IPL 2026: சிஎஸ்கேவுக்கு அழைப்பு.. 21 வயது இளம் வீரருக்கு வாய்ப்பா..?
Ayush Vartak CSK: ஆயுஷ் வர்தக்கிற்கு தற்போது வெறும் 21 வயதே ஆகிறது. இவர் மும்பையின் வசாய் பகுதியைச் சேர்ந்தவர். இவர் ஒரு வலது கை பேட்ஸ்மேன் மற்றும் மிதவேகப் பந்துவீச்சாளர். ஐபிஎல் 2026 சீசனுக்கான மினி ஏலத்தில் ஆயுஷ் வர்தக் பங்கேற்றபோதும், எந்த அணியாலும் தேர்ந்தெடுக்கப்படவில்லை.
ஐபிஎல் 2026 சீசனில் (IPL 2026) சென்னை சூப்பர் கிங்ஸ் (Chennai Super Kings) அணியின் பாதை இதுவரை ஏற்ற இறக்கங்கள் நிறைந்ததாகவே இருந்துள்ளது. ஒரு போட்டியில் வெற்றி பெற்றால் அடுத்த போட்டியில் தோல்வியை சந்திக்கிறது. அதன்படி, இந்த சீசனில் இனி சிஎஸ்கே அணிக்கு ஒவ்வொரு போட்டியும் வாழ்வா சாவா போராட்டமாக இருக்கும். இதற்கிடையில், சென்னை அணி காயங்களால் சிரமப்பட்டு வருகிறது. நாதன் எல்லிஸ், கலீல் அகமது மற்றும் ஆயுஷ் அகமது ஆகியோர் காயம் காரணமாக அணியிலிருந்து விலக்கப்பட்டுள்ளனர். மேலும். எம்.எஸ். தோனி கெண்டைக்கால் காயம் காரணமாக இன்னும் விளையாடவில்லை. கலீலுக்குப் பதிலாக எந்த வீரர் என்பதை சென்னை அணி இன்னும் அறிவிக்கவில்லை. தற்போது சோதனைகள் நடைபெற்று வருவதால், அந்த அணி நிர்வாகம் அவருக்குப் பதிலாக யாரை எடுத்துள்ளது என்பதை அறிவிக்கக்கூடும் என்று நம்பப்படுகிறது.
ALSO READ: தட்டித்தூக்கிய ஆர்சிபி.. மோசமான நிலையில் டெல்லி.. ஐபிஎல் புள்ளி பட்டியல் விவரம்!
இளம் வீரருக்கு அழைப்பு:
ஐபிஎல் 2026 சீசனின் பருவத்தின் நடுப்பகுதி தேர்வுப் போட்டிகளில் பங்கேற்பதற்காக, மகாராஷ்டிராவைச் சேர்ந்த இளம் ஆல்-ரவுண்டர் ஒருவரை சிஎஸ்கே அணி நிர்வாகம் அழைத்துள்ளது. அந்த வீரர் வேறு யாருமல்ல 21 வயதான ஆயுஷ் வர்தக் ஆவார். தகவல்களின்படி, ஆயுஷ் வர்தக் நேற்று அதாவது 2026 ஏப்ரல் 27ம் தேதி சென்னைக்கு வந்துள்ளார். மேலும், 2026 ஏப்ரல் 28ம் தேதியான இன்று ஆயுஷ் வர்தக்கு தேர்வுப் போட்டி நடத்தப்படும். இருப்பினும், இந்த தேர்வுப் போட்டிகளில் வர்தக் மட்டுமே பங்கேற்கிறாரா அல்லது வேறு வீரர்களும் அழைக்கப்பட்டுள்ளார்களா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.




யார் இந்த ஆயுஷ் வர்தக்?
ஆயுஷ் வர்தக்கிற்கு தற்போது வெறும் 21 வயதே ஆகிறது. இவர் மும்பையின் வசாய் பகுதியைச் சேர்ந்தவர். இவர் ஒரு வலது கை பேட்ஸ்மேன் மற்றும் மிதவேகப் பந்துவீச்சாளர். ஐபிஎல் 2026 சீசனுக்கான மினி ஏலத்தில் ஆயுஷ் வர்தக் பங்கேற்றபோதும், எந்த அணியாலும் தேர்ந்தெடுக்கப்படவில்லை. முன்னதாக, இவர் சன்ரைசர்ஸ் ஹைதராபாத், மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்காகவும் தேர்வுப் போட்டிகளில் பங்கேற்றுள்ளார்.
சி.கே. நாயுடு கோப்பை (23 வயதுக்குட்பட்டோர்) தொடரின் முதல் கட்டப் போட்டியில் மும்பை அணியின் கேப்டனாக ஆயுஷ் வர்தக் இருந்துள்ளார். 2025 ஆடவர் மாநில ‘ஏ’ கோப்பையில் மும்பை அணிக்காக விளையாடிய ஆயுஷ் வர்தக், 6 இன்னிங்ஸ்களில் ஒரு சதம் மற்றும் 2 அரை சதங்கள் உட்பட 363 ரன்கள் எடுத்தார். இதில், 26 சிக்ஸர்களும், 25 பவுண்டரிகளும் அடங்கும். 39 சிக்ஸர்களை அடித்த முகுல் சௌத்ரிக்கு அடுத்தபடியாக, இத்தொடரில் அதிக சிக்ஸர்களை அடித்த இரண்டாவது வீரர் இவரே ஆவார்.
ஆயுஷ் 2024-25 சி.கே. நாயுடு கோப்பையில் 9 போட்டிகளில் 770 ரன்கள் எடுத்தார். 2023 கூச் பெஹார் கோப்பையில், ஆயுஷ் வர்தக் 8 போட்டிகளில் 32 விக்கெட்டுகளை வீழ்த்தி மும்பை அணிக்காக அதிக விக்கெட்டுகளை எடுத்தவர் ஆனார்.
ALSO READ: தடுமாறும் சிஎஸ்கே.. கடினமாகும் பயணம்.. பிளே ஆஃப் செல்ல இதுதான் ஒரே வழி!
புள்ளி அட்டவணையில் சிஎஸ்கே-வின் நிலை:
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல் 2026 சீசனில் இதுவரை 8 போட்டிகளில் 3ல் வெற்றி பெற்று 5ல் தோல்வியடைந்துள்ளது. இருப்பினும், கடந்த சில போட்டிகளில் அந்த அணி சிறப்பாக விளையாடி வருகிறது. 6 புள்ளிகளுடன் புள்ளி அட்டவணையில் ஆறாவது இடத்தில் உள்ள அந்த அணியின் நிகர ரன் ரேட் -0.121 ஆகும். லீக் சுற்றில் இன்னும் 6 போட்டிகளே மீதமுள்ள நிலையில், தங்களது பிளேஆஃப் வாய்ப்புகளை வலுப்படுத்த குறைந்தது 5 போட்டியில் வெற்றி பெற வேண்டும்.