AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தீய சக்திகளை விரட்டும் திரிசூல வழிபாடு: வீட்டில் வைக்கும் போது கவனிக்க வேண்டியவை!

Trishul Worship: சைவ மற்றும் சாக்த வழிபாடுகளில் மிக முக்கியத்துவம் வாய்ந்த திரிசூலம், மனிதனின் ஆணவம், கன்மம், மாயை ஆகிய மும்மலங்களை அழித்து வாழ்வில் முக்தியையும் பேரானந்தத்தையும் வழங்கக்கூடிய உன்னத ஆன்மிக ஆயுதமாகக் கருதப்படுகிறது. தங்கம், வெள்ளி, செம்பு அல்லது பித்தளையிலான சிறிய அளவிலான திரிசூலத்தை வீட்டில் வைத்து, அதற்குத் தினசரி அல்லது செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் முறையான அபிஷேகம் செய்து, சந்தனம், குங்குமம் மற்றும் மலர்களால் அலங்கரித்து வழிபடுவது அவசியமாகும்.

தீய சக்திகளை விரட்டும் திரிசூல வழிபாடு: வீட்டில் வைக்கும் போது கவனிக்க வேண்டியவை!
வீட்டில் சூலத்தை நிறுவும் வழிமுறை
Sivasankari Bose
Sivasankari Bose | Published: 02 Jul 2026 14:25 PM IST

சைவ மற்றும் சாக்த வழிபாடுகளில் மிக முக்கியமான அடையாளமாகத் திரிசூலம் விளங்குகிறது. அனைத்து அம்மன் மற்றும் சிவன் ஆலயங்களில் இறைவனின் முதன்மை ஆயுதமாக இது காட்சியளிக்கிறது. இதன் மூன்று கூர்மையான பகுதிகள் இச்சா சக்தி, கிரியா சக்தி மற்றும் ஞான சக்தி ஆகிய முப்பெரும் ஆற்றல்களைப் பிரதிபலிக்கின்றன. மனித வாழ்வில் தடைகளாக இருக்கும் ஆணவம், கன்மம், மாயை ஆகிய மும்மலங்களை வேரறுத்து, ஆன்மாவிற்கு முக்தியை வழங்கும் உன்னத சக்தியாக இந்த வழிபாடு ஆன்மிகப் பெரியோர்களால் போற்றப்படுகிறது.

வீட்டில் வைப்பதற்கான அளவுகளும் உலோகங்களும்

திரிசூலத்தை வீட்டில் வைத்து வழிபட விரும்புவோர் தங்கம், வெள்ளி, பித்தளை அல்லது செம்பு போன்ற புனித உலோகங்களால் ஆன சூலத்தைத் தேர்ந்தெடுக்கலாம். அவரவர் வசதி மற்றும் விருப்பத்திற்கு ஏற்ப உலோகங்களை முடிவு செய்யலாம் என்றாலும், வீட்டில் வைக்கும் போது அதன் அளவு சிறியதாக இருப்பது மிகவும் நல்லது. பூஜை அறையில் இருக்கும் மற்ற சுவாமி சிலைகளின் உயரத்திற்குப் பொருத்தமாக இதனை அமைப்பது சிறந்தது. சிறிய அளவிலான சூலமாக இருக்கும் பட்சத்தில், அதற்குத் தினசரி தூய்மைப் பணிகள் செய்வதற்கும் பூக்களால் அலங்கரிப்பதற்கும் எளிதாக இருக்கும்.

வழிபாட்டு முறைகளும் பராமரிப்பும்

சூலத்தை வெறும் காட்சிப் பொருளாகவோ அல்லது அலட்சியமாகவோ வீட்டில் போட்டு வைப்பது ஆன்மிக ரீதியாகக் கடுமையான சோதனைகளைத் தரும் என்று எச்சரிக்கப்படுகிறது. ஆயுதமாக இருந்தாலும் அதில் சிவனும் அம்பிகையும் உறைந்திருப்பதாக ஐதீகம். எனவே, தினசரி அல்லது வாரந்தோறும் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் திரிசூலத்திற்குத் தூய்மையான நீரால் அபிஷேகம் செய்ய வேண்டும். பின்னர் சந்தனம் மற்றும் குங்குமத்தால் பொட்டிட்டு, வாசனை மலர்களால் அலங்கரித்து முழு மனதுடன் ஆராதனை செய்ய வேண்டும்.

வீட்டில் சூலத்தை நிறுவும் வழிமுறைகள்

பூஜை அறையில் சுவாமி சிலைகள் இருந்தால், அவற்றின் மீது சாய்ந்தவாறு சூலத்தை வைக்கலாம். சிலைகள் இல்லாத பட்சத்தில், இறைவனின் புகைப்படங்களுக்கு அருகில் சாற்றி வைக்கலாம். இந்த இரண்டு வசதிகளும் இல்லாதவர்கள், ஒரு சிறிய பாத்திரத்தில் அல்லது செம்பில் தூய்மையான நெல்லை நிரப்பி, அதற்கு நடுவில் திரிசூலத்தை நேராக நிற்குமாறு நட்டு வைத்து வழிபடலாம