AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

பாகிஸ்தான் வீரர்களை கண்டுகொள்ளாத இந்திய அணி.. புகாரளித்த பாகிஸ்தான்!

India vs Pakistan Asia Cup : 2025 ஆசிய கோப்பை போட்டியில் இந்தியா பாகிஸ்தானை வெற்றி பெற்றது. ஆனால், போட்டிக்குப் பிறகு இந்திய வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்க மறுத்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்திய அணியின் இந்த நடவடிக்கைக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் புகார் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

பாகிஸ்தான் வீரர்களை கண்டுகொள்ளாத இந்திய அணி.. புகாரளித்த பாகிஸ்தான்!
இந்திய அணியினர்
C Murugadoss
C Murugadoss | Updated On: 15 Sep 2025 09:38 AM IST

2025 ஆசிய கோப்பை போட்டியில், பாகிஸ்தானை தோற்கடித்தது மட்டுமல்லாமல் பகிரங்க கண்டனத்தையும் கொடுத்துள்ளது. பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்க மறுப்பதன் மூலம் இந்திய அணி தங்களது கடும் கண்டனத்தை பதிவு செய்தது. டாஸின் போது, ​​இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் தான் செய்ததைச் செய்தார். அதன் பிறகு, போட்டியில் வென்றபோது கூட, இந்திய வீரர்கள் பாகிஸ்தான் அணியைக் கவனிக்கவில்லை. இந்திய அணியின் எந்த வீரரும் அவர்களுடன் கைகுலுக்கவில்லை. ஓய்வு அறையில் இருந்து இந்திய வீரர்கள் வெளியே வரவே இல்லை.  இந்திய வீரர்கள் கைகுலுக்காத சம்பவம் குறித்து இப்போது ஒரு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக பாகிஸ்தான் கிரிக்கெட் அணியும் இந்திய அணிக்கு எதிராக ஒரு நடவடிக்கை எடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

பாகிஸ்தான் அணியின் மேலாளர் பிசிபியின் உத்தரவின் பேரில் புகார் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய அணி கைகுலுக்காததால் வருத்தமடைந்த பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் மேலாளர், பிசிபியின் உத்தரவின் பேரில் இந்திய அணி குறித்து புகார் அளித்துள்ளார். பாகிஸ்தான் அணியின் மேலாளர் நவீத் அக்தர் சீமா, இந்திய அணியின் தகாத நடத்தை குறித்து போட்டி நடுவரிடம் புகார் அளித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Also Read : 24 வயதில் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் பட்டம்.. தங்கத்தை தூக்கிய இந்திய வீராங்கனை

ராணுவ வீரர்களுக்கு வெற்றி அர்ப்பணிப்பு

முன்னதாக, பாகிஸ்தானுக்கு எதிரான தனது வெற்றியை பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் கொல்லப்பட்ட அப்பாவி மக்களுக்கு சூரியகுமார் யாதவ் அர்ப்பணித்தார். பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்க வேண்டாம் என்று இந்திய அணிக்கு அதன் உயர் அதிகாரிகள் கண்டிப்பாக அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. அணியின் அனைத்து வீரர்களும் அதையே பின்பற்றினர். கிடைத்த தகவலின்படி, இந்தியா-பாகிஸ்தான் போட்டிக்கு முன்பு இது தொடர்பாக அரை மணி நேர சந்திப்பும் நடைபெற்றது.

 கைகுலுக்காததால் பரபரப்பு

பாகிஸ்தானின் புகழ்பெற்ற கிரிக்கெட் வீரர்களும் இந்திய வீரர்களுடன் கைகுலுக்காததால் மிகவும் வருத்தமடைந்துள்ளனர். இந்தியாவின் அணுகுமுறையில் அவர்கள் மகிழ்ச்சியடையவில்லை. இது வெறும் ஆசிய கோப்பை மட்டுமே, ஐசிசி போட்டிகளிலும் இதேதான் நடக்கலாம் என்று பாசித் அலி கூறியுள்ளார். பாகிஸ்தான் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பாசித் அலியுடன் அமர்ந்திருந்தபோது இந்தியாவின் அணுகுமுறை குறித்து கம்ரான் அக்மல் தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். இது கிரிக்கெட்டின் முன்னேற்றத்திற்கு நல்லதல்ல என்று அவர் கூறினார்.

ரஷீத் லத்தீஃப் கேள்வி

இந்திய அணியின் இந்த நடவடிக்கை குறித்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் ரஷீத் லத்தீஃப் கூறுகையில், இதன் மூலம் இந்திய அணியினர் தங்கள் உண்மையான நிறத்தைக் காட்டிவிட்டதாகக் கூறினார்.

Also Read : பிசிசிஐ தலைவராக சச்சின் டெண்டுல்கர்..? முக்கிய பதவிகளுக்கான தேர்தல் எப்போது?

முன்னதாக இந்தியாவுக்கு பெரும் உயிரிழப்பை ஏற்படுத்திய பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு பாகிஸ்தான் அணியுடன் கிரிக்கெட் விளையாடக் கூடாது என கடும் கண்டனங்கள் எழுந்தன. பஹல்காம் தாக்கலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் இந்த போட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் போட்டியை வெற்றிபெற்று தங்களுடைய எதிர்ப்பையும் இந்திய அணியிடனர் கொடுத்துள்ளனர்.

Follow Us