AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Vastu Tips: நான்கு திசையில் 4 பொருட்கள்.. செல்வம் கொட்டும்..

வாஸ்து சாஸ்திரம் மனிதர்களின் வாழ்க்கையில் மிக முக்கியமானது. நிதி சார்ந்த பிரச்சனைகளைத் தீர்த்து, வீட்டில் பணப்புழக்கத்தை அதிகரிக்க வாஸ்து பல வழிகளைச் சொல்கிறது. செல்வத்தை ஈர்க்கும் பரிகாரங்கள் மகிழ்ச்சியையும் செழிப்பையும் தரும். சரியான திசையில் வைப்பதன் மூலம் நேர்மறை ஆற்றல் பெருகி, வீட்டில் நிரந்தர செல்வம் குவியும் என நம்பப்படுகிறது.

Vastu Tips: நான்கு திசையில் 4 பொருட்கள்.. செல்வம் கொட்டும்..
வாஸ்து டிப்ஸ்
Petchi Avudaiappan
Petchi Avudaiappan | Updated On: 08 Oct 2025 10:30 AM IST

வாஸ்து சாஸ்திரம் ஜோதிடத்தைப் போன்று மனிதர்களின் வாழ்க்கையிலும், ஆன்மிக நம்பிக்கையிலும்  மிகவும் முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. வீடு, அலுவலகம் போன்ற நிலம் சார்ந்த பிரச்சினைகளைத் தீர்க்க வாஸ்து சாஸ்திரம் பல ஆலோசனைகளை வழங்குகிறது. ஒருவரின் வாழ்க்கையில் பல பிரச்சினைகள் எழுவது இயல்பான ஒன்று தான். பிரச்னை எழும் இடத்திலும் தீர்வுகளும் இருக்கும். அத்தகைய பிரச்னைகளில் நிதி சார்ந்தவையும்  பிரச்சினைகளும் அவற்றில் ஒன்று. எனவே, வீட்டில் பணப்புழக்கத்தை கணிசமாக அதிகரிக்கக்கூடிய சில வாஸ்து சாஸ்திர விஷயங்களைப் பற்றி நாம் இங்கு காணலாம்.

செல்வத்தை பெருக்க வாஸ்து பரிகாரங்கள்

சில வாஸ்து விஷயங்களை பின்பற்றுவது வீட்டிற்கு செல்வத்தை கொண்டு வருவது மட்டுமல்லாமல், மகிழ்ச்சியையும் செழிப்பையும் தருகின்றன. நிதி சிக்கல்கள் முடிந்த பிறகு, வீட்டில் நிரந்தர சொத்துக்கள் குவியத் தொடங்கும் என்பது ஐதீகமாகும். வீட்டில் உள்ள வாஸ்து குறைபாடுகள் நீங்கும். நம்மை சுற்றிலும் நேர்மறையாக மாறும். வீட்டிற்குள் செழிப்பு வரத் தொடங்குகிறது. உண்மையில், இந்த வாஸ்து விதிகள் நான்கு திசைகளுடன் தொடர்புடையவை. சில பொருட்களை நான்கு திசைகளிலும் வைப்பது வீட்டில் உள்ள நிதி சிக்கல்களை நீக்குவதாக நம்பப்படுகிறது.

Also Read:   மாலையில் இதெல்லாம் செய்யாதீங்க.. லட்சுமி தேவி அருள் கிடைக்காது!

 எந்த திசையில் என்ன வைக்க வேண்டும்?

உங்கள் வீட்டில் பணப்புழக்கத்தை அதிகரிக்க விரும்பினால், செல்வம் பெருக வேண்டுமென்றால், உங்கள் வீட்டின் தெற்கு திசையில் ஒரு மஞ்சள் சாமந்தி பூவை   வைக்கவும். இதைச் செய்வதன் மூலம், பணப்புழக்கம் அதிகரிப்பதை நீங்கள் காண முடியும். அதேசமயம் குபேர சிலையை வீட்டின் வடக்கு திசையில் வைக்க வேண்டும். இது முடியாவிட்டால், குபேரரின் படத்தை வடக்கு திசையில் வைக்க வேண்டும்.

வீட்டின் கிழக்கு திசையில் ஒரு சிறிய படிக மீனை வைக்க வேண்டும். முடிந்தால் நீங்கள் ஒரு வெள்ளி மீனையும் அங்கு வைத்திருக்கலாம். இது மிகவும் புனிதமானது. இது வீட்டிற்கு செல்வத்தைத் தருவதாக நம்பப்படுகிறது.
வீட்டின் மேற்குப் பகுதி அனுமனின் வசிப்பிடமாகக் கருதப்படுகிறது. அனுமானுக்குச் சொந்தமான ஒரு சிறிய பொருட்களை இந்த திசையில் வைக்க வேண்டும். இது வீட்டில் உள்ள அனைத்து பிரச்சனைகளையும் நீக்கும். அனுமனின் ஆசீர்வாதங்களையும் தரும் என்பது ஐதீகமாக பார்க்கப்படுகிறது.

Also Read:   பணப் பிரச்னைகளை போக்கும் ஏலக்காய் வழிபாடு.. செய்வது எப்படி?

இந்த வாஸ்து பரிகாரங்களைப் பின்பற்றினால், நிதிப் பிரச்சினைகள் தீரும். வீட்டில் பணப்புழக்கம் அதிகரிக்கும். பணம் சம்பாதிப்பதற்கான புதிய வழிகளையும் வாய்ப்புகளையும் நீங்கள் காண்பீர்கள் என சாஸ்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

(ஆன்மிக மற்றும் வாஸ்து சாஸ்திர நம்பிக்கையின் அடிப்படையில் இக்கட்டுரையில் உள்ள தகவல்கள் இடம் பெற்றுள்ளது. இதற்கு அதிகாரப்பூர்வ விளக்கம் இல்லை. அதனால் டிவி9 தமிழ் பொறுப்பேற்காது)

Follow Us