AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

IND vs SA 3rd ODI: இந்தியாவுடனான தோல்விக்கு காரணம் என்ன..? டெம்பா பவுமா விளக்கம்!

India Win Series : தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் ஜெய்ஸ்வால் 111 பந்துகளில் சதம் அடித்துள்ளார். இது அவரது ஒருநாள் போட்டியில் அவர் அடித்த முதல் சதமாகும். மேலும் ஏற்கனவே டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் சதம் அடித்துள்ள அவர், தற்போது ஒரு நாள் போட்டியிலும் சதம் அடித்திருக்கிறார்.

IND vs SA 3rd ODI: இந்தியாவுடனான தோல்விக்கு காரணம் என்ன..? டெம்பா பவுமா விளக்கம்!
இந்தியா 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 06 Dec 2025 21:44 PM IST

தென்னாப்பிரிக்காவுக்கு (South Africa) எதிரான ஆட்டத்தில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 111 பந்துகளில் சதம் அடித்துள்ளார். இது ஒருநாள் போட்டியில் அவர் அடித்த முதல் சதமாகும். மேலும் ஏற்கனவே டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் சதம் அடித்துள்ள அவர், தற்போது ஒரு நாள் போட்டியிலும் சதம் அடித்திருக்கிறார். அதே நேரம் விராட் கோலி (Virat Kohli) தனது அரை சதத்தை பதிவு செய்திருக்கிறார். இந்தியா முதலில் பந்து வீச முடிவு செய்தது. தென்னாப்பிரிக்காவையும் 270 ரன்களுக்கு ஆல் அவுட்டாக்கியது. அதன் பிறகு, இந்தியா 39.5 ஓவர்களில் 1 விக்கெட் இழப்பில் இந்த சவாலை முடித்தது. இதன் மூலம், மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கில் வென்றது. இந்த வெற்றிக்குப் பிறகு, டாஸ் முக்கியமானது என்று கேப்டன் கே.எல். ராகுல் கூறினார். இதற்கிடையில், தென்னாப்பிரிக்காவின் கேப்டன் டெம்பா பவுமா தோல்விக்கான காரணத்தைக் கூறினார்.

தோல்விக்கு காரணம் என்ன..?

தென்னாப்பிரிக்க கேப்டன் டெம்பா பவுமா கூறுகையில், ”இன்றைய போட்டியை மிகவும் உற்சாகமானதாக மாற்ற விரும்பினோம். ஆனால் பேட்டிங் வரிசையில் எங்களிடம் போதுமான ரன்கள் இல்லை. பகல் வெளிச்சத்தில் விளையாடுவது எளிதாக இருந்தது. விக்கெட்டுகளை இழக்கும்போது நாங்கள் புத்திசாலித்தனமாக இருந்திருக்க வேண்டும். இந்திய அணி தங்கள் தரத்தை வெளிப்படுத்தியது. அதற்காக அவர்களுக்கு பாராட்டுகள். முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளைப் பார்த்தால், நாங்கள் அதைச் செய்தோம். எனவே இந்த போட்டியில் நாங்கள் இன்னும் புத்திசாலித்தனமாக இருந்திருக்கலாம். ஒருவேளை இன்றைய நிலைமை வேறுபட்டிருக்கலாம். 50 ஓவர் போட்டியில் நீங்கள் ஒருபோதும் ஆல் அவுட் ஆக விரும்ப மாட்டீர்கள். சில நல்ல தொடக்கங்கள், குயின்டன் 100 ரன்கள் எடுத்தார், நானும் அதைச் செய்தேன், ஆனால் எங்களுக்கு அவ்வளவு வெற்றி கிடைக்கவில்லை” என்றார்.

இதையும் படிக்க : Rohit Sharma: மீண்டும் டி20 போட்டிகளில் ரோஹித் சர்மா.. விளையாட ஆர்வம் காட்டும் ஹிட் மேன்!

தொடர்ந்து பேசிய அவர், “நாங்கள் நிச்சயமாக நிறைய கற்றுக்கொண்டோம். எப்படி விளையாடுவது என்பது பற்றி நாங்கள் நிறைய பேசுகிறோம். இந்தியாவில் தரமான சுழற்பந்து வீச்சாளர்கள் உள்ளனர். அவர்களை அழுத்தத்தில் வைப்பது ஒருபோதும் எளிதானது அல்ல. தொடரின் பெரும்பகுதியில் நாங்கள் அதைச் செய்தோம். 10 பெட்டிகள் இருந்தால், அவற்றில் 6 அல்லது 7 பெட்டிகளை வென்றுள்ளோம் என்று நினைக்கிறேன்” என்று டெம்பா பவுமா கூறினார்.

போட்டியில் நடந்தது என்ன?

முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா அணி 47.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 271 ரன்களை எடுத்தது. இந்திய அணி சார்பில், குல்தீப் யாதவ் மற்றும் பிரசித் கிருஷ்ணா ஆகியோர் தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினர்.

இதையும் படிக்க : Virat Kohli Salary: விஜய் ஹசாரே டிராபியில் விளையாடும் விராட் கோலி.. ஒருநாள் சம்பளம் இவ்வளவா?

தென்னாப்பிரிக்கா பந்து வீச்சாளர்களை துவம்சம் செய்த இந்தியா

அதனைத் தொடர்ந்து 271 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு ஆரம்பமே அமர்க்களமாக அமைந்தது. யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ரோகித் சர்மா இணைந்து தென்னாப்பிரிக்கா பந்துவீச்சாளர்களை துவம்சம் செய்தனர். 73 பந்துகளில் 75 ரன்களைக் குவித்த ரோகித் சர்மா தனது விக்கெட்டை பறிகொடுத்தார். அதன் பிறகு ஜெய்ஸ்வாலுடன் இணைந்த விராட் கோலி தன் பங்குக்கு அதிரடியாக ஆடி, 45 பந்துகளில் 65 ரன்களைக் குவித்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்து சென்றார். இந்திய அணி டாஸ் வென்றது அதற்கு பெரும் பலமாக அமைந்தது.

சுப்மன் கில் காயம் காரணமாக விலகி இருந்த நிலையில், ஜெய்ஸ்வாலின் இந்த சதம் இந்திய அணியின் புதிய நம்பிக்கையை அளித்துள்ளது.  அவரின் இந்த ஆட்டம் தொடரில் முக்கிய திருப்புமுனையாக அமைந்தது.

Follow Us