IND vs WI Test: வீழ்ந்த வெஸ்ட் இண்டீஸ்.. கேப்டனாக இந்திய மண்ணில் டெஸ்ட் தொடரை வென்ற கில்!
IND beat WI in second Test: முதல் இன்னிங்சில் 175 ரன்கள் எடுத்த யஷஸ்வி ஜெய்ஸ்வால், இரண்டாவது இன்னிங்சில் 8 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதைத் தொடர்ந்து கே.எல். ராகுல் மற்றும் சாய் சுதர்ஷன் இடையே 79 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைந்தது. போட்டியின் இறுதி நாளில் 39 ரன்கள் எடுத்திருந்தபோது ரோஸ்டன் சேஸிடம் கேட்ச் கொடுத்து சாய் சுதர்ஷன் வெளியேறினார்.

டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் நடைபெற்ற 2வது டெஸ்டில் இந்திய அணி, வெஸ்ட் இண்டீஸ் அணியை (Ind vs Wi) 7 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது. இதன் மூலம், இந்திய அணி தொடரை 2-0 என வென்றுள்ளது. இரண்டாவது இன்னிங்ஸில் 121 ரன்கள் என்ற இலக்கை நிர்ணயித்த இந்தியா, முதல் ஒரு மணி நேரத்திற்குள் வெற்றியை அடைந்தது. இது கேப்டனாக சுப்மன் கில்லின் முதல் டெஸ்ட் தொடர் வெற்றியாகும். இந்தியா தனது முதல் இன்னிங்ஸை 518 ரன்களுக்கு டிக்ளேர் செய்தது. அடுத்ததாக முதல் இன்னிங்ஸை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 248 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதனால் இந்தியா ஃபாலோ ஆன் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதை தொடர்ந்து, இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 390 ரன்கள் எடுத்து, இந்தியாவுக்கு 121 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது. இந்த சேஸிங்கில் கே.எல். ராகுல் (KL Rahul) அரைசதம் அடித்தார்.
முதல் இன்னிங்ஸில் ஜெய்ஸ்வால் – கில் சதம்:
அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் உள்ள ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருந்ததால், சுப்மன் கில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்யத் தேர்ந்தெடுத்தார். முதல் நாளில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் தனது சதத்தை எட்டினாலும், கே.எல். ராகுல் 38 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து, ஜெய்ஸ்வால் சாய் சுதர்ஷனுடன் 193 ரன்கள் கூட்டணியை பகிர்ந்த நிலையில், சுதர்ஷன் 87 ரன்களில் ஆட்டமிழந்தார். இரண்டாவது நாளில் ஜெய்ஸ்வால் இரட்டை சதத்தை அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கில்லுடன் ஏற்பட்ட ரன் அவுட் குழப்பத்தால் 175 ரன்களில் ரன் அவுட் ஆனார். இந்த இன்னிங்ஸில் ஜெய்ஸ்வால் 22 பவுண்டரிகளை அடித்தார்.




ALSO READ: ஆஸ்திரேலியாவை ஆட்டம் காண வைக்க தயார்.. தீவிர பயிற்சியில் ரோஹித் சர்மா!
இரண்டாவது நாளில், கேப்டன் சுப்மன் கில் தனது சதத்தை எட்டி கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்தியா தனது முதல் இன்னிங்ஸை 518/5 என்று டிக்ளேர் செய்தது. நிதிஷ் குமார் ரெட்டி 43 ரன்களும், துருவ் ஜூரெல் 44 ரன்களும் எடுத்தனர்.
