Tamil Nadu Rains : தமிழகத்தில் வெளுத்து வாங்கும் கனமழை.. நீலகிரி, கோவைக்கு ஆரஞ்சு அலர்ட்.. வானிலை அப்டேட்
Tamil Nadu Weather Update : தமிழகத்தில் 2025 ஆகஸ்ட் 11ஆம் தேதி முதல் கனமழை தொடரும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னையில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.





சென்னை, ஆகஸ்ட் 06 : தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை 2025 ஆகஸ்ட் 6ஆம் தேதியான இன்று கனமழை பெய்யக் கூடும் (Tamil Nadu Weather Alert) என வானிலை மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக்ததில் கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. குறிப்பாக, தென் மாவட்டங்கள், கொங்கு, மேற்கு தொடர்ச்சி மலையொட்டிய மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. அவ்வப்போது, சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்து வருகிறது. இருப்பினும், 2025ஆம் ஆண்டு தென்மேற்கு பருவமழை குறைவாகவே இருக்கிறது. மேலும், நீலகிரி, கோவை மாவட்டங்களில் இரு தினங்ளுக்கு அதி கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்த நிலையில், அடுத்த சில தினங்களுக்கான வானிலை நிலவரத்தை பார்ப்போம்.
அதன்படி, தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. தெற்கு கேரளா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, 2025 ஆகஸ்ட் 6ஆம் தேதி முதல் 11ஆம் தேதி தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக் கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும், 2025 ஆகஸ்ட் 6ஆம் தேதி முதல் நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக் கூடும்.
Also Read : அடுத்த 2 நாட்களுக்கு நீலகிரி, கோவைக்கு ரெட் அலர்ட்.. பிற மாவட்டங்களில் எப்படி?
நீலகிரி, கோவைக்கு ஆரஞ்சு அலர்ட்
DAILY WEATHER REPORT pic.twitter.com/DfBOcDfIla
— IMD-Tamilnadu Weather (@ChennaiRmc) August 5, 2025
தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. 2025 ஆகஸ்ட் 7ஆம் தேதி கோவை, நீலகிரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தருமபுரி, விழுப்புரம் ஆகிய மாவட்டஙகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
Also Read : நீலகிரிக்கு ரெட் அலர்ட்.. பள்ளிகளுக்கு விடுமுறை.. சுற்றுலா தலங்கள் மூடல்..
சென்னையை பொறுத்தவரை, 2025 ஆகஸ்ட் 6ஆம் தேதியான இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் இருக்கும் எனவும் நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக் கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. 2025 ஆகஸ்ட் 6ஆம் தேதி முதல் 8ஆம் 9ஆம் தேதி வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அரபிக் கடல், தமிழக கடலோர பகுதிகள், வங்கக் கடல் பகுதிகளில் மணிக்கு 50 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் காற்று வீசக்கூடும் என்பதால்,மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.