பெரம்பலூர்: செல்போன் பயன்படுத்துவியா? கேள்வி கேட்ட தாயை கொலை செய்த மகன்..
Son Kills Mother Over Phone Use: பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையைச் சேர்ந்த மாமலைவாசன் தனது தாயை செல்போன் பயன்பாடு குறித்த தகராறில் கழுத்தை நெரித்து கொலை செய்தார். இதேபோல், உடுமலையிலும் மகன் தாயைக் கொலை செய்த சம்பவம் நடந்துள்ளது. இரு சம்பவங்களிலும், மகன்கள் தாயை கண்டித்ததால் ஏற்பட்ட தகராறே கொலைக்குக் காரணம் என போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

தாயை கொன்ற மகன் கைது
பெரம்பலூர் ஜூன் 22: பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை சேர்ந்த மாமலைவாசன், தனது தாய் சுகுணாவை கழுத்தை நெரித்து கொலை செய்தார். வேலைக்குச் செல்லாமல் செல்போனில் இருப்பதை கண்டித்த தாயுடன் ஏற்பட்ட தகராறில் இந்த கொலை நடந்தது. சுகுணா உடல்நலக் குறைவால் இறந்ததாகக் கூறி உடலை அடக்கம் செய்தனர். போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டதால் விசாரணை நடத்தினர். தாயை கொன்றதை மாமலைவாசன் ஒப்புக்கொண்டதால் கைது செய்யப்பட்டார். இதுபோன்று, உடுமலை அருகே மற்றொரு மகனும் தாயைக் கொன்று இயற்கை மரணமாக மேட்ச் செய்ய முயற்சி செய்த சம்பவமும் நடந்துள்ளது.
மகன் அதிகம் செல்போன் பயன்படுத்தியதை கண்டித்த தாய்
வேப்பந்தட்டை சேர்ந்த மாமலைவாசன் (23) ஒரு எலக்ட்ரிசியனாக வேலை செய்து வருகிறார். இவர் தனது தாய் சுகுணா (43) உடன் வசித்து வந்தார். கடந்த ஓராண்டிற்கு முன்பு தந்தை தாமரைக்கண்ணன் உயிரிழந்ததால், தாயும் மகனும் தனியாக வாழ்ந்து வந்துள்ளனர். சரியாக வேலைக்கு செல்லாமல், அதிக நேரம் செல்போனில் இயங்கி வந்த மகனை, சுகுணா அடிக்கடி கண்டித்ததால் தாயும் மகனும் இடையே தகராறுகள் ஏற்பட்டுள்ளன.
சுகுணாவின் கழுத்தில் ஏற்பட்ட காயம்: போலீசார் சந்தேகம்
இந்நிலையில், சுகுணாவின் கழுத்தில் ஏற்பட்ட காயங்களை கண்ட போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது. அரும்பாவூர் போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், மாமலைவாசன் தன்னை திட்டிய தாயை கோபத்தில் கழுத்து நெறித்ததாக ஒப்புக்கொண்டார். இதையடுத்து, போலீசார் அவரை கைது செய்து வழக்கு பதிவு செய்து மேலதிக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம், வேப்பந்தட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தாயை கொலை செய்த மகன் கைது
இந்த நிலையில், கடந்த 2025 ஜூன் 9ம் தேதி ஏற்பட்ட தகராறில், கோபமடைந்த மாமலைவாசன் தனது தாயின் கழுத்தை நெரித்து விட்டார். மயக்கம் அடைந்த சுகுணாவை அருகிலுள்ளவர்கள் பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு, சுகுணா ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் உறுதி செய்தனர். இதையடுத்து, உடல் நிலை பாதிக்கப்பட்டு இயற்கையாக இறந்ததாக கூறி, அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.
முந்தைய உடுமலை சம்பவம்
திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே உள்ள பள்ளபாளையம் கிராமத்தில் வள்ளியம்மாள் என்ற 70 வயது முதியவர், தனது மகன் செல்லமுத்து (51) உடன் வசித்து வந்தார். கடந்த 2025 ஜூன் 16ம் தேதி, தனது பேத்தி வீட்டில் இருந்து வீடு திரும்பிய வள்ளியம்மாள், பின்பு திடீரென உயிரிழந்ததாகக் கூறி, செல்லமுத்து இறுதிச்சடங்குகள் செய்தார். ஆனால், மரணத்தில் சந்தேகம் உள்ளதாக மகள் கலைச்செல்வி தளி போலீசில் புகார் அளித்ததால், பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது.
தாயை தாக்கி கொன்ற மகன் கைது
பரிசோதனையில், வள்ளியம்மாள் மார்பிலும் கழுத்திலும் காயங்கள் இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து விசாரித்தபோது, ‘உறவினர்கள் வீட்டுக்கு ஏன் அடிக்கடி செல்கிறாய்?’ என சண்டையிட்டு, தாயை தாக்கியதும், அதனால் அவர் உயிரிழந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, செல்லமுத்துவை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவமும் அந்த பகுதியில் பெரும் அதிர்வலை ஏற்படுத்தியுள்ளது.