AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

நெல்லை –தென்காசியில் 5 நாட்களில் 6 கொலைகள்: மது, கள்ளகாதல், சொத்து தகராறே காரணம்!

6 Murders in Tirunelveli, Tenkasi in 5 days: திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் கடந்த 5 நாட்களில் நடந்த கொலைகளுக்கு முக்கிய காரணமாக மது, கஞ்சா, மற்றும் சமூக ஒழுங்கின்மை தொடர்புடைய பிரச்சினைகள் தோன்றுகின்றன. இந்த கொலைகளில் பாலியல் வன்கொடுமை, பணப்பிரச்னைகள், மற்றும் காதல் பிரச்னைகள் ஆகியவை முன்னணி காரணமாக உள்ளன.

நெல்லை –தென்காசியில் 5 நாட்களில் 6 கொலைகள்: மது, கள்ளகாதல், சொத்து தகராறே காரணம்!
நெல்லை –தென்காசியில் 5 நாட்களில் 6 கொலைImage Source: pinrest
Sivasankari Bose
Sivasankari Bose | Published: 30 Apr 2025 07:24 AM IST

தமிழ்நாடு ஏப்ரல் 30: திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் கடந்த 5 நாட்களில் 6 கொலை (6 murders in Tirunelveli, Tenkasi in 5 days) சம்பவங்கள் நடந்துள்ளன. இதில் அத்துமீறல் துன்புறத்தல் முயற்சியில் 2 வயது சிறுமி கொல்லப்பட்டது. கூடங்குளத்தில் மதுவிழாவில் ஏற்பட்ட தகராறில் ஒருவர் கல்லால் அடிக்கப்பட்டு உயிரிழந்தார். பணத் தகராறில் ஒருவரை அரிவாளால் வெட்டிக் கொன்றதுடன், சொத்து விவகாரத்தில் (Property Disputes) சித்தப்பா கொலை செய்யப்பட்டார். டாஸ்மாக் பாரில் சிகரெட் கேள்வியால் ஒருவர் மதுபாட்டிலால் தாக்கப்பட்டு உயிரிழந்தார். கள்ளகாதல் பிரச்சினையால் ஒருவர் வெட்டிக்கொல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

திருநெல்வேலி, தென்காசியில் கடைசி 5 நாட்களில் 6 கொலைகள்

திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் கடந்த 5 நாட்களில் நடந்த 6 கொலைகளில் பெரும்பாலானவற்றின் பின்னணியில் மது மற்றும் போதைப்பொருட்கள் முக்கிய காரணமாகத் தோன்றுகிறது. இந்த சம்பவங்கள் ஒவ்வொன்றும் தனித்தனியாக அதிர்ச்சி தருவனவாக உள்ளன.

அத்துமீறல் துன்புறத்தல் முயற்சியில் சிறுமி கொலை

2025 ஏப்ரல் 24-ம் தேதி, திசையன்விளை அருகே பிருந்தா என்பவரை அத்துமீறல் துன்புறத்தல் முயற்சியில் அழைத்துச் சென்ற மூன்று வாலிபர்கள், அவருடன் வந்த 2 வயது பெண் குழந்தை தர்ஷினி இடையூறாக இருப்பதாகக் கருதி, மது கொடுத்து தாக்கி கொலை செய்தனர். இந்த கொடூர செயலில் ஈடுபட்ட பிருந்தா, பெஞ்சமின் (25), முத்துசுடர் (28), லிங்கசெல்வன் (29) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

மதுவிழாவில் நண்பர் கொலை

2025 ஏப்ரல் 26-ம் தேதி, கூடங்குளம் அருகே கூலித்தொழிலாளி சேகர் (49), நண்பர்களுடன் மது அருந்தும் போது ஏற்பட்ட தகராறில் கல்லால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டார். இந்தக் கொலை தொடர்பாக இசக்கிமுத்து (23), வைணவ பெருமாள் (26) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

பணப்பிரச்னையால் நடந்த கொலை

பழவூர் அருகே, காற்றாலை பணத்தில் ஏற்பட்ட முரண்பாட்டால் சந்தனகுமார் (35) என்பவரை ரெஜிமன் (19) அரிவாளால் வெட்டிக் கொன்றார். சந்தனகுமார் பணத்தை திருப்பித் தராததே கொலையின் காரணமாக கூறப்படுகிறது.

சொத்து தகராறில் சகோதரனின் மகன் கொலை

பொன்னாக்குடி பகுதியில், சொத்து தொடர்பான தகராறால் மாரிமுத்துவின் மகன் இசக்கிமுத்து (28), தனது சித்தப்பா அருணாச்சலத்தை (49) கம்பியால் அடித்து கொலை செய்தார். சொத்தை கேட்டு அடிக்கடி ஏற்பட்ட வாக்குவாதமே இதற்குப் பின்னணியாக அமைந்துள்ளது.

டாஸ்மாக் பாரில் சிகரெட் விவகாரம் கொலைக்குக் காரணம்

தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி அருகே டாஸ்மாக் பாரில் சிகரெட் கேட்டதில் ஏற்பட்ட தகராறில் மாரிமுத்து (30) மதுபாட்டிலால் அடிக்கப்பட்டு உயிரிழந்தார். இவர் தனியார் நிதி நிறுவன ஊழியராக இருந்தார். வேல்முருகன் உட்பட மூன்று பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கள்ளக் காதல் தொடர்பாக கொலை

கடையம் அருகே நாலாங்கட்டளையைச் சேர்ந்த கட்டட தொழிலாளி ஆமோஸ் (26), அவரது மனைவி நந்தினி மற்றும் அந்தோணியுடன் ஏற்பட்ட காதல் பிரச்சனையின் பின்னணியில் கொலை செய்யப்பட்டார். 2025 ஏப்ரல் 26 அன்று வீட்டில் இருந்த ஆமோசை அந்தோணி வெட்டிக் கொலை செய்தார். நந்தினி மற்றும் அந்தோணி இருவரும் கைது செய்யப்பட்டனர்.

திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக நிகழும் கொலை சம்பவங்களில் மது, கஞ்சா, மற்றும் சமூக ஒழுங்கின்மையே முக்கிய காரணமாக உள்ளன. இது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Follow Us