AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

எனது தம்பியை முதல்வராக பார்ப்பது சந்தோஷமாக இருந்தது.. முதல்வர் விஜய் எல்லாவற்றையும் சரி செய்வார் – நடிகை குஷ்பு நெகிழ்ச்சி

செய்தியாளர்களிடம் பேசிய நடிகை குஷ்பு, “தி.மு.க. ஆட்சியில் கடந்த ஐந்து ஆண்டுகளாக நாங்கள் பட்ட கஷ்டங்களை மறக்க முடியாது. ஐந்து ஆண்டுகளாக நடந்த பிரச்சினைகளை யாராலும் 10 நாட்களில் சரி செய்ய முடியாது. ஆனால், முதலமைச்சர் விஜய் இனிமேல் அதை சரிசெய்வார் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது” என்றார்.

எனது தம்பியை முதல்வராக பார்ப்பது சந்தோஷமாக இருந்தது.. முதல்வர் விஜய் எல்லாவற்றையும் சரி செய்வார் – நடிகை குஷ்பு நெகிழ்ச்சி
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 25 May 2026 22:29 PM IST

மே 25, 2026: “எனது தம்பியை முதலமைச்சராக பார்க்கும்போது மிகவும் சந்தோஷமாக இருந்தது” என நடிகை குஷ்பூ தெரிவித்துள்ளார். தமிழக முதலமைச்சராக விஜய் பதவியேற்றதைத் தொடர்ந்து, சினிமா வட்டாரங்களைச் சேர்ந்த பலரும் தொடர்ந்து தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜயை சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த சூழலில், சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கம் சார்பில் நடிகை குஷ்பூ இன்று முதலமைச்சர் விஜயை சந்தித்தார்.

எனது தம்பியை முதலமைச்சராக பார்ப்பது சந்தோஷமாக இருந்தது:

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “எனது தம்பியை முதலமைச்சராக பார்க்கும்போது மிகவும் சந்தோஷமாக இருந்தது. எங்கள் தயாரிப்பாளர்களுக்கு தேவையான உதவிகளை செய்யுமாறு பல கோரிக்கைகளை முன்வைத்துள்ளோம்” என தெரிவித்தார்.

மேலும் படிக்க: காதலிக்க மறுத்த பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு தாக்குதல்.. கோவையில் பகீர் சம்பவம்!

மேலும் பேசிய அவர், “தி.மு.க. ஆட்சியில் கடந்த ஐந்து ஆண்டுகளாக நாங்கள் பட்ட கஷ்டங்களை மறக்க முடியாது. ஐந்து ஆண்டுகளாக நடந்த பிரச்சினைகளை யாராலும் 10 நாட்களில் சரி செய்ய முடியாது. ஆனால், முதலமைச்சர் விஜய் இனிமேல் அதை சரிசெய்வார் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது” என்றார்.

மீண்டும் அண்ணாமலை கட்சி தலைவராக வேண்டுமா?

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பாஜகவிற்கு ஒரு இடம் மட்டுமே கிடைத்தது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டபோது, “இன்னும் அதிகமாக உழைப்பதற்கான வாய்ப்பை மக்கள் எங்களுக்கு வழங்கியுள்ளனர் என்ற பாசிட்டிவான மனநிலையில்தான் இதை பார்க்கிறோம்” என கூறினார்.

மேலும் படிக்க: குதிரை வேகத்தில் நடக்கும் ‘குதிரை பேரம் – திமுக தலைவர் மு.க ஸ்டாலின் விமர்சனம்..

அதேபோல், மேற்கு வங்க தேர்தல் குறித்து பேசிய அவர், “அங்கு இதுபோன்ற வெற்றியை யாரும் பார்த்தது கிடையாது. எங்கள் பிரதமர் மோடிக்கு எதிராக பேசுபவர்கள், அவர்கள் இரண்டு இடங்கள் மட்டுமே பெற்றுள்ளார்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்” என்றார்.

மேலும், “பாஜக தலைமையில் மாற்றம் செய்து மீண்டும் அண்ணாமலையை நியமிக்க வேண்டுமா?” என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், “அது குறித்து கட்சியின் மேலிடம் தான் முடிவு எடுக்கும்” என தெரிவித்தார்.

Follow Us