மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500 ஆக உயர்வு…முதல்வர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு..குஷியில் பெண்கள்!
Magalir Urimai Thogai: புதுச்சேரி மாநிலத்தில் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள மகளிர் உரிமைத் தொகை ரூ.1000-த்தில் இருந்து ரூ.2,500- ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதே போல, முதியோர் உதவித் தொகை ரூ.500 உயர்த்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை முதல்வர் என். ரங்கசாமி தொடங்கி வைத்தார்.

புதுச்சேரியில் மகளிர் உரிமைத் தொகை உயர்வு
தமிழகத்தில் சுமார் ஒரு கோடிக்கும் அதிகமான குடும்பத் தலைவிகளுக்கு மாதம்தோறும் தமிழக அரசு ரூ.1000 கலைஞர் மகளிர் உரிமைத் தொகையை வழங்கி வருகிறது. கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்ற கழகம் அளித்த தேர்தல் வாக்குறுதியின் அடிப்படையில், இந்த உரிமை தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதை பின்பற்றி, புதுச்சேரி மாநிலத்தில் குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 உதவித் தொகையை முதல்வர் என். ரங்கசாமி அறிவித்து வழங்கி வந்தார். இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு புதுச்சேரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த முதல்வர் என். ரங்கசாமி குடும்ப தலைவிகளுக்கு உதவித்தொகை ரூ.2,500- ஆக உயர்த்தி வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார். அதன்படி, தற்போது புதுச்சேரி மாநிலத்தில் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள குடும்ப தலைவிகளுக்கு வழங்கப்பட்டு வந்த ரூ.1000 உதவித்தொகை ரூ.2,500- ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500 ஆக உயர்வு
இது தொடர்பாக புதுச்சேரி மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை சார்பில் முதியோர் மற்றும் ஆதரவற்றோர் ஓய்வூதிய திட்டம் மற்றும் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள குடும்ப தலைவிகளுக்கு உயர்த்தப்பட்ட உதவித்தொகை வழங்கும் விழா வில்லியனூர் பகுதியில் உள்ள திருக்காஞ்சி கங்கைவராக நதீஸ்வரர் கோவிலில் நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்ற முதல்வர் என். ரங்கசாமி மகளிர் உரிமைத் தொகை உயர்த்தப்பட்ட திட்டத்தை தொடங்கி வைத்தார். அதன்படி, புதுச்சேரி மாநிலத்தில் சிவப்பு குடும்ப அட்டைதாரர்கள் சுமார் 70 ஆயிரம் மகளிருக்கு மாதம் தோறும் ரூ.2,500 உதவித் தொகை வழங்கப்பட உள்ளது.
மேலும் படிக்க: வருமான வரித்துறைக்கு எதிராக விஜய் தொடர்ந்த வழக்கில் இன்று தீர்ப்பு.. சாதகமாக அமையுமா?
முதியோர் உதவித் தொகை ரூ.500 உயர்வு
இதே போல, புதுச்சேரி மாநிலத்தில் முதியோர் மற்றும் ஆதரவற்றவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் ஓய்வூதியம் ரூ.500 உயர்த்தப்பட்டுள்ளது. இதில், 55 வயது முதல் 59 வரை உள்ள முதியவர்களுக்கு மாதம்தோறும் ரூ.2000, 60 முதல் 29 வயது வரை உள்ள முதியவர்களுக்கு மாதம் தோறும் ரூ.2,500, 80 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கு மாதம் தோறும் ரூ.3,500 உதவித்தொகை வழங்கப்பட்டு வந்தது. தற்போது, இந்த தொகையில் ரூ.500 கூடுதலாக வழங்கப்பட உள்ளது.
சேதராப்பட்டில் புதிய ஐடி பார்க்
இந்த நிகழ்வில் முதல்வர் என்.ரங்கசாமி பேசுகையில், என்.ஆர். காங்கிரஸ் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கடந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தவுடன் முதியோர் உரிமை தொகை ரூ.500 உயர்த்துவதாக கையெழுத்து போட்டோம். அதன்படி, தற்போது முதியோர் உரிமைத் தொகை மற்றும் மகளிர் உரிமைத் தொகை உயர்த்தப்பட்டு வழங்கப்பட உள்ளது. இதேபோல சேதராப்பட்டு தொழிற்பேட்டை பகுதியில் புதிய ஐடி பார்க் மற்றும் தொழிற்சாலை கொண்டுவர முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
மேலும் படிக்க: புதுச்சேரியில் இருந்து மது கடத்தலுக்கு செக்..கலால் துறையின் பக்கா ஏற்பாடு..என்ன அது!