9 லட்சம் குடும்பங்களுக்கு குழாய் மூலம் பிஎன்ஜி இயற்கை எரிவாயு – பிரதமர் மோடி அறிவிப்பு

PM Modi Launches Development Projects : திருச்சி பஞ்சப்பூரில் மார்ச் 11, 2026 அன்று நடைபெறும் அரசு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். பின்னர் சுமார் ரூ.5,655 கோடி மதிப்பில் மேம்பாட்டுத் திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

9 லட்சம் குடும்பங்களுக்கு குழாய் மூலம் பிஎன்ஜி இயற்கை எரிவாயு - பிரதமர் மோடி அறிவிப்பு

பிரதமர் நரேந்திர மோடி

Updated On: 

11 Mar 2026 18:17 PM

 IST

திருச்சி, மார்ச் 11 : திருச்சி பஞ்சப்பூரில் மார்ச் 11, 2026 அன்று நடைபெறும் அரசு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். அவருடன் தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, எதிர்கட்சி தலைவர் எடப்பாடி கே பழனிசாமி, மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிகழ்வில் பொருநை அருங்காட்சியக வடிவ கேடயத்தை பிரதமர் மோடிக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு வழங்கினார்.

ரயில் சேவை தொடங்கிவைப்பு

பின்னர் சுமார் ரூ.5,655 கோடி மதிப்பில் மேம்பாட்டுத் திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். நீலகிரி, ஈரோட்டில் ரூ.3,680 கோடி முதலீட்டில் எரிவாயு விநியோக வலையமைப்பு உள்ளிட்ட புதிய திட்டங்களுக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டினார். தமிழ்நாட்டுக்கான 5 புதிய ரயில் சேவைகளை நரேந்திர மோடி தொடங்கிவைத்தார். அதில், 2 அம்ரித் பாரத் விரைவு ரயில்கள், 2 விரைவு ரயில்கள், ஒரு பயணிகள் ரயில் சேவை உள்ளிட்டவற்றை கொடியசைத்து பிரதமர் மோடி தொடங்கிவைத்தார்.

இதையும் படிக்க : தொகுதிகள் குறைத்து கொடுத்தாலும் பரவாயில்லை – மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ..

9 லட்சம் குடும்பங்களுக்கு குழாய் மூலம் பிஎன்ஜி இயற்கை எரிவாயு

பின்னர் வணக்கம் என தமிழில் பேசி உரையைத் தொடங்கினார். அப்போது பேசிய அவர், அருமையான இந்த திருச்சி மாநகருக்கு வந்திருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் சிட்டி கேஸ் விநியோக வலையமைப்பு திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டிருப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இந்த திட்டத்திற்காக சுமார் ரூ.3,700 கோடி முதலீடு செய்யப்படவுள்ளது. இந்த வலையமைப்பு தமிழ்நாட்டின் நீலகிரி மற்றும் ஈரோடு மாவட்டங்களை உள்ளடக்கியதாக இருக்கும்.

இந்த திட்டத்தின் மூலம் சுமார் 9 லட்சம் குடும்பங்களுக்கு குழாய் மூலம் பிஎன்ஜி இயற்கை எரிவாயு வழங்கப்படும். மேலும் நூற்றுக்கணக்கான வணிக நிறுவனங்களும் இந்த வசதியைப் பெறும். இதன் மூலம் வீடுகளுக்கே நேரடியாக எரிவாயு கிடைக்கும் என்பதால் மக்களின் வாழ்வாதாரம் மேலும் எளிதாகும்.

இதையும் படிக்க : தேசிய ஜனநாயக கூட்டணியில் இணையும் த.வெ.க? இணை அமைச்சர் எல். முருகன் சொன்ன பதில்…

பிரதமர் மோடி பேசிய வீடியோ

 

மேலும் இந்த திட்டம் நடைமுறைக்கு வந்த பிறகு ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகள் நேரடியாகவும் மறைமுகமாகவும் உருவாகும் என்று பேசினார்.

Follow Us
Related Stories
கருத்துக்கணிப்புகள் பொய்யாகும்.. “விசில் புரட்சி வெடிக்கப்போகுது”.. செங்கோட்டையன் அதிரடி
தர்மபுரி காட்டில் பெண் சடலமாக மீட்பு: கள்ளக்காதல் விவகாரத்தில் அரங்கேறிய பயங்கரம்.. இருவர் அதிரடி கைது!
மே 4 வாக்கு எண்ணிக்கை.. தமிழகம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு.. தலைமைச் செயலாளர் அதிரடி உத்தரவு..
சூரிய அஸ்தமனமும் சந்திர உதயமும் சங்கமிக்கும் மாலை.. கன்னியாகுமரியில் நாளை நிகழும் அபூர்வ காட்சி.. மிஸ் பண்ணிடாதீங்க!
சித்ரா பௌர்ணமி கிரிவலம்.. திருவண்ணாமலையில் பக்தர்களுக்கு இலவச பேருந்து இயக்கம்!
கோடை விடுமுறை ஸ்பெஷல்.. சென்னையில் இருந்து சொந்த ஊர் செல்ல சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!!
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மனைவிக்காக பைக்கையே ஆம்புலன்ஸாக மாற்றிய கணவர் - நெகிழ்ச்சி சம்பவம்
560 நாட்களாக செல்போன் டவர் மீது ஏறி போராட்டம் நடத்திய விவசாயி
ஹிமாச்சல் பிரதேசத்தின் மலைப்பகுதிகளை பாதுகாக்கும் உள்ளூர் தெய்வம்..
காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்படும் நாடுகளில் இந்தியா 9வது இடம்..