முதல் இன்னிங்சில் குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுகள்:
𝐆𝐀𝐌𝐄. 𝐒𝐄𝐓. 𝐃𝐎𝐍𝐄 ✅
A comfortable 7️⃣-wicket victory for #TeamIndia in Delhi ✌️
With that they take the series 2️⃣-0️⃣ 🏆
Shubman Gill registers his first series win as Captain 👏
Scorecard ▶ https://t.co/GYLslRyLf8#INDvWI | @IDFCFIRSTBank pic.twitter.com/IwQFHmSQ5O
— BCCI (@BCCI) October 14, 2025
மூன்றாம் நாளின் இரண்டாவது அமர்வில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் முதல் இன்னிங்ஸ் 248 ரன்களுக்குச் சுருண்டது. குல்தீப் யாதவ் வெஸ்ட் இண்டீஸ் வீரர்களான அலிக் அதனேஸ், ஷாய் ஹோப், டெவின் இம்லாச், ஜஸ்டின் கிரீவ்ஸ் மற்றும் ஜெய்டன் சீல்ஸ் ஆகியோரை வீழ்த்தி 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். ரவீந்திர ஜடேஜாவும் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதேநேரத்தில், முதல் இன்னிங்ஸில் முகமது சிராஜ் மற்றும் ஜஸ்பிரித் பும்ரா தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.
வெஸ்ட் இண்டீஸ் அணி ஃபாலோ-ஆனைத் தவிர்க்கத் தவறியதால், இந்தியா வெஸ்ட் இண்டீஸை மீண்டும் பேட்டிங் செய்ய வைத்தது. 3வது நாள் ஆட்டநேர முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 35 ரன்களில் இரண்டு விக்கெட்டுகளை (தேஜ்நரைன் சந்தர்பால் மற்றும் அலிக் அதனேஸ்) இழந்தது. ஆனால் ஜான் கேம்பல் மற்றும் ஷாய் ஹோப் ஆகியோர் 177 ரன்கள் கூட்டணியைப் பகிர்ந்து கொண்டு இன்னிங்ஸை நிலைநிறுத்தினர்.
ஜான் கேம்பல் 115 ரன்களும், ஷாய் ஹோப் 103 ரன்களும் எடுத்தனர். இது கேம்பலின் முதல் டெஸ்ட் சதமாகும். மேலும் 2002 க்குப் பிறகு இந்தியாவில் டெஸ்ட் சதம் அடித்த முதல் வெஸ்ட் இண்டீஸ் பேட்ஸ்மேன் என்ற பெருமையைப் பெற்றார். 2017 க்குப் பிறகு ஹோப் தனது முதல் டெஸ்ட் சதத்தை அடித்தார்.
ALSO READ: வெஸ்ட் இண்டீஸ் போராட்டம் வீண்! வெற்றி விளிம்பில் இந்திய அணி.. கலக்கிய பும்ரா!
இந்தியாவுக்கு 121 ரன்கள் வெற்றி இலக்கு:
கேம்பல் மற்றும் ஹோப்பின் சதங்களைத் தொடர்ந்து, ரோஸ்டன் சேஸ் மற்றும் ஜஸ்டின் கிரீவ்ஸ் ஆகியோரும் சிறப்பாக பேட்டிங் செய்து வெஸ்ட் இண்டீஸ் அணியை இன்னிங்ஸ் தோல்வியிலிருந்து காப்பாற்றினர். சேஸ் 40 ரன்களும், கிரீவ்ஸ் 50 ரன்களும் எடுத்தனர். ஜெய்டன் சீல்ஸ் 32 ரன்களை எடுத்து, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 121 ரன்கள் என்ற இலக்கை நிர்ணயித்தது. இந்த இலக்கை இந்திய அணி எளிதாக துரத்தி வெற்றி பெற்றது.
முதல் இன்னிங்சில் 175 ரன்கள் எடுத்த யஷஸ்வி ஜெய்ஸ்வால், இரண்டாவது இன்னிங்சில் 8 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதைத் தொடர்ந்து கே.எல். ராகுல் மற்றும் சாய் சுதர்ஷன் இடையே 79 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைந்தது. போட்டியின் இறுதி நாளில் 39 ரன்கள் எடுத்திருந்தபோது ரோஸ்டன் சேஸிடம் கேட்ச் கொடுத்து சாய் சுதர்ஷன் வெளியேறினார்.