தமிழகத்தில் வெளுக்கும் கனமழை.. 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்.. வானிலை அப்டேட்!
Tamil Nadu Weather Update : தமிழகத்தில் அடுத்த இரு தினங்களுக்கு கனமழை தொடரும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, 2025 ஆகஸ்ட் 8ஆம் தேதியான இன்று திருப்பத்தூர், திருவண்ணாமலை, வேலூர் ஆகிய மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மழை
சென்னை, ஆகஸ்ட் 08 : தமிழகத்தில் 2025 ஆகஸ்ட் 8ஆம் தேதியான இன்று மூன்று மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அதாவது, திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை (Tamil Nadu Weather) பெய்யக் கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தற்பொழுது தீவிரமடைந்துள்ளது. தமிழகத்தில் ஜூலை மாதம் முழுவதும் வெயில் வதைத்த நிலையில், மாதத்தின் கடைசியில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்ய தொடங்கி உள்ளது. முன்னதாக மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மட்டும் பலத்த மழை பெய்து வந்தது. இந்த நிலையில் தற்போது கொங்கு, தென் மாவட்டங்கள், வட மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் அடுத்த சில தினங்களுக்கான வானிலை நிலவரத்தை இங்கு பார்ப்போம்.
3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்
தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் வளிமண்டல கீழ் எடுக்க சுழற்சி நிலவுகிறது மேலும், தென்னிந்திய பகுதியில் மேல் ஒரு வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக அடுத்த சில தினங்களுக்கு கனமழை தொடரும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, 2025 ஆகஸ்ட் 8 ஆம் தேதியான இன்று ஒரு சில மாவட்டங்களில் மிதமான மழையும், சில மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது. குறிப்பாக திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
Also Read : ரெட் அலர்ட் எச்சரிக்கை.. நீலகிரியில் அனைத்து சுற்றுலா தலங்களும் மூடல்..
மேலும் நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், கடலூர் , விழுப்புரம், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மாவட்டங்களில் கன மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து 2025 ஆகஸ்ட் 9 ஆம் தேதியான நாளை தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னையில் எப்படி?
RDWRhttps://t.co/jW8fHWgFaz pic.twitter.com/vVQSKaKrs9
— IMD-Tamilnadu Weather (@ChennaiRmc) August 7, 2025
அதன் பிறகு, 2025 ஆகஸ்ட் 10ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொருத்தவரை, 2025 ஆகஸ்ட் 8ஆம் தேதி இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
Also Read : நீலகிரிக்கு ரெட் அலர்ட்.. பள்ளிகளுக்கு விடுமுறை.. சுற்றுலா தலங்கள் மூடல்..
நகரின் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி முதல் 35 டிகிரி செல்சியஸை ஒட்டியும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 முதல் 27 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக் கூடும் என கூறப்பட்டுள்ளது.