VIDEO: இது வெற்றியின் கண்ணீர்.. தந்தையை கட்டிப்பிடித்த கலங்கிய ஜெமிமா!
Jemimah Rodrigues : 2025 மகளிர் உலகக் கோப்பை அரையிறுதியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியாவை இறுதிப் போட்டிக்கு ஜெமிமா ரோட்ரிக்ஸ் அழைத்துச் சென்றார். அவரது வரலாற்று இன்னிங்ஸ் இந்திய கிரிக்கெட்டில் புதிய அத்தியாயத்தைப் படைத்தது. வெற்றிக்கு பிறகு தந்தையுடனான அன்பு பரிமாற்றம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
 
                                இந்திய மகளிர் கிரிக்கெட்டில் ஜெமிமா ரோட்ரிக்ஸின் பெயர் அவ்வளவு பிரபலமாக இல்லை, ஆனால் இப்போது அது ஒருபோதும் மறக்க முடியாத பெயராக மாறிவிட்டது. 2025 மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை அரையிறுதியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியாவை சாதனை வெற்றிக்கு அழைத்துச் சென்ற பிறகு, ஜெமிமா கிரிக்கெட் ரசிகர்களின் இதயங்களிலும் மனதிலும் தனது பெயரை என்றென்றும் அழியாதபடி பொறித்து வைத்துள்ளார். நவி மும்பையில் உள்ள டி.ஒய்.பாட்டீல் மைதானத்தில் ஜெமிமா சாதித்தது இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு பெருமையான தருணம் மட்டுமல்ல, அது அவரது தந்தைக்கும் பெருமை சேர்க்கும் விஷயமாகும். எனவே, அரையிறுதியில் ஆஸ்திரேலியாவை இந்தியா வென்ற பிறகு தந்தையும் மகளும் சந்தித்தித்துக்கொண்ட உணர்ச்சிகரமான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்தியாவை வெற்றிக்கு அழைத்துச் சென்ற பிறகு, ஜெமிமா ரோட்ரிக்ஸ் தனது தந்தையை கட்டிப்பிடித்து அழும் வீடியோ வெளியாகியுள்ளது. இந்த வீடியோ குறித்து பதிவிட்டுள்ள ரசிகர்கள், வீடியோவில் காணப்படும் கண்ணீர் ஒரு தந்தை மற்றும் அவரது மகளின் மகிழ்ச்சி. அவை பெருமையின் கண்ணீர். இந்த நாளுக்காகவே, இந்த உணர்வுக்காகவே, ஜெமிமாவின் தந்தை தனது மகளை ஒரு தடகள வீரராக மாற்றினார். இந்த நாளுக்காகவே ஜெமிமா தனது கைகளில் கிரிக்கெட் பேட்டை எடுத்தார் எனக் குறிப்பிட்டுள்ளனர்.
அழும் வீடியோ
View this post on Instagram
முழு குடும்பமும் அரவணைத்தது
ஜெமிமா ரோட்ரிகஸ் தனது தந்தையை கட்டிப்பிடித்து கண்ணீர் மல்க அணைத்துக் கொண்டது நிறைய விஷயங்களைச் சொல்கிறது. இருப்பினும், ஜெமிமாவின் உணர்ச்சிகரமான தருணம் அவரது தந்தையுடன் நிற்கவில்லை, குடும்பத்தின் ஒவ்வொரு உறுப்பினரும் தங்களது அன்பை பகிர்ந்து கொண்டனர்
Also Read : 7 மாத கர்ப்பம்! 145 கிலோ பளு தூக்கி சாதனை.. வெண்கலம் வென்ற டெல்லி பெண் கான்ஸ்டபிள்!
வரலாற்றுச் சிறப்புமிக்க இன்னிங்ஸ்
2025 மகளிர் ஒருநாள் உலகக் கோப்பையின் அரையிறுதியை வெல்வது எளிதான சாதனையல்ல. இந்திய அணி உலக சாதனை இலக்கை துரத்திக் கொண்டிருந்தது. அவர்கள் அவ்வாறு செய்யத் தொடங்கியபோது, ஷஃபாலியை 13 ரன்களிலும், ஸ்மிருதி மந்தனா 59 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இரண்டு முக்கிய வீராங்கனைகளின் இழப்பு நிச்சயமாக இந்திய அணியைப் பாதித்தது. ஆனால் அந்த நெருக்கடியின் மத்தியில், ஜெமிமா தனக்கென ஒரு சாதனையை உருவாக்க தயாரானார். தனது அதிரடியால் எதிரணியை திக்குமுக்காட செய்தார்.
மகத்தான பேட்டிங்
3வது இடத்தில் பேட்டிங் செய்த ஜெமிமா ரோட்ரிக்ஸ் இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்து, இறுதிப் போட்டியில் தனது அணியின் இடத்தைப் பாதுகாத்தார். இந்தியா வெற்றி பெற 339 ரன்கள் தேவைப்பட்டது, ஆனால் அவர்கள் 48.3 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 341 ரன்கள் எடுத்தனர். ஜெமிமா ரோட்ரிக்ஸ் 134 பந்துகளில் 14 பவுண்டரிகள் உட்பட 127 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்த மறக்க முடியாத இன்னிங்ஸிற்காக, ஜெமிமாவுக்கு ஆட்டநாயகி விருதும் வழங்கப்பட்டது.
 
                         
                    
                       
                      					  
					  
                 
                    
                       
                      					  
					  
                 
                    
                       
                      					  
					  
                 
                    
                       
                      					  
					  
                 
 
                                     
 
                                     
 
                                     
 
                                     
 
                                     
 
                                     
 
                                     
 
                                     
 
                                    