Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

மே மாத ஊதியத்துடன் அகவிலைப்படி உயர்வும் வழங்கப்படும்.. தமிழ்நாடு அரசு அறிவிப்பு!

Tamil Nadu Government Announced 4 Months DA Arrears | 2025 மார்ச் மாதத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு அரசு அகவிலைப்படி உயர்வை அறிவித்தது. இருப்பினும் ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கப்படாமலே உள்ளது. இந்த நிலையில், 2025 மே மாத ஊதியத்துடன் நிலுவை அகவிலைப்படி தொகையும் வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.

மே மாத ஊதியத்துடன் அகவிலைப்படி உயர்வும் வழங்கப்படும்.. தமிழ்நாடு அரசு அறிவிப்பு!
மாதிரி புகைப்படம்
vinalin-sweety
Vinalin Sweety | Published: 16 May 2025 20:08 PM

சென்னை, மே 16 : தமிழ்நாடு அரசு ஊழியர்கள் (Tamil Nadu Government Employees) மற்றும் ஓய்வூதியர்களுக்கு 2025 மே மாத ஊதியத்துடன் 4 மாத அகவிலைப்படி (DA – Dearness Allowance) சேர்த்து வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு (Tamil Nadu Government) அறிவித்துள்ளது. தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு மார்ச், 2025-ல் ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்ட நிலையில், ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான அகவிலைப்படி உயர்வை சேர்த்து இந்த மாத ஊதியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், அகவிலைப்படி உயர்வு குறித்து அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பு என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

ஆண்டுக்கு இரண்டுமுறை உயர்த்தப்படும்  அகவிலைப்படி உயர்வு

இந்தியாவில் பணியாற்றும் மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களுக்கு ஆண்டுக்கு இரண்டு முறை அகவிலைப்படி உயர்த்தப்படும். அதாவது, 6 மாதங்களுக்கு ஒருமுறை என ஆண்டுக்கு இரண்டு முறை அகவிலைப்படி உயர்த்தப்படுகிறது. ஆண்டின் முதல் அகவிலைப்படி ஜனவரி மாதத்திலும், ஆண்டில் இரண்டாவது முறை ஜூன் மாதத்திலும் அகவிலைப்படி உயர்த்தப்படும். மத்திய அரசு ஊழியர்களுக்கு மத்திய அரசும், மாநில அரசு ஊழியர்களுக்கு மாநில அரசும் அகவிலைப்படி உயர்வை அறிவிக்கும்.

அதன்படி, தமிழக அரசு ஊழியர்களுக்கு 2025 ஆம் ஆண்டுக்கான முதல் அகவிலைப்படி உயர்வு மார்ச் மாதம் அறிவிக்கப்பட்டது. தமிழ்நாடு சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அரசு ஊழியர்களுக்கு 2 சதவீதம் அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும் என அறிவித்தார். ஆனால், அகவிலைப்படி உயர்வு செயல்படுத்தப்படாமல் உள்ளது. இந்த நிலையில், அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

மே மாத ஊதியத்துடன் சேர்த்து வழங்கப்படும் அகவிலைப்படி உயர்வு

தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு மார்ச் 2025-ல் அறிவிக்கப்பட்ட நிலையில், அது தற்போது வரை செயல்படுத்தப்படாமல் உள்ளது. இந்த நிலையில், 4 மாதங்களாக நிலுவையில் வைக்கப்பட்டுள்ள அகவிலைப்படி உயர்வு தொகை 2025, மே மாத ஊதியத்துடன் மற்றும் ஓய்வூதியத்துடன் சேர்த்து வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தபடி 2 சதவீத அகவிலைப்படி உயர்வு மாத ஊதியத்துடன் சேர்த்து வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

6 மாதங்களில் ஈஸியா எடை குறைக்கலாம் - பின்பற்ற வேண்டிய 7 டிப்ஸ்
6 மாதங்களில் ஈஸியா எடை குறைக்கலாம் - பின்பற்ற வேண்டிய 7 டிப்ஸ்...
கோழி ஈரலில் இவ்வளவு நன்மைகளா? தினமும் எடுத்துக்கொள்ளலாமா?
கோழி ஈரலில் இவ்வளவு நன்மைகளா? தினமும் எடுத்துக்கொள்ளலாமா?...
ஏசி வெடிப்பதற்கான காரணம் இதுவா? இந்த தப்பை மட்டும் பண்ணாதீங்க!
ஏசி வெடிப்பதற்கான காரணம் இதுவா? இந்த தப்பை மட்டும் பண்ணாதீங்க!...
10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு - ஒரே மதிப்பெண் எடுத்த இரட்டையர்கள்!
10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு - ஒரே மதிப்பெண் எடுத்த இரட்டையர்கள்!...
இரத்த சோகையால் ஏற்படும் பாதிப்புகள்! இயற்கையாக சரிசெய்வது எப்படி?
இரத்த சோகையால் ஏற்படும் பாதிப்புகள்! இயற்கையாக சரிசெய்வது எப்படி?...
டாஸ்மாக் இயக்குனர் விசாகனிடம் நடைபெற்ற விசாரணை நிறைவு!
டாஸ்மாக் இயக்குனர் விசாகனிடம் நடைபெற்ற விசாரணை நிறைவு!...
வீடியோவுக்கு இளைஞர் செய்த செயல்.. துணிச்சலாகப் பேசிய இளம் பெண்!
வீடியோவுக்கு இளைஞர் செய்த செயல்.. துணிச்சலாகப் பேசிய இளம் பெண்!...
மோகன்லாலை போல யாராலும் அதைச் செய்யமுடியாது.. நடிகர் எஸ்.ஜே.சூர்யா
மோகன்லாலை போல யாராலும் அதைச் செய்யமுடியாது.. நடிகர் எஸ்.ஜே.சூர்யா...
விஜய்யுடன் இணைந்து நடிப்பீர்களா? நடிகர் அஜித் மாஸ் பதில்!
விஜய்யுடன் இணைந்து நடிப்பீர்களா? நடிகர் அஜித் மாஸ் பதில்!...
PPF Scheme: மூத்த குடிமக்கள் மாதம் ரூ.40,000 வரை வருமானம் பெறலாம்
PPF Scheme: மூத்த குடிமக்கள் மாதம் ரூ.40,000 வரை வருமானம் பெறலாம்...
யூடியூபில் Humming மற்றும் whistle செய்து பாடல்களை தேடலாம்!
யூடியூபில் Humming மற்றும் whistle செய்து பாடல்களை தேடலாம்!...