தப்ப ஓட முயன்ற பிரபல ரவுடி… காலில் சுட்டுப்பிடித்த போலீஸ்.. கரூரில் பரபரப்பு சம்பவம்
Karur Crime News : கரூரில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய பென்சில் தமிழழகனை போலுசார் சுட்டுப் பிடித்தனர். போலீசார் தாக்கிவிட்டு தப்பியோட முயற்சித்தபோது, காவல் ஆய்வாளர் மணிவண்ணன் காலில் சுட்டுபிடித்தார். காயம் அடைந்த ரவுடி தமிழழகன் கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

ரவுடி கைது
கரூர், ஜூன் 19 : கரூர் மாவட்டத்தில் பதுங்கி இருந்த பிரபல ரவுடியை பிடிக்க முயன்றபோது, தாக்கி விட்டு தப்ப முயன்றால், அவரை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டம் ஆண்டாங்கோவில் பகுதியைச் சேர்ந்தவர் பென்சில் தமிழழகன் (30). இவர் மீது பல்வேறு வழக்குகள் ஏற்கனவே உள்ளது. இந்த நிலையில், இவர் தனது கூட்டாளிகளான பிரகாஷ், ஹரிஹரன், மனோஜ் ஆகிய 4 பேருடன் சேர்ந்து, 2025 ஜூன் 17ஆம் தேதி லைட் ஹவுஸ் கார்னர் பேருந்து நிறுத்தத்தில் இருந்த பயணி ஒருவரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர். மேலும், அவரை கடுமையாக தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இதனை அடுத்து, அந்த பயணி கரூர் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில், 2025 ஜூன் 18ஆம் தேதி மாலை பிரகாஷ், ஹரிஹரன், மனோஜ் ஆகிய மூன்று பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைத்தனர்.
பிரபல ரவுடியை சுட்டுப்பிடித்த போலீஸ்
இந்த வழக்கில் தப்பியோடிய பென்சில் தமிழழகனை போலீசார் தீவிர தேடி வந்தனர். அப்போது, அவர் சேலம் நெடுஞ்சாலையில் அரிக்காரம்பாளையம் மேம்பாலம் அருகே பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனை அடுத்து, அந்த இடத்திற்கு சென்று போலீசார் ரவுடி தமிழழகனை கைது செய்ய முயன்றனர்.
அப்போது, அவர் தப்பி ஓடி முயற்சித்தார். இதனை அடுத்து, இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் தனது துப்பாக்கியால் தமிழழகனின் வலது கால் முட்டிக்கு கீழ் அவரை சுட்டார். இதனால், தமிழழகனால் ஓட முடியவில்லை. இதனை அடுத்து, போலீசார் அவரை பிடித்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
தற்போது கரூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். பென்சில் தமிழழகன் மீது கொலை, கொள்ளை உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. பிரபல ரவுடி சுட்டு பிடிக்கப்பட்ட சம்பவம் கரூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடலூரில் மற்றொரு சம்பவம்
தமிழகத்தில் கொள்ளை, கொலை சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. இதனை தடுக்க மாநில அரசு கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. மேலும், ரவுடிகளின் அட்டகாசத்தை ஒடுக்குவதிலும் அரசு தீவிரமாக உள்ளது. பல்வேறு குற்றச் சம்பவங்களில் சம்பந்தப்பட்ட ரவுடிகள் போலீசார் சுட்டுப் பிடிக்கப்பட்டு வருகின்றனர்.
2025 ஜூன் 18ஆம் தேதி கடலூர் மாவட்டம் பண்ருட்டில் பிரபல ரவுடி போலீசாரால் சுட்டு பிடிக்கப்பட்டார். அதாவது, 80 வயது மூதாட்டி பாலியல் வன்கொடுமை வழக்கல் தேடப்பட்டு வந்த நபரை போலீசார் காலில் சுட்டுப் பிடித்தனர். காடாம்புலியூரில் ரவுடி சந்திவேலை பிடித்தபோது, அவர் தப்ப ஓட முயன்றார். அப்போது, அவரது காலில் போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர். அதன்பிறகு அவர், கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.