AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

மே 19 ஆம் தேதி வரை வெளுக்கப்போகும் மழை.. எந்தெந்த மாவட்டங்களில்? முழு விவரம் இதோ..

தொடர்ந்து கனமழை இருந்து வந்தாலும், ஒரு சில பகுதிகளில் வெப்பநிலையின் தாக்கம் சற்று அதிகமாகவே காணப்படுகிறது. இந்த நிலையில், வரக்கூடிய நாட்களில் வெப்பநிலை இயல்பை ஒட்டியே இருக்கக்கூடும் என்றும், குறிப்பிடத்தக்க மாற்றத்திற்கான வாய்ப்புகள் குறைவாக இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மே 19 ஆம் தேதி வரை வெளுக்கப்போகும் மழை.. எந்தெந்த மாவட்டங்களில்? முழு விவரம் இதோ..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 15 May 2026 06:25 AM IST

மே 15, 2026: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பதிவாகி வருகிறது. குறிப்பாக தென் மாவட்டங்கள், டெல்டா மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் நல்ல மழை பதிவாகி வருகிறது. இந்த நிலையில், தென்மேற்கு பருவமழை தெற்கு வங்கக்கடலின் சில பகுதிகள், அந்தமான் கடல் பகுதிகள் மற்றும் அந்தமான்-நிக்கோபார் தீவுப் பகுதிகளில் நாளை , அதாவது மே 16ஆம் தேதி தொடங்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதேபோல், தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தற்போது அதே பகுதியில் நீடித்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த சூழலில், வரக்கூடிய நாட்களில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மே 19 ஆம் தேதி வரை தொடரும் கனமழை:

மே 15ஆம் தேதி, அதாவது இன்று, கோவை, நீலகிரி, இராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, தேனி மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பதிவாகக்கூடும்.  அதேபோல், மே 16ஆம் தேதி நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.

Also Read: பழனிசாமி உள்பட 22 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்.. பொதுக்குழுவை கூட்ட வேண்டும்.. எஸ்.பி.வேலுமணி தரப்பு போர்க்கொடி!

மே 17ஆம் தேதி நீலகிரி, கோவை, ஈரோடு, சேலம், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.  மே 18ஆம் தேதி நீலகிரி, கோவை, ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் தேனி ஆகிய மாவட்டங்களிலும், மே 19ஆம் தேதி நீலகிரி, கோவை, ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் தேனி மாவட்டங்களிலும் இடி மின்னலுடன் கூடிய கனமழை பதிவாகக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெப்பநிலையில் பெரிய அளவு மாற்றம் இருக்காது:

தொடர்ந்து கனமழை இருந்து வந்தாலும், ஒரு சில பகுதிகளில் வெப்பநிலையின் தாக்கம் சற்று அதிகமாகவே காணப்படுகிறது. இந்த நிலையில், வரக்கூடிய நாட்களில் வெப்பநிலை இயல்பை ஒட்டியே இருக்கக்கூடும் என்றும், குறிப்பிடத்தக்க மாற்றத்திற்கான வாய்ப்புகள் குறைவாக இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரையில், ஒரு சில இடங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும், நகரின் சில பகுதிகளில் லேசான அல்லது மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் அதிகபட்சமாக ஈரோடு மாவட்டத்தில் 38.4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. அதனைத் தொடர்ந்து வேலூரில் 38.2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும், கரூரில் 37.2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் பதிவாகியுள்ளது.  சென்னையைப் பொறுத்தவரையில், அதிகபட்சமாக மீனம்பாக்கத்தில் 36 டிகிரி செல்சியஸும், நுங்கம்பாக்கத்தில் 35 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் பதிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us