Sourav Ganguly: 2003 உலகக் கோப்பையில் தேர்ந்தெடுக்காததற்கு 3 மாசம் பேசவில்லை.. விவிஎஸ் லட்சுணன் குறித்து கங்குலி ஓபன் டாக்!
2003 World Cup VVS Laxman Fallout: 2003 உலகக் கோப்பையில் வி.வி.எஸ். லட்சுமணன் தேர்வு செய்யப்படாதது குறித்து முன்னாள் இந்திய அணித் தலைவர் சவுரவ் கங்குலி பேசியுள்ளார். லட்சுமணன் இதனால் மூன்று மாதங்கள் கங்குலியுடன் பேசவில்லை எனவும், அவரது வருத்தம் இயல்பானது எனவும் கங்குலி தெரிவித்துள்ளார். கவுதம் கம்பீர், ஹர்பஜன் சிங், அனில் கும்ப்ளே ஆகியோர் குறித்தும் தனது கருத்துகளைப் பகிர்ந்துள்ளார்.

சவுரவ் கங்குலி - விவிஎஸ் லட்சுமண்
2003ம் ஆண்டு நடந்த ஒரு சம்பவத்தை நினைவு கூர்ந்து முன்னாள் இந்திய அணித் தலைவர் சவுரவ் கங்குலி (Sourav Ganguly), சக முன்னாள் வீரரான வி.வி.எஸ் லட்சுணன் (VVS Laxman) தன்னுடன் 3 மாதங்கள் பேசுவதை நிறுத்தியது குறித்து மனம் திறந்துள்ளார். இந்த சம்பவமானது 2023 உலகக் கோப்பை (2003 World Cup) தேர்வை பற்றியது. அனைத்து தேர்வாளரக்ளும் லட்சுமணனை தேர்ந்தெடுப்பதற்கு ஆதரவாக இருந்தனர். ஆனால் அப்போதைய பயிற்சியாளர் ஜான் ரைட் மற்றும் கேப்டன் சவுரவ் கங்குலி தினேஷ் மோங்கியாவுக்கு இடம் கொடுத்தனர். இதனால்தான், சவுரவ் கங்குலியிடம் வி.வி.எஸ் லட்சுணன் பேசாததற்கு காரணம் என்று கூறப்படுகிறது. இதில், சவுரவ் கங்குலி, கவுதம் கம்பீர், ஹர்பஜன் சிங் மற்றும் அனில் கும்ப்ளே பற்றியும் மனம் திறந்துள்ளார்.
லட்சுமணன் ஏன் 3 மாதங்களாகப் பேசவில்லை?
இந்தியாவின் சிறந்த கிரிக்கெட் வீரர்களில் வி.வி.எஸ். லட்சுமண் பெயரும் இடம் பெற்றிருந்தது. அவரது கிரிக்கெட் வாழ்க்கையும் சிறப்பாக இருந்தது. ஆனால், இதுவரை வி.வி.எஸ். லட்சுமண் ஒரு உலகக் கோப்பையில் விளையாடியதில்லை. 2003 உலகக் கோப்பை அணியில் இருந்து நீக்கப்பட்டார். வி.வி.எஸ். லட்சுமணனுக்கு பதிலாக தினேஷ் மோங்கியா சேர்க்கப்பட்டார். இந்த முடிவுக்கு பின்னால் கேப்டன் சவுரவ் கங்குலிதான் காரணம் என்று கூறப்படுகிறது. இது பிடிஐ நேர்காணலில் பேசிய கங்குலி, “2003 உலகக் கோப்பையில் வி.வி.எஸ். லட்சுமண் தேர்ந்தெடுக்காததற்கு பிறகு மகிழ்ச்சியற்றவராகவும் வருத்தமாகவும் இருந்தார். நான் அவருடன் சமாதானம் ஆகும் வரை அவர் 3 மாதங்கள் என்னுடன் பேசவில்லை. உலகக் கோப்பை போன்ற ஒரு பெரிய நிகழ்வில், குறிப்பாக லட்சுமணனைப் போன்ற திறமையான வீரரை விடுவித்தால் யாரும் கோபப்படுவார்கள். அவர் மகிழ்ச்சியற்றவராக இருப்பது இயல்பானது. உலகக் கோப்பைக்குப் பிறகு, எங்கள் அணி சிறப்பாக செயல்பட்டதில் அவர் மகிழ்ச்சியடைந்தார்” என்றார்.
2003 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தோல்வியை சந்தித்தது. நாங்கள் திரும்பி வந்தபோது, அவர் ஒருநாள் அணிக்கும் திரும்பினார், அவர் பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியாவில் அற்புதமாக விளையாடினார். நாங்கள் பாகிஸ்தானில் முதல் முறையாக வெற்றி பெற்றோம்.அதில் வி.வி.எஸ். லட்சுமணன் முக்கிய பங்கு வகித்தார்.” என்று தெரிவித்தார்.
கம்பீர் குறித்து கங்குலி பேசியது என்ன..?
Sourav Ganguly admitted he hasn’t closely observed Gautam Gambhir’s strategic workings as a coach but spoke highly of his former teammate’s character.
More ➡️https://t.co/RPlFqvg5px
Courtesy: PTI pic.twitter.com/AeP0AgnsuA
— Sportstar (@sportstarweb) June 22, 2025
கவுதம் கம்பீரின் பயிற்சி குறித்து பேசிய சவுரவ் கங்குலி, “ கவுதம் கம்பீர் தனது கடமையை சிறப்பாக செய்கிறார். தொடக்கத்தில் மெதுவாகவே தொடங்கினார். நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய போன்ற அணிகளுடம் டெஸ்ட் போட்டிகளிடம் இந்திய அணி இவரது தலைமையில் தோற்றது. ஆனால், அதன்பிறகு, இந்திய அணி 2025 சாம்பியன்ஸ் டிராபியை வென்றது. இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் கவுதம் கம்பீருக்கு பெரியதாக இருக்கும். நான் அவருடன் பணியாற்றவில்லை, ஆனால் அவர் ஆர்வமுள்ளவர். நான் அவருடன் விளையாடியுள்ளேன், அவர் ஒரு அற்புதமான மனிதர், மூத்த வீரர்களை மிகவும் மதிக்கிறார்” என்றார்.
தொடர்ந்து ஹர்பஜன் சிங் மற்றும் அனில் கும்ப்ளே பற்றி பேசிய கங்குலி, “ஐந்து நாள் டெஸ்டில் வெளியே உட்கார்ந்து ஓய்வு எடுக்கும் வீரர்கள் ஹர்பஜன் சிங் மற்றும் அனில் கும்ப்ளே அல்ல, நான் ஏன் விளையாடவில்லை என்று கேட்கும் வீரர்கள் இவர்கள்தான். தொடர்ந்து போட்டிகளில் விளையாடி அணிக்காக வெற்றி பெற விரும்பும் அத்தகைய சாம்பியன் வீரர்கள் எனக்கு கிடைத்தது எனக்கு பாக்கியம்” என்று தெரிவித்தார்.