Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

டெல்டா டூ வட மாவட்டங்கள்.. கொட்டப்போகும் கனமழை.. சென்னையில் எப்படி?

Tamil Nadu Weather Update : தமிழகத்தில் அடுத்த சில தினங்களுக்கு டெல்டா மாவட்டங்கள் மற்றும் வட மாவட்டங்களில் கனமழை பெய்யக் கூடும். இதுவரை, தென்மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலையொட்டி பகுதிகளில் கனமழை பெய்து வந்தது. இந்த நிலையில், அடுத்த நான்கு நாட்களுக்கு தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.

டெல்டா டூ வட மாவட்டங்கள்.. கொட்டப்போகும் கனமழை.. சென்னையில் எப்படி?
மழைImage Source: PTI
Umabarkavi K
Umabarkavi K | Published: 01 Aug 2025 06:10 AM

சென்னை, ஆகஸ்ட் 01 : தமிழகத்தில் அடுத்த சில தினங்களுக்கு டெல்டா மற்றும் வட மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு (Tamil Nadu Weather) இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் மிதமான மழை (Chennai Weather) பெய்யக் கூடும் ன தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த ஒரு மாதமாக மழை பெய்து வருகிறது. இரண்டு மாதங்களாக கேரளா, கர்நாடகாவில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், கேரள – தமிழக எல்லையோர மாவட்டங்கள், நீலகிரி, தென்காசி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. சென்னையை பொறுத்தவரை, அவ்வப்போது மழை பெய்து வருகிறது. பகல் நேரங்களில் வெயில் அடித்தும், மாலை மற்றும் இரவில் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், அடுத்த சில தினங்களுக்கான வானிலை நிலவரத்தை பார்ப்போம்.

அதன்படி, மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழத்தில் 2025 ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் 5ஆம் தேதி வரை மிதமான மழை பெய்யக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, 2025 ஆகஸ்ட் 2ஆம் தேதி தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்களில் கனமழை பெய்யக் கூடும். தொடர்ந்து, 2025 ஆகஸ்ட் 3ஆம் தேதி தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.

Also Read : தீவிரமாகும் பருவழை.. அடுத்த 4 நாட்களுக்கு வெளுக்கும் கனமழை.. எந்தெந்த மாவட்டங்கள்?

கொட்டப்போகும் கனமழை


2025 ஆகஸ்ட் 4,5ஆம் தேதிகளில் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் , அரியலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் கனமழை வெளுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தமழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை இருக்கக் கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மேலும், தென்தமிழகம், கடலோர மாவட்டங்கள், வட மாவட்டங்களில் அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் இருப்பதால், அசௌகரியம் ஏற்படலாம் என கூறப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை, 2025 ஆகஸ்ட் 1ஆம் தேதியான இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், நகரின் ஒருசில பகுதிகளில் மிதமான மழை பெய்யக் கூடும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Also Read : தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு கொட்டப்போகும் மழை.. சென்னையில் எப்படி இருக்கும்? வானிலை அப்டேட்

கடந்த சில தினங்களாகவே, மேற்கு தொடர்ச்சி மலையொட்டி மாவட்டங்கள், தென் மாவட்டங்களில் மழை பெய்து வந்த நிலையில், தற்போது டெல்டாவில் மழை பெய்ய உள்ளது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.