Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

வாட்ஸ்அப் மூலம் வந்த ஆபத்து.. ஆன்லைன் மோசடியில் ரூ.2 கோடியை இழந்த பேராசியர்!

2 Crore Online Scam | இந்தியாவில் சைபர் குற்றங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்த நிலையில், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் பணியாற்றிய ஓய்வு பெற்ற பேராசிரியர் ஒருவர் சுமார் ரூ.2 கோடி பணத்தை ஆன்லைன் மோசடியில் இழந்துள்ளார். அவர் பணத்தை இழந்தது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

வாட்ஸ்அப் மூலம் வந்த ஆபத்து.. ஆன்லைன் மோசடியில் ரூ.2 கோடியை இழந்த பேராசியர்!
மாதிரி புகைப்படம்
vinalin-sweety
Vinalin Sweety | Published: 29 Jun 2025 13:59 PM

இந்தியாவில் சைபர் குற்றங்களின் (Cyber Fraud) எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆன்லைன் மோசடி (Online Scam) மூலம் ஏராளமான மக்கள் லட்ச கணக்கிலும், கோடி கணக்கிலும் பணத்தை இழந்து தவித்து வருகின்றனர். அந்த வகையில் ஆந்திராவை சேர்ந்த ஓய்வு பெற்ற கல்லூரி பேராசிரியர் ஆன்லைன் மோசடியில் ரூ. 2 கோடி வரை பணத்தை இழந்த அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது. வாட்ஸ்அப் குழு (WhatsApp Group) ஒன்றில் இணைக்கப்பட்டதன்  மூலம் அவர் இந்த மோசடியில் சிக்கியுள்ளார். இந்த நிலையில், ஓய்வு பெற்ற கல்லூரி பேராசிரியரிடம் ரூ.2 கோடி வரை மோசடி செய்யபட்டது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

வாட்ஸ்அப் குழுவில் இணைந்ததால் பரிபோன ரூ.2 கோடி

புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவ கல்லூரியின் (JIPMER Medical College) முன்னாள் பேராசிரியர் பத்மநாபன். இவர் ஜூன் 18, 2025 அன்று காவல் நிலையத்தில் தனக்கு நடைபெற்ற மோசடி குறித்து புகார் அளித்திருந்தார். அதில், தான் ஒரு வாட்ஸ்அப் குழுவில் இணைக்கப்பட்டதாகவும், அதன் பெயர் H-10 Nuvama Health Group என்றும் கூறியுள்ளார். அந்த குழுவில் நுவாமா ஃபண்ட்ஸில் எவ்வாறு முதலீடு செய்வது என்பது குறித்த டிப்ஸ்கள் வழங்கப்படும் என தனக்கு கூறப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஆசை காட்டி மோசம் செய்த கும்பல்

பேராசிரியருக்கு ஏற்கனவே அந்த நிறுவனம் குறித்து நன்கு தெரிந்திருந்த நிலையில், அது உண்மை என நம்பியுள்ளார். இந்த நிலையில், கங்கனா என்ற பெண் அவருக்கு அறிமுகமாகியுள்ளார். தன்னை அவர் நுவாமா ஃபண்ட் ஊழியர் என்றும் கூறியுள்ளார். அப்போது அவர் பேராசிரியருக்கு ஒரு லிங்கை அனுப்பி அதில் ரெஜிஸ்டர் செய்ய கூறியுள்ளார். அதனை நம்பி பேராசிரியர், முதற்கட்டமாக ரூ.10,000 முதலீடு செய்துள்ளார். உடனடியாக அவருக்கு ரூ.13,000 கிடைத்துள்ளது. இது அவருக்கு நம்பிக்கையை அதிகரித்துள்ளது.

பணத்த எடுக்க முயன்றபோது ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பேராசிரியர்

இந்த நிலையில்,  அவர் இவ்வாறு தொடர்ந்து முதலீடு செய்ய தொடங்கியுள்ளார். அதன்படி, ரூ.1.9 கோடி அவர் முதலீடு செய்துள்ளார். அவரை நம்ப வைப்பதற்காக அந்த கும்பல் அவரது கணக்கில் ரூ.35 கோடி பணம் இருப்பதாக காட்டி வந்துள்ளது. இந்த நிலையில், அந்த பணத்தை அவர் எடுக்க முயற்சி செய்தபோது, தான் ஏமாற்றப்பட்டதை அவர் உணர்ந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர், அது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.