RCB IPL 2025: கூட்ட நெரிசலில் பறிபோன உயிர்! ஆர்சிபி அணியை தடை செய்கிறதா பிசிசிஐ..?
RCB IPL Victory Parade Tragedy: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணியின் ஐபிஎல் 2025 வெற்றி ஊர்வலத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்தனர். இதனால் RCB மீது FIR பதிவு செய்யப்பட்டுள்ளது. கர்நாடக கிரிக்கெட் சங்க அதிகாரிகள் ராஜினாமா செய்துள்ளனர். பிசிசிஐ, RCB அணியின் எதிர்காலம் குறித்து முடிவு எடுக்க உள்ளது. தடை விதிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஐபிஎல் 2025-ல் (IPL 2025) ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வரலாறு படைத்துள்ளது. 18 வருட காத்திருப்புக்குப் பிறகு, ஐபிஎல்லில் சாம்பியன் பட்டத்தை வென்றது. இதற்கிடையில், ஐபிஎல் வென்ற பிறகு பெங்களூருவில் உள்ள எம். சின்னசாமி ஸ்டேடியத்திற்கு (Chinnaswamy Stadium) வெளியே ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணிக்காக ஒரு பிரமாண்டமான வெற்றி ஊர்வலம் மற்றும் கொண்டாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. இருப்பினும், இந்த வெற்றி விழாவின் போது, ஒரு பெரிய கூட்டம் கூடியதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 11 பேர் உயிரிழந்த நிலையில், பல பேர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவத்திற்குப் பிறகு, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மீது எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் கர்நாடக கிரிக்கெட் சங்கத்தின் இரண்டு அதிகாரிகள் ராஜினாமா செய்துள்ளனர். இந்த வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சிக்கலில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி:
கூட்ட நெரிசலில் சிக்கி பலர் இறந்ததை அடுத்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தற்போது பெரும் நெருக்கடியில் சிக்கியுள்ளது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஐபிஎல் 2026 இல் பங்கேற்குமா இல்லையா என்பது குறித்து பிசிசிஐ ஒரு பெரிய முடிவை எடுக்கக்கூடும் என்று ஊகிக்கப்படுகிறது.




பெங்களூரு அணியை பிசிசிஐ தடை செய்யுமா?
Like, RT, and comment 🗿
If you think RCB should be banned from the IPL pic.twitter.com/M90G49b3Gm— Muftdaal Nehra (@muftdaal_nehra) June 5, 2025
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் வெற்றி ஊர்வலத்தின்போது நடந்த விபத்து குறித்து தற்போது விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவத்தால் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் நிர்வாகத்தின் நேரடி தொடர்பு இருப்பதை தொடர்ந்து, பிசிசிஐ நியாயமான நிலைப்பாட்டை எடுத்து ஆர்சிபி அணி மீது நடவடிக்கை எடுக்கும் என நம்பப்படுகிறது.
ஐபிஎல்லில் ஒவ்வொரு அணியும் வணிகம் செய்தாலும், அவர்களின் விதிகள் பிசிசிஐயின் ஒப்பந்தங்களால் நிர்வகிக்கப்படுகின்றன. இதில் பொது பாதுகாப்பு தொடர்பான பல நிபந்தனைகள் உள்ளன. இந்த நிபந்தனைகளை மீறுவது கடுமையான விளைவுகளுக்கு வழிவகுக்கும்.
என்ன நடந்தது?
கடந்த 2025 ஜூன் 3ம் தேதி பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஐபிஎல் 2025ல் தனது முதல் ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை வென்றது. இதன் பிறகு, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி அடுத்த நாளான 2025 ஜூன் 4ம் தேதி பெங்களூரு நகரத்திற்கு சென்று, வெற்றி ஊர்வலம் ஏற்பாடு செய்யப்பட்டது. தங்களுக்குப் பிடித்த அணியை வரவேற்க லட்சக்கணக்கான ரசிகர்கள் மைதானத்திற்கு வெளியே கூடியிருந்தனர்.
இருப்பினும், கூட்டம் கட்டுப்பாட்டை மீறி திடீரென கூட்ட நெரிசலும் குழப்பம் ஏற்பட்ட்டு, கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் கர்நாடகாவுக்கு மட்டுமல்ல, முழு இந்தியாவிற்கும் ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இப்போது அனைவரின் கவனமும் பிசிசிஐயின் அடுத்த முடிவில் உள்ளது. அதன்படி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தடை செய்யும் முடிவு எடுக்கப்படுமா என்பது விரைவில் தெளிவாகும்.