Rinku Singh: உபி அரசின் சிறப்பு மரியாதை! ரிங்கு சிங் அடிப்படை கல்வி அதிகாரியாக நியமனம்..!
UP Govt Honors Rinku Singh: உத்தரபிரதேச அரசு, இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ரிங்கு சிங்கை அடிப்படை கல்வி அதிகாரியாக நியமித்து சிறப்பு மரியாதை செலுத்தியுள்ளது. இந்தியாவிற்கு பெருமை சேர்த்த வீரர்களுக்கு அரசுப் பணிகளில் வாய்ப்பு அளிக்கும் கொள்கையின் அடிப்படையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. அலிகார் மாவட்டத்தில் அவர் பணியாற்றுவார். இதன் மூலம், விளையாட்டில் சிறந்து விளங்குவோருக்கு அரசு அளிக்கும் மரியாதையை இந்த நியமனம் எடுத்துக்காட்டுகிறது.

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் வீரருமான ரிங்கு சிங்கிற்கு, உத்தரபிரதேச அரசு (UP Govt) சிறப்பு மரியாதை ஒன்றை வழங்கியுள்ளது. அதன்படி, கிரிக்கெட் உலகில் ரிங்கு சிங் செய்த சாதனையை பாராட்டி, விளையாட்டு ஒதுக்கீட்டில் இருந்து அடிப்படை கல்வி அதிகாரியாக நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் நாட்டிற்குப் பெருமை சேர்க்கும் வீரர்களுக்கு அரசுப் பணிகளில் மரியாதையுடன் இடம் அளிக்கப்படும் மாநில அரசின் கொள்கையின் கீழ் ரிங்கு சிங்கிற்கு (Rinku Singh) இந்த நியமனம் வழங்கப்படுகிறது என அடிப்படை கல்வி இயக்குநர் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார். அதன்படி, ரிங்கு சிங் தனக்கு தேவையான அனைத்து ஆவணங்களையும் விரைவில் சம்பந்தப்பட்ட போர்ட்டலில் பதிவேற்றுமாறு கேட்டு கொண்டுள்ளது. ஆவணங்கள் சரிபார்ப்பு நடந்தபிறகு, ரிங்கு சிங்கிற்கு தற்காலிக நியமனம் வழங்கப்படும்.
எங்கு பதவி..?
அலிகார் மாவட்டத்தின் கீழ் அமின் மாவட்ட அடிப்படை கல்வி அதிகாரி பதவிக்கு ரிங்கு சிங் நியமிக்கப்படுவார். 2025 மே 16ம் தேதியிட்ட அரசாங்க உத்தரவின்படி இந்த நியமனம் செய்யப்படுகிறது. சமீபத்தில், இந்திய கிரிக்கெட் வீரர் ரிங்கு சிங், சமாஜ்வாதி கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் பிரியா சரோஜுடன் நிச்சயதார்த்தம் செய்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் பல அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் கிரிக்கெட் வீரர்கள் கலந்து கொண்டனர். வருகின்ற 2025 நவம்பர் 18ம் தேதி ரிங்கு சிங் – பிரியா சரோஜ் திருமணம் செய்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சில காரணங்களால் இவர்களது திருமண தேதி 2026 பிப்ரவரி மாதம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.




மேலும் 6 வீரர்களுக்கு அரசு பதவி:
#BREAKING Rinku Singh is not just a cricketer now — he’s set to become a government officer!
The govt has decided to appoint him as BSA (Basic Shiksha Adhikari).
Finally, real respect for those who make India proud on the world stage — in the form of a job!#RinkuSingh #BSA pic.twitter.com/L2VRfvnYq4
— The_Final_Episode (@TheFinaEpisode) June 26, 2025
சமீபத்தில், உத்தரபிரதேச அரசின் தேர்வுக் குழு கூட்டம் தலைமைச் செயலாளர் மனோஜ் குமார் சிங் தலைமையில் நடைபெற்றது. இதில் 7 வீரர்கள் தங்கள் பங்களிப்பு காரணமாக பல்வேறு துறைகளில் நியமிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். இந்த வீரர்கள் அனைவரும் நேரடி தேர்வு செயல்முறையின் கீழ் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இது சர்வதேச பதக்கம் வென்ற வீரர்களுக்கு மட்டுமே பொருந்தும்.
யார் யாருக்கு என்னென்ன பதவி..?
- ரிங்கு சிங் – இந்திய கிரிக்கெட் வீரர்
பதவி – அடிப்படை கல்வி அலுவலர் (கல்வித் துறை)
- பிரவீன் குமார் – பாரா தடகள வீரர்
பதவி – துணை எஸ்பி (உள்துறை)
- ராஜ்குமார் பால் – ஹாக்கி வீரர்
பதவி – துணை எஸ்பி (உள்துறை)
- அஜீத் சிங் – பாரா தடகள வீரர்
மாவட்ட பஞ்சாயத்து ராஜ் அலுவலர் (பஞ்சாயத்து ராஜ் துறை)
- சிம்ரன் – பாரா தடகள வீரர்
மாவட்ட பஞ்சாயத்து ராஜ் அலுவலர் (பஞ்சாயத்து ராஜ் துறை)
- பிரீத்தி பால் – பாரா தடகள வீரர்
அஞ்சல் – தொகுதி மேம்பாட்டு அலுவலர் (ஊரக வளர்ச்சித் துறை)
- கிரண் பாலியன் – தடகள வீரர்
பதவி – பிராந்திய வன அலுவலர் (வனத்துறை)