AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

நடத்தையில் சந்தேகம்: கணவன் தலையில் அம்மிக்கல்லை போட்டு கொன்ற மனைவி

Alleged Domestic Abuse in Salem: சந்தேகம் மற்றும் குடும்ப வன்முறை காரணமாக சேலத்தில் கொலை சம்பவம் நடைபெற்ற நிலையில், மனைவி ஆத்திரத்தில் கணவனை அம்மிக்கல்லால் தாக்கி கொன்றார்; இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த திடீர் சம்பவம் அந்த குடும்பத்தையும், அப்பகுதியையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

நடத்தையில் சந்தேகம்: கணவன் தலையில் அம்மிக்கல்லை போட்டு கொன்ற மனைவி
மாதிரி புகைப்படம் Image Source: pinrest
Sivasankari Bose
Sivasankari Bose | Published: 20 Mar 2026 12:00 PM IST

சேலத்தில் குடும்ப தகராறு கொலையாக முடிந்தது. மனைவியின் நடத்தை மீது கணவருக்கு சந்தேகம் ஏற்பட்டது. மதுபோதையில் அடிக்கடி மனைவியை துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. கடும் வாக்குவாதத்திற்கு பிறகு மனைவியை கணவன் தாக்கினார். ஆத்திரத்தில் அம்மிக்கல்லால் தாக்கி கணவனை மனைவி கொன்றார். போலீசார் மனைவியை கைது செய்து விசாரணை நடத்துகின்றனர். குடும்ப வன்முறை எவ்வளவு தீவிரமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதற்கான எடுத்துக்காட்டாக இந்த சம்பவம் பார்க்கப்படுகிறது.

காதல் திருமணம் மற்றும் குடும்ப பின்னணி

சேலம் அம்மாபேட்டை நஞ்சம்பட்டி சேக்கிழார் தெருவை சேர்ந்தவர் தங்கம் (40 வயது). இவரது மனைவி பத்மா (40 வயது). 17 ஆண்டுகளுக்கு முன்பு இவர்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். குடும்ப வாழ்க்கை சாதாரணமாக நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில், பத்மா கணவரின் உறவினர் ஒருவரை அடிக்கடி சந்தித்து பேசியதாக கூறப்படுகிறது. இதுவே பின்னர் குடும்பத்தில் பெரும் பிரச்சினைக்கு காரணமாக மாறியது.

சந்தேகம் மற்றும் துன்புறுத்தல்

இதனால் மனைவியின் நடத்தை மீது தங்கத்துக்கு சந்தேகம் ஏற்பட்டது. இந்த சந்தேகம் நாளுக்கு நாள் அதிகரித்து, அது குடும்ப அமைதியை பாதிக்க தொடங்கியது. இதன் காரணமாக அவர் அடிக்கடி வீட்டுக்கு மதுகுடித்து விட்டு வந்து மனைவியை அடித்து துன்புறுத்தியதாக தெரிகிறது. தொடர்ந்து நடந்த இத்தகைய வன்முறை, பத்மாவை மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் கடுமையாக பாதித்தது. குடும்பத்தில் பயம் மற்றும் பதற்றம் நிலவியது.

சம்பவம் நடந்த இரவு

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு தங்கம் வீட்டுக்கு மது போதையில் வந்தார். அப்போது அவர் மனைவியிடம், ஏன் எனது உறவினரிடம் அடிக்கடி பேசுகிறாய்? என்று கூறி மீண்டும் தகராறில் ஈடுபட்டார். இதனால் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் கோபமடைந்த தங்கம் மனைவியை அடித்தார். இந்த சம்பவம் குடும்பத்தில் மேலும் பதற்றத்தை உருவாக்கியது.

அம்மிக்கல்லால் தாக்கி கொலை

இதையடுத்து அவர் வீட்டிலேயே படுத்து தூங்கினார். குழந்தைகளும் தூங்கிவிட்டனர். கணவரின் கொடுமை தாங்க முடியாமல் மிகுந்த மனவேதனையில் இருந்த பத்மா, ஆத்திரத்தில் அங்கு கிடந்த அம்மிக்கல்லை எடுத்து தூங்கி கொண்டிருந்த கணவரின் தலையில் ஓங்கி போட்டார். இதில் படுகாயம் அவர் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே இறந்தார். இந்த திடீர் சம்பவம் அந்த குடும்பத்தையும், அப்பகுதியையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

போலீஸ் நடவடிக்கை

இந்த கொலை குறித்து தகவல் கிடைத்ததும் அம்மாபேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, தங்கத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பத்மாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குடும்ப வன்முறை எவ்வளவு தீவிரமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதற்கான எடுத்துக்காட்டாக இந்த சம்பவம் பார்க்கப்படுகிறது.

Follow Us