AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

அம்பேத்கர் அயலகக் கல்வி உதவித்தொகை விவகாரம்.. பேரவையில் அமைச்சர் வன்னியரசு VS கோவி. செழியன் காரசார விவாதம்!!

Ambedkar Overseas Scholarship: மலேசியாவில் படிக்கும் ஆராய்ச்சி மாணவருக்கு அம்பேத்கர் அயலகக் கல்வி உதவித்தொகை வழங்கப்படவில்லை என்ற செய்திக்குச் சட்டமன்றத்தில் அமைச்சர் விளக்கம் அளித்தார். இதுவரை அம்மாணவருக்கு ரூ.48.22 லட்சம் நிதி விடுவிக்கப்பட்டுள்ளது என்றும், உரிய ஆவணங்களைச் சமர்ப்பிக்காமல் தவறான தகவல்கள் பரப்பப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

அம்பேத்கர் அயலகக் கல்வி உதவித்தொகை விவகாரம்.. பேரவையில் அமைச்சர் வன்னியரசு VS கோவி. செழியன் காரசார விவாதம்!!
அமைச்சர் வன்னியரசு, கோவி.செழியன்
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 20 Aug 2026 12:05 PM IST

சென்னை, ஆகஸ்ட் 20: தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைக் கூட்டத்தொடரில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கான உயர்கல்வி உதவித்தொகை தொடர்பான விவாதங்கள் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளன. குறிப்பாக, வெளிநாடுகளில் பயிலும் மாணவர்களுக்கு அண்ணல் அம்பேத்கர் அயலகக் கல்வி உதவித்தொகைத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நிதியுதவி குறித்து திமுக உறுப்பினர் கோவி. செழியன் சந்தேகங்கள் எழுப்பியதோடு,  பல்வேறு குற்றச்சாட்டுகளையும் முன்வைத்தார். இதற்கு சட்டமன்றத்தில் அரசு தரப்பில் இருந்து மிகத் தெளிவான, விரிவான விளக்கங்களை அமைச்சர் வன்னிஅரசு அளித்துள்ளார்.

இதையும் படிக்க: “சொந்தமாகக் கார் இல்லை.. ஆட்டோவில் தான் வர்றேன்!”.. சட்டப்பேரவையில் கோரிக்கை விடுத்த MLAக்கள்.. தேர்தல் பிரமாணப் பத்திரத்தால் வெளியான உண்மை!

சமூக வலைதளங்களில் பரவிய தகவல்:

மலேசியாவில் உள்ள நேஷனல் யுனிவர்சிட்டி ஆஃப் மலேசியாவில் பிஹெச்டி இரண்டாம் ஆண்டு ஆராய்ச்சிப் படிப்பு பயின்று வரும் பாரதிதாசன் என்ற மாணவருக்கு, அண்ணல் அம்பேத்கர் அயலகக் கல்வி உதவித்தொகைத் திட்டத்தின் கீழ் உதவித்தொகை கிடைக்கவில்லை என்று சமூக வலைதளங்களிலும் ஊடகங்களிலும் தகவல்கள் பரவின. இச்சம்பவம் தொடர்பாகச் சட்டமன்றத்தில் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவரப்பட்ட நிலையில், அதற்குப் பதிலளித்துப் பேசிய சமூக நீதித் துறை அமைச்சர், ஊடகங்களில் வெளியானது முற்றிலும் தவறான மற்றும் அரசியல் உள்நோக்கம் கொண்ட செய்தி என்று மறுத்தார்.

தங்கு தடையின்றி விடுவிக்கப்பட்ட நிதியுதவிகள்:

சம்பந்தப்பட்ட மாணவர் பாரதிதாசனுக்குத் திட்டம் தொடங்கப்பட்ட காலத்தில் இருந்தே நிதியுதவிகள் தங்குதடையின்றி விடுவிக்கப்பட்டு வந்துள்ளன. அம்மாணவரின் முதல் ஆண்டு படிப்பிற்கு ஆண்டுக்கான கல்விக்கட்டணம் போக, மீதமுள்ள தொகையும் வாழ்க்கை மற்றும் ஆராய்ச்சிக்கான செலவினங்களுக்காக அரசு சார்பாக வழங்கப்பட்டது. ஆனால், பெறப்பட்ட தொகைக்கான உரிய பயனீட்டு ஆவணங்களை (Utilization Certificates) கடந்த 10 மாதங்களாகச் சமர்ப்பிக்காமல், மாணவர் மீண்டும் இரண்டாம் ஆண்டுக்கான 36 லட்ச ரூபாயைக் கோரி வருவதாகவும் அமைச்சர் பேரவையில் தெரிவித்தார்.

தவறான கருத்துக்களைப் பரப்புவது ஏற்புடையதல்ல:

இருப்பினும், மாணவரின் உயர்கல்வி மற்றும் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு, அவர் பயிலும் பல்கலைக்கழகத்திற்கான முழு கல்விக் கட்டணமான ரூ. 5.57 லட்சம் மற்றும் வாழ்க்கைச் செலவினங்களுக்கான ரூ. 6.65 லட்சம் உட்பட மொத்தம் ரூ. 12 லட்சத்திற்கும் அதிகமான நிதியை அரசு உடனடியாக விடுவித்துள்ளது. இதையும் சேர்த்து, இதுவரை அம்மாணவரின் கணக்கிற்குப் பல்வேறு கட்டங்களாக மொத்தம் ரூ. 48,22,097 (சுமார் 48.22 லட்சம் ரூபாய்) நிதி அரசால் நேரிடையாக வழங்கப்பட்டுள்ளது. சரியான ஆவணங்களைச் சமர்ப்பிக்காமல் தவறான கருத்துக்களைப் பரப்புவது ஏற்புடையதல்ல என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இதையும் படிக்க: தென்மாநில முதல்வர்கள் மாநாட்டைப் புறக்கணிக்கிறாரா புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி?.. ஆளுநருக்கு முன்னுரிமை அளித்ததால் சர்ச்சை!

இதற்கான நிதி ஒதுக்கீடு ரூ.131 கோடியாக உயர்வு:

தமிழ்நாடு அரசு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களின் அயலகக் கல்வியை ஊக்குவிப்பதில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது. கடந்த ஆண்டுகளில் 84 கோடி ரூபாயாக இருந்த இத்திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு, நடப்பு ஆண்டில் வரலாற்றுச் சாதனையாக 131 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் சுமார் 1,362 மாணவர்கள் வெளிநாடுகளுக்குச் சென்று உயர்கல்வி பயிலும் வாய்ப்பைப் பெற்றுள்ளனர். மேலும், வெளிநாடுகளுக்குச் செல்லும் மாணவர்களுக்கு விசா பெறுவதில் நிலவும் சிக்கல்களைத் தீர்க்க ஒன்றிய அரசுக்கும் தொடர்புடைய வெளிநாட்டுத் தூதரகங்களுக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் கடிதம் எழுதி நடவடிக்கை எடுத்து வருவதாகவும் பேரவையில் தெரிவிக்கப்பட்டது.

Follow Us