AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Virat Kohli : ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்த கோலி.. ஆர்சிபி அணிக்காக விளையாட மாட்டாரா?

Royal Challengers Bengaluru: கடந்த 2008ம் ஆண்டு ஐபிஎல் தொடங்கப்பட்டத்தில் இருந்து கோலி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடி வருகிறார். அதன்படி, ஐபிஎல் 2026லிலும் விராட் கோலி ஆர்சிபி அணிக்காக விளையாடுவார் என்றும், அணியை விட்டுப் பிரியவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Virat Kohli : ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்த கோலி.. ஆர்சிபி அணிக்காக விளையாட மாட்டாரா?
விராட் கோலிImage Source: PTI
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 13 Oct 2025 23:12 PM IST

விராட் கோலி (Virat Kohli) இனி ஐபிஎல்லில் ஆர்சிபி அணிக்காக விளையாட மாட்டாரா? விராட் கோலி ஐபிஎல்லில் இருந்து ஓய்வு பெறப் போகிறாரா? விராட் கோலி இப்போது ஐபிஎல்லில் ஆர்சிபி (RCB) அணியைத் தவிர வேறு அணிக்காக விளையாடுவாரா? விராட் கோலி ஐபிஎல்லில் இருந்து ஓய்வு பெற போகிறாரா? விராட் கோலி ஆர்சிபியுடனான உறவை முறித்துக் கொண்டாரா? இதுபோன்ற கேள்விகள் சமூக வலைதளங்களில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ரசிகர்களும், விராட் கோலி ரசிகர்களும் முன்வைத்து வருகின்றனர். கடந்த 2024ம் ஆண்டு டி20 உலகக் கோப்பையை இந்திய அணி வென்றபோது சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்தார். இதுபோன்ற சூழ்நிலையில், ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற போகிறாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

உண்மையில், விராட் கோலி ஆர்சிபியுடன் வணிக ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்துவிட்டதாக ஒரு செய்தி வெளியானது. இதுதான் விராட் ஆர்சிபியை விட்டு வெளியேறுவது குறித்த ஊகங்களைத் தூண்டியது. சமூக ஊடகங்கள் முதல் செய்தி உலகம் வரை, இந்த விவகாரம் விவாதிக்கப்பட்டது. ஆனால் யாரும் இதுதான் உண்மை என வெளிப்படுத்தவில்லை.

ALSO READ: 5 வீரர்களை விடுவிக்க திட்டமிடும் சிஎஸ்கே… இந்த வெளிநாட்டு வீரரும் வெளியேறுகிறாரா..?

விராட் கோலி ஆர்சிபியில் இருந்து விலகுகிறாரா..?


கடந்த 2008ம் ஆண்டு ஐபிஎல் தொடங்கப்பட்டத்தில் இருந்து கோலி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடி வருகிறார். அதன்படி, ஐபிஎல் 2026லிலும் விராட் கோலி ஆர்சிபி அணிக்காக விளையாடுவார் என்றும், அணியை விட்டுப் பிரியவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. விராட் கோலி ஒரு வணிக ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்துவிட்டார் என்ற செய்தியே ஆர்சிபியை விட்டு வெளியேறுகிறார் என்று திரித்து செய்திகள் வெளியாகிறது. அவர் இன்னும் ஓய்வு பெறப் போவதில்லை. அவர் ஐபிஎல் 2026 இல் ஆர்சிபிக்காக விளையாடுவார்.

ALSO READ: அரையிறுதி வாய்ப்பு இந்திய அணிக்கு தவறியதா..? சமன்பாடு என்ன சொல்கிறது..?

விராட் கோலி கையெழுத்திட மறுத்த வணிக ஒப்பந்தம் என்ன ?

வணிக ஒப்பந்தம் மற்றும் வீரர் ஒப்பந்தம் இரண்டு வெவ்வேறு விஷயங்கள் ஆகும். விராட் கோலி ஆர்சிபியை விட்டு வெளியேறியிருந்தால், அவர் தனது வீரர் ஒப்பந்தத்தை ரத்து செய்திருப்பார். ஆனால் அவர் வணிக ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்துவிட்டார். இதன் பொருள் அவர் எந்த பிராண்டுடனும் தொடர்பு கொள்ள மறுத்திருக்கலாம் என்றே கூறப்படுகிறது. உரிமையாளர்கள் பெரும்பாலும் பல்வேறு ஸ்பான்சர்ஷிப்களை தங்களுடன் இணைத்து கொண்டு, அவர்களுடன் உடைமைகளுடன் விளையாடுவார்கள். அதன்படி, பெரும்பாலும் வீரர்கள் அந்த ஸ்பான்சர்ஷிப் நிறுவனங்களில் வீடியோக்களை நடிப்பார்கள் அல்லது விளம்பரங்களைச் செய்வார்கள். இதற்காக வீரர்கள் ஸ்பான்சராக கணிசமான தொகையைப் பெறுகிறார்கள். இருப்பினும், விராட் எந்த பிராண்டுடனும் தொடர்பு கொள்ள விரும்பவில்லை, அதனால்தான் அவர் வணிக ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்துவிட்டார். இருப்பினும், விராட் எந்த பிராண்டுடன் ஒப்பந்தம் செய்ய மறுத்துவிட்டார் என்பதை எந்த அறிக்கையும் வெளியிடவில்லை.

 

Follow Us