Rishabh Pant Century: SENA நாடுகளில் 6 டெஸ்ட் சதம்.. அனைத்திலும் இந்திய அணி தோல்வி.. ரிஷப் பண்டை துரத்தும் துயரம்!
IND vs ENG 1st Test: ரிஷப் பண்ட் SENA நாடுகளில் ஆடிய 6 டெஸ்ட் போட்டிகளில் சதம் அடித்த போதிலும், இந்தியா ஒரு போட்டியில்கூட வெல்லவில்லை. இந்தத் தோல்விகள் இந்திய கிரிக்கெட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது சாதனைப் பங்களிப்பு இருந்தும் இந்திய அணி தொடர்ந்து தோல்வியை சந்தித்தது. இந்த அதிர்ச்சி தரும் தகவல் இந்திய கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ரிஷப் பண்ட்
ஹெடிங்கில் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி (Indian Cricket Team) முதல் டெஸ்டின் முதல் (IND vs ENG 1st Test) இன்னிங்ஸில் இங்கிலாந்து அணியை விட முன்னிலை பெற்றிருந்தாலும் 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. இந்த போட்டியில், இந்தியா பல சாதனைகளை முறியடித்து வரலாற்று சாதனைகளை படைத்தது. போட்டி 4வது நாள் வரை இந்தியாவுக்கு சாதகமாக இருந்தது, ஆனால், கடைசி நேரத்தில் போட்டியை கைவிட்டு தோல்வியை சந்தித்தது. டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக, இந்திய வீரர்கள் ஒரே போட்டியில் ஐந்து சதங்களை அடித்தனர். யஷஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மன் கில் மற்றும் கே.எல். ராகுல் ஆகியோர் சதம் அடித்தனர். அதேநேரத்தில், ரிஷப் பண்ட் (Rishabh Pant) 2 இன்னிங்ஸிலும் சதம் அடித்தபோதும், இந்திய அணி வெற்றியை ருசிக்கத் தவறிவிட்டது. இந்தநிலையில், SENA நாடுகளில் இந்திய வீரர் ரிஷப் பண்ட் சதம் விளாசிய 6 போட்டிகளில் ஒன்றில் கூட இந்திய அணி வெற்றி பெறவில்லை.
ஒரு போட்டியில் கூட வெற்றிபெறவில்லை:
Rishabh Pant has 6 away Test hundreds
None of them have come in a winning cause so far 😲 pic.twitter.com/6AzG3Elgb0
— ESPNcricinfo (@ESPNcricinfo) June 24, 2025
SENA நாடுகளில் ரிஷப் பண்ட் டெஸ்ட் சதம் அடித்த போதெல்லாம், இந்திய அணி ஒருபோதும் வென்றதில்லை. SENA என்பது தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா நாடுகளை குறிக்கும் ஒரு சொல்லாகும். SENA நாடுகளில் ரிஷப் பண்ட் இதுவரை 6 சதங்களை அடித்துள்ளார். மேலும், இந்திய அணி 4 போட்டிகளில் தோல்வியையும், ஒரு போட்டி டிராவிலும் முடிந்தது. 2018ம் ஆண்டு இங்கிலாந்தில் உள்ள ஓவலில் ரிஷப் பண்ட் 114 ரன்கள் எடுத்தார். இந்த போட்டியில் இந்திய அணி 118 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.
இதைதொடர்ந்து, ரிஷப் பண்ட் 2019ம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் சிட்னியில் ஆட்டமிழக்காமல் 159 ரன்கள் குவித்தார். இந்த போட்டி டிராவில் முடிந்தது. 2022ம் ஆண்டு தென்னாப்பிரிக்காவின் கேப் டவுனில் ரிஷப் பண்ட் 100 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இருப்பினும், இந்த போட்டியிலும் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. அதே 2022ம் ஆண்டு இங்கிலாந்தின் பர்மிங்காமில் ரிஷப் பண்ட் 146 ரன்கள் குவித்தார். இந்த போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.
4வது இந்திய வீரர் என்ற மோசமான சாதனை:
தோல்வியடைந்த டெஸ்ட் போட்டியில் 2 இன்னிங்ஸ்களிலும் சதம் அடித்த 4வது இந்திய வீரர் என்ற மோசமான சாதனையை ரிஷப் பண்ட் பெற்றுள்ளார். கடந்த 2014ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் 2 இன்னிங்ஸ்களிலும் முன்னாள் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி சதம் அடித்தார். இந்த போட்டியில் இந்திய அணி தோல்வியை சந்தித்தது. இதற்குமுன்பு, கடந்த 1978ம் ஆண்டு இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதியது. பாகிஸ்தான் அணிக்கு எதிரான இந்த போட்டியில் சுனில் கவாஸ்கர் 2 இன்னிங்ஸ்களிலும் சதம் அடித்திருந்தாலும் இந்தியா பாகிஸ்தானிடம் தோன்றது. 1948ம் ஆண்டு ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விஜய் ஹசாரே 2 இன்னிங்ஸ்களிலும் சதம் அடித்தார். இதிலும், இந்திய அணி தோல்வியை சந்தித்தது.