இந்தியாவில் ஒரு நிறுவனத்தின் வேலைவாய்ப்பு விவகாரம் தற்போது சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாட் டேட்டிங் என்ற நிறுவனத்தின் சிஇஓ ஜஸ்வீர் சிங், ஒரு டெக்கி வேலைக்கு சேரும் இரண்டு நாட்களுக்கு முன் சம்பளத்தை உயர்த்த கோரியதாக கூறி தனது அதிருப்தியை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். தகவலின்படி, அந்த டெவலப்பர் முன்பு 21 லட்சம் ரூபாய் வருட சம்பளம் பெற்றிருந்தார். இந்த நிலையில், நிறுவனம் அவருக்கு 28 லட்சம் ரூபாய் சம்பளமாக நிர்ணயித்தது. இது முன்பு வாங்கிய சம்பளத்தை விட சுமார் 33 சதவிகிதம் உயர்வு என்பதால், அந்த வேட்பாளர் அதை ஏற்றுக்கொண்டு வேலைக்கு சேர ஒப்புக்கொண்டார்.