AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

புதுப்பொலிவுடன் பக்தர்கள் பயன்பாட்டிற்கு வந்தது ஸ்ரீரங்கம் கிழக்குக் கோபுரம்!

Srirangam Temple's Eastern Gopuram: மூடப்பட்டிருந்த கிழக்குக் கோபுர வாயில் பக்தர்கள் பயன்பாட்டிற்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் இந்நிகழ்வில் பங்கேற்று கோபுர வாயிலைத் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பிரத்திக் தாயள் மற்றும் கோவில் உயர் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

புதுப்பொலிவுடன் பக்தர்கள் பயன்பாட்டிற்கு வந்தது ஸ்ரீரங்கம் கிழக்குக் கோபுரம்!
ஸ்ரீரங்கம் கிழக்குக் கோபுரம்Image Source: pinrest
Sivasankari Bose
Sivasankari Bose | Published: 10 Aug 2026 14:06 PM IST

108 வைணவத் திருத்தலங்களில் முதன்மையான ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் திருக்கோவிலின் கிழக்குக் கோபுரத்தின் ஒரு பகுதி கடந்த 2023-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இடிந்து விழுந்தது. இதனைத் தொடர்ந்து, பக்தர்களின் கோரிக்கையை ஏற்று கோவையைச் சேர்ந்த ஜெயபால் என்பவர் ரூ.2 கோடி மதிப்பீட்டில் கோபுரத்தைச் சீரமைக்க முன்வந்தார். பழமை மாறாமல் புனரமைக்கும் பணிகள் கடந்த 3 ஆண்டுகளாகத் தீவிரமாக நடைபெற்று வந்தன. தற்போது பணிகள் முழுமையாக நிறைவடைந்த நிலையில், மூடப்பட்டிருந்த கிழக்குக் கோபுர வாயில் பக்தர்கள் பயன்பாட்டிற்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் இந்நிகழ்வில் பங்கேற்று கோபுர வாயிலைத் திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பிரத்திக் தாயள் மற்றும் கோவில் உயர் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர். இதன் மூலம் 3 ஆண்டுகளுக்குப் பிறகு பக்தர்கள் மீண்டும் கிழக்கு வாயில் வழியாகத் தடையின்றிச் சென்று இறைவனைத் தரிசிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

கோபுர இடிபாடும் சீரமைப்புப் பணிகளும்

108 வைணவத் திருத்தலங்களில் முதன்மையான பூலோக வைகுண்டம் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் திருக்கோவிலின் கிழக்கு பகுதியில் தாமோதர கிருஷ்ணன் கோவில் கோபுரம் அமைந்துள்ளது. இக்கோபுரத்தின் வளைவுப் பகுதி கடந்த 2023-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் திடீரென இடிந்து விழுந்தது. இதனையடுத்து பழமை மாறாமல் கோபுரத்தைச் சீரமைக்க பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர். அதனை ஏற்று, கோவையைச் சேர்ந்த ஜெயபால் என்பவர் ரூ.2 கோடி சொந்தச் செலவில் புனரமைப்புப் பணிகளை ஏற்று நடத்த முன்வந்தார்.

புதுப்பிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு ஒப்படைப்பு

கடந்த 3 ஆண்டுகளாகத் தீவிரமாக நடைபெற்ற இந்தப் புனரமைப்புப் பணியில், கோபுரத்தின் முதல் நான்கு நிலைகளும் சேதமின்றிப் பழமை மாறாமல் சீரமைக்கப்பட்டன. சீரமைப்புப் பணிகள் முழுமையாக நிறைவடைந்ததைத் தொடர்ந்து, மூடப்பட்டிருந்த கிழக்குக் கோபுர வாயில் பொதுமக்கள் மற்றும் பக்தர்களின் பயன்பாட்டிற்காக மீண்டும் திறந்து வைக்கப்பட்டது.

Also Read: நிம்மதி பெருக: ஆடி அமாவாசை 2026 அன்று இதை செய்ய தவறாதீர்கள்!

சிறப்புத் திறப்பு விழா

பழமை மாறாமல் கோபுரத்தைச் சீரமைக்க பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர். அதனை ஏற்று, கோவையைச் சேர்ந்த ஜெயபால் என்பவர் ரூ.2 கோடி சொந்தச் செலவில் புனரமைப்புப் பணிகளை ஏற்று நடத்த முன்வந்தார். இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் இந்நிகழ்வில் கலந்துகொண்டு, கிழக்கு கோபுர வாயிலை முறைப்படி திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பிரத்திக் தாயள், கூடுதல் இணை ஆணையர் பொன்மணி, கோவில் ஆணையர் சிவராமன் மற்றும் முக்கிய அரசு அதிகாரிகள் திரளாகக் கலந்துகொண்டனர்.

பொறுப்புத்துறப்பு: இந்தக்கட்டுரை ஆன்மிக நம்பிக்கையின்படி எழுதப்பட்டது. இது அறிவியல் பூர்வமாக நிரூபணம் ஆனது அல்ல.

Follow Us