மகளிர் உரிமைத் தொகை: புதிய பயனாளர்களுக்கு எப்போது பணம் கிடைக்கும்?
Kalaignar Magalir Urimai Scheme Expansion: தமிழக அரசின் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் 2025 ஜூன் மாத இறுதிக்குள் விரிவாக்கம் பெற உள்ளது. 10-15 லட்சம் புதிய பயனாளிகள் சேர்க்கப்பட உள்ளனர். அரசு வீடுகளில் வசிப்பவர்கள் மற்றும் புதிய ரேஷன் கார்டு பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் தகுதியுள்ளவர்களுக்கு மட்டுமே ரூ.1000 வழங்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

தமிழ்நாடு ஜூன் 15: தமிழக அரசு மகளிர் உரிமை தொகை (Kalaignar Magalir Urimai Scheme) திட்டத்தை விரிவாக்கி, புதிய பயனாளிகளை 2025 ஜூன் மாத (June Month End) இறுதியில் சேர்க்க திட்டமிட்டுள்ளது. விரிவாக்க பணிகள் 7-10 நாட்களில் தொடங்கி, புதிய பயனாளிகளுக்கான தொகை 2025 ஆகஸ்ட் 15ம் தேதி வழங்கப்படும் எனவும் தகவல் வெளியாகி உள்ளது. அரசின் வீடுகளில் வசிப்பவர்களும், புதிய ரேஷன் கார்டு (Ration Card) பெற்றவர்களும் இப்போது விண்ணப்பிக்கலாம். மொத்தம் 10-15 லட்சம் பெண்கள் கூடுதலாக சேர்க்கப்பட உள்ளனர். மாநிலம் முழுவதும் 9000 கேம்புகள் அமைக்கப்பட உள்ளன. தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கே ரூ.1000 தொகை வழங்கப்படும் என்றும், தகுதி இல்லாதவர்கள் நீக்கப்படுவார்கள் என்றும் அரசு (Tamilnadu) தெரிவித்துள்ளது.
மகளிர் உரிமைத் தொகை திட்டம்: யார் யார் விண்ணப்பிக்கலாம்?
ஜீ நியூஸ் வெளியிட்ட தகவலின் படி, அரசு திட்டங்களின் கீழ் வீடு பெற்றவர்கள், அது அரசு ஊழியர்களுக்கான குடியிருப்பாக இல்லாத பட்சத்தில், இந்தத் திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம். இதுவே இந்த முறை புதிய மாற்றமாகும். மேலும், இந்த முறை புதிய ரேஷன் கார்டு பெற்றவர்களுக்கும் திட்டத்தில் இணையும் வாய்ப்பு வழங்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது. கடந்த முறை, பலரது விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டது. ஆனால் தற்போது அந்த முடிவில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
புதிய கேம்புகள் – புதிய பயனாளிகள்
முன்னதாக 2025 ஜூன் 4ம் தேதி புதிய பயனாளிகள் சேர்ப்பு திட்டமிடப்பட்டிருந்த போதும், நடைமுறை படுத்தப்படவில்லை. விரைவில் மொத்தமாக 9000 இடங்களில் கேம்புகள் அமைக்கப்பட உள்ளன. தற்போது, தமிழகத்தில் 1.25 கோடி பெண்கள் இந்த திட்டத்தின் கீழ் பயன் பெற்றுவர, விரைவில் மேலும் 10 – 15 லட்சம் பெண்கள் புதிய பயனாளிகளாக சேர்க்கப்பட உள்ளனர். இதன் மூலம் மொத்த பயனாளிகள் எண்ணிக்கை 1.45 கோடியாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.




தளர்வுகள் மற்றும் தகுதி நடைமுறை
2025 ஜூன் மாத விரிவாக்கத்துடன் கூடுதல் தளர்வுகள் வழங்கப்படும் என கூறப்படுகிறது. தற்போதுள்ள சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என்றும், அடுத்த சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு இவை அமலாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தகுதி வழிகாட்டுதல்
இந்த திட்டத்தில் குடும்ப தலைவி அல்லாத 21 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் தகுதியுடன் இருக்கின்றார்கள். வீட்டில் தாயார் உயிருடன் இல்லாத நிலையில், 21 வயதான முதல் பெண்ணுக்கு பணம் வழங்கப்படும். மேலும், விவாகரத்து பெற்ற பெண்கள் தனி ரேஷன் கார்டு வைத்திருந்தால், அவர்கள் இந்த திட்டத்தில் தக்கவர்களாக கருதப்படுவர். கடந்த முறை ஆவண குறைபாடுகள் காரணமாக நிராகரிக்கப்பட்ட பெண்கள் மீண்டும் விண்ணப்பிக்கலாம் எனவும் அரசு தெரிவித்துள்ளது.
புதிய பயனாளர்களுக்கு எப்போது பணம் கிடைக்கும்?
தமிழக அரசு வழங்கும் ‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை’ திட்டத்தின் விரிவாக்கத்திற்கான முதல் கட்ட பணிகள் நடைபெற்று வருவதாக அரசு அறிவித்துள்ளது. இதன் கீழ், புதிய பயனாளிகள் திட்டத்தில் இணைக்கப்பட உள்ளனர். விரிவாக்க நடவடிக்கைகள் 2025 ஜூன் மாதம் இறுதிக்குள் தொடங்கப்பட உள்ளது. இதையடுத்து, புதிய பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கான ஓடிபி சோதனை நடைபெறும். எல்லா பணிகளும் முடிந்த பிறகு, 2025 ஆகஸ்ட் 15ம் தேதி முதல் ரூ.1000 தொகை வழங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
மொத்தமாக, மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் விரிவாக்கம் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. ஆனால், இது ரேஷன் கார்டு உள்ள அனைவருக்கும் கிடைக்கும் என பொருள் அல்ல. தகுதியுள்ள விண்ணப்பதாரர்களே தேர்வு செய்யப்படுவார்கள். தகுதி இல்லாதவர்களுக்கு திட்டத் தொகை வழங்கப்படாது எனவும் அரசு வலியுறுத்தியுள்ளது.