Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Asia Cup 2025: ஆசியக் கோப்பையில் அதிக சிக்ஸர்கள்.. கெத்து காட்டப்போகும் சூர்யகுமார் யாதவ்!

Suryakumar Yadav's Comeback: சூர்யகுமார் யாதவ் ஐபிஎல் 2025 காயத்திலிருந்து மீண்டு 2025 ஆசியக் கோப்பையில் விளையாடத் தயாராகிறார். அவர் ஆசியக் கோப்பையில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற சாதனையைப் படைக்க வாய்ப்புள்ளது. காயத்திற்குப் பிறகு ஜெர்மனியில் அறுவை சிகிச்சை செய்து கொண்ட அவர், இந்திய அணியின் முக்கிய வீரராக 2025 டி20 உலகக் கோப்பைக்கான தயார்நிலையில் உள்ளார்.

Asia Cup 2025: ஆசியக் கோப்பையில் அதிக சிக்ஸர்கள்.. கெத்து காட்டப்போகும் சூர்யகுமார் யாதவ்!
சூர்யகுமார் யாதவ்Image Source: PTI and Twitter
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 02 Sep 2025 21:16 PM IST

2025 ஐபிஎல் (IPL 2025) போட்டிக்குப் பிறகு இந்திய டி20 அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் எந்தவொரு சர்வதேச போட்டிகளில் விளையாடவில்லை. ஐபிஎல் 2025 போட்டியின்போது சூர்யகுமார் யாதவுக்கு காயம் ஏற்பட்டது. அதன் பிறகு, சூர்யகுமார் யாதவ் (Suryakumar Yadav) ஜெர்மனியில் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். தற்போது, முழு உடற்தகுதி பெற்று 2025 ஆசியக் கோப்பையில் விளையாடுவதற்காக பயிற்சி மேற்கொண்டு வருகிறார். அதன்படி, 2025 ஆசிய கோப்பை (2024 Asia Cup) போட்டியில் களமிறங்குவதன்மூலம், சூர்யகுமார் யாதவ் சர்வதேச போட்டிகளுக்கு விரும்புகிறார்.  இந்திய அணி வருகின்ற 2025 செப்டம்பர் 4ம் தேதி ஆசிய கோப்பைக்காக ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு புறப்பட இருக்கிறது. இதுபோன்ற சூழ்நிலையில், சூர்யகுமார் யாதவ் ஒரு சாதனை படைக்க அதிக வாய்ப்பு உள்ளது.

ALSO READ: பாகிஸ்தானுக்கு எதிராக சூர்யகுமார் யாதவ் தொடர்ந்து சொதப்பல்.. அதிர்ச்சியளிக்கும் புள்ளிவிவரங்கள்..!

சூர்யகுமார் யாதவ் சாதனை படைக்க வாய்ப்பு:

2025 ஆசிய கோப்பையில் சூர்யகுமார் யாதவ் தலைமையில் 15 பேர் கொண்ட இந்திய அணி களமிறங்குகிறது. இந்திய அணியின் முதல் போட்டி வருகின்ற 2025 செப்டம்பர் 10ம் தேதி ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு எதிராக விளையாடுகிறது. இந்தப் போட்டியில் சூர்யகுமார் யாதவ் ஒரு சாதனை படைக்க அதிக வாய்ப்பு உள்ளது. இதன்மூலம், விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா உள்ளிட்ட 7 வீரர்களை முறியடிக்க அவருக்கு வாய்ப்பு உள்ளது.

ஆசிய கோப்பை டி20 போட்டியில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற பெருமையை படைக்க சூர்யகுமார் யாதவுக்கு வாய்ப்புள்ளது. இந்த சாதனையை படைக்க சூர்யகுமார் யாதவுக்கு 6 சிக்ஸர்கள் மட்டுமே தேவையாக உள்ளது. எனவே, குரூப் ஸ்டேஜ்களில் 3 போட்டிகளில் மட்டுமே சூர்யகுமார் யாதவ் இந்த சாதனையை படைக்க முடியும். ஆண்கள் டி20 ஆசிய கோப்பையில் ஆப்கானிஸ்தான் வீரர் நஜிபுல்லா ஜத்ரான் 13 சிக்ஸர்களுடன் அதிக சிக்ஸர்களை அடித்துள்ளார். ரோஹித் சர்மா 9 போட்டிகளில் 12 சிக்ஸர்களையும், விராட் கோலி 10 போட்டிகளில் 11 சிக்ஸர்களையும் அடித்துள்ளார். சூர்யகுமார் யாதவ் இதுவரை 8 சிக்ஸர்களுடன் பட்டியலில் எட்டாவது இடத்தில் உள்ளார்.

ALSO READ: ஆசியக் கோப்பையில் டாப் 6 அதிரடி பார்ட்னர்ஷிப்கள்.. விராட் கோலி – கே.எல். ராகுல் சாதனை!

அதிக சிக்ஸர்களை அடிப்பாரா..?


ஆசிய கோப்பையில் சூர்யகுமார் யாதவ் 6 சிக்ஸர்கள் அடித்தால், ஆப்கானிஸ்தான் வீரர் ரஹ்மானுல்லா குர்பாஸ் சவால் விடுவார். ஏனெனில் குர்பாஸ் 12 சிக்ஸர்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார். இந்த முறை 2025 ஆசிய கோப்பையில் இடம்பெற்றுள்ள சூர்யகுமார் யாதவ் மற்றும் ரஹ்மானுல்லா குர்பாஸ் விளையாடுவதைக் காணலாம். ஆசிய கோப்பைக்கான ஆப்கானிஸ்தான் அணியில் நஜிபுல்லா ஜத்ரான் சேர்க்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 2025 ஆசியக் கோப்பைப் போட்டியில் சூர்யகுமார் யாதவுக்கு ஒரு முக்கியமான போட்டியாகும். இந்தப் போட்டி டி20 உலகக் கோப்பைக்கு முந்தைய முதற்கட்டப் பரிசோதனையாக இருக்கும் என்பதால், அவர் சூர்யகுமார் யாதவிற்கு சுமை அதிகரித்துள்ளது. ஐபிஎல் போட்டியின் போது சூர்யகுமார் யாதவ் விளையாட்டு குடலிறக்கத்தால் பாதிக்கப்பட்டார். அதன் பிறகு ஜெர்மனியில் அறுவை சிகிச்சை செய்து கொண்டு தற்போது முழு உடல் தகுதியுடன் இருக்கிறார்.