AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தலைமை செயலகத்திற்கு வரும் போதே மதிய சாப்பாடை எடுத்து வரும் முதல்வர் விஜய்.. வியப்பில் அதிகாரிகள்..

காலையில் வீட்டிலிருந்து வரும்போதே மதிய உணவையும் எடுத்துக்கொண்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தலைமைச் செயலகத்தில் அரசு அதிகாரிகள் உணவருந்துவது போலவே, முதலமைச்சர் விஜயும் தனது அறையிலேயே மதிய உணவை சாப்பிடுவதாக கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து, துறைவாரியான அதிகாரிகளுடன் ஆலோசனைகளை மேற்கொண்டு, மாலை 5 மணிக்குப் பிறகே வீடு திரும்புவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தலைமை செயலகத்திற்கு வரும் போதே மதிய சாப்பாடை எடுத்து வரும் முதல்வர் விஜய்.. வியப்பில் அதிகாரிகள்..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Updated On: 15 May 2026 21:51 PM IST

மே 15, 2026: தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சராக விஜய், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் மே 10ஆம் தேதி பொறுப்பேற்றுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து, தலைமைச் செயலகத்திற்கு தொடர்ந்து வருகை தந்து பல்வேறு ஆலோசனைகளில் ஈடுபட்டு வருகிறார். மே 11, 12 மற்றும் 13 ஆகிய மூன்று நாட்களில் சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் நடைபெற்றது. அதில் முக்கியமாக மே 13ஆம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் கொண்டு வந்த நம்பிக்கை தீர்மானத்தை சபாநாயகர் தலைமையில் வாக்கெடுப்புக்கு எடுத்தனர்.

அதில் 144 சட்டமன்ற உறுப்பினர்கள் அவருக்கு ஆதரவு தெரிவித்தனர். 22 பேர் எதிராக வாக்களித்தனர். மேலும், 5 பேர் நடுநிலை வகித்தனர். இந்த நம்பிக்கை தீர்மானம் நிறைவேற குறைந்தபட்சம் 118 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்பட்ட நிலையில், 144 உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்ததால் முதலமைச்சர் விஜய் கொண்டு வந்த தீர்மானம் வெற்றி பெற்றதாக சபாநாயகர் அறிவித்தார்.

அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளும் முதல்வர் விஜய்:

அதனைத் தொடர்ந்து, தலைமைச் செயலகத்திற்கு தொடர்ந்து வருகை தந்து அரசு அதிகாரிகளுடன் ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறார்.

இந்த சூழலில், தமிழகத்தில் தொழில் வளர்ச்சியை மேம்படுத்தவும், புதிய முதலீடுகளை ஈர்க்கவும் முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு தீவிர நடவடிக்கைகளை தொடங்கியுள்ளது. அதன் ஒரு பகுதியாக, சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் முக்கிய நிறுவனங்களின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். வாகன உற்பத்தித் துறையில் முன்னணியில் உள்ள TVS Motor Company மற்றும் சர்வதேச நிறுவனமான BMW உள்ளிட்ட பல நிறுவனங்களின் நிர்வாக அதிகாரிகள் இதில் கலந்துகொண்டு கருத்துகளை பகிர்ந்துகொண்டனர்.

இதுபோல், தினமும் தமிழ்நாடு முதலமைச்சர் தலைமைச் செயலகத்திற்கு வருகை தந்து தனது நிர்வாகப் பணிகளை மேற்கொண்டு வருகிறார்.

மதிய சாப்பாடை வீட்டில் இருந்து எடுத்து வரும் முதல்வர் விஜய்:

இதில் ஆச்சரியப்பட வைக்கும் விஷயம் என்னவென்றால், காலை 9.30 மணிக்கே தலைமைச் செயலகத்திற்கு வருகை தரும் அவர், தொடர்ந்து பணிகளில் ஈடுபட்டு வருகிறார். மேலும், மதிய உணவையும் வீட்டிலிருந்தே கொண்டு வருவதாக கூறப்பட்டுள்ளது.

காலையில் வீட்டிலிருந்து வரும்போதே மதிய உணவையும் எடுத்துக்கொண்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தலைமைச் செயலகத்தில் அரசு அதிகாரிகள் உணவருந்துவது போலவே, முதலமைச்சர் விஜயும் தனது அறையிலேயே மதிய உணவை சாப்பிடுவதாக கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து, துறைவாரியான அதிகாரிகளுடன் ஆலோசனைகளை மேற்கொண்டு, மாலை 5 மணிக்குப் பிறகே வீடு திரும்புவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இதற்கு முன்பு ஆட்சி செய்த பல முதலமைச்சர்கள் மதிய உணவுக்காக வீட்டிற்கு சென்று உணவருந்துவது வழக்கமாக இருந்த நிலையில், புதிய முதலமைச்சர் விஜய் தலைமைச் செயலகத்திலேயே உணவருந்தி தொடர்ந்து பணியாற்றுவது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

Follow Us