித்து வருகின்றனர்.

வங்கி மோசடிகள் குறித்து எச்சரிக்கையாக இருக்க இவற்றை பின்பற்றுங்கள்

வங்கி மோசடிகளில் சிக்கிக்கொள்ளாமல் இருக்க சில விஷயங்களை பின்பற்ற வேண்டியது அவசியமாக உள்ளது.

அதிகாரப்பூர்வ மொபைல் செயலியை பயன்படுத்துங்கள்

வங்கி சார்ந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வங்கிகளின் அதிகாரப்பூர்வ செயலிகளை மட்டுமே பயன்படுத்துங்கள். மூன்றாம் தரப்பு செயலிகளை பயன்படுத்துவதன் மூலம் உங்களுக்கே ஆபத்தாக மாறிவிடலாம்.

கணக்கு இருப்பை சோதித்துக்கொண்டே இருங்கள்

உங்கள் வங்கி கணக்கில் எவ்வளவு இருப்பு உள்ளது என்பதை சோதனை செய்துக்கொண்டே இருங்கள். இவ்வாறு செய்வதன் மூலம், ஒருவேளை உங்கள் வங்கி கணக்கில் இருந்து பணம் திருடப்பட்டால் அது தெரியவந்துவிடும்.

வங்கியுடன் தொடர்பில் இருங்கள்

உங்கள் வங்கி கணக்கு விவரங்கள் அல்லது இருப்பில் ஏதேனும் மாற்றங்கள் தோன்றினால் உடனடியாக வங்கிகளை தொடர்ப்புக்கொண்டு அது குறித்த உங்களது சந்தேகங்களை தீர்த்துக்கொள்ளுங்கள்.

மேற்குறிப்பிட்ட இந்த நடைமுறைகளை பின்பற்றும் பட்சத்தில் வங்கி மோசடிகளில் இருந்து பாதுகாப்பாக இருக்கலாம்.

நிறைவடைந்தது விஷ்ணு விஷாலின் இரண்டு வானம் படத்தின் ஷூட்டிங்...
நிறைவடைந்தது விஷ்ணு விஷாலின் இரண்டு வானம் படத்தின் ஷூட்டிங்......
ஷ்ரேயாஸ் ஐயர் ஒதுக்கப்பட வேண்டிய வீரர் அல்ல - சவுரவ் கங்குலி
ஷ்ரேயாஸ் ஐயர் ஒதுக்கப்பட வேண்டிய வீரர் அல்ல - சவுரவ் கங்குலி...
Google Pay, Paytm யூஸ் பண்றீங்களா? அப்போ இத தெரிஞ்சுக்கோங்க!
Google Pay, Paytm யூஸ் பண்றீங்களா? அப்போ இத தெரிஞ்சுக்கோங்க!...
தொடங்கியது ஷூட்டிங்... போஸ்டர் வெளியிட்ட சூர்யா 46 படக்குழு!
தொடங்கியது ஷூட்டிங்... போஸ்டர் வெளியிட்ட சூர்யா 46 படக்குழு!...
தோளில் துண்டு போடும் போலி விவசாயி நான் இல்லை - முதல்வர் ஸ்டாலின்
தோளில் துண்டு போடும் போலி விவசாயி நான் இல்லை - முதல்வர் ஸ்டாலின்...
கொடைக்கானலில் இப்படி ஒரு இடம் இருக்கிறதா? என்ன இடம் அது?
கொடைக்கானலில் இப்படி ஒரு இடம் இருக்கிறதா? என்ன இடம் அது?...
”எங்க வீட்டுப்பையன் விஜய்" பிரேமலதா விஜயகாந்த் பேச்சு
”எங்க வீட்டுப்பையன் விஜய்
மிதுன ராசியில் குரு பகவான்.. இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்ட மழை!
மிதுன ராசியில் குரு பகவான்.. இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்ட மழை!...
இரண்டு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்.. எந்தெந்த பகுதிகளில்?
இரண்டு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்.. எந்தெந்த பகுதிகளில்?...
லோகேஷ் கனகராஜின் சினிமாட்டிக் யுனிவர்ஸில் இணையும் அனுஷ்கா ஷெட்டி?
லோகேஷ் கனகராஜின் சினிமாட்டிக் யுனிவர்ஸில் இணையும் அனுஷ்கா ஷெட்டி?...
புதுக்கோட்டையில் 108 ஆம்புலன்சில் பிறந்த குழந்தை....
புதுக்கோட்டையில் 108 ஆம்புலன்சில் பிறந்த குழந்தை.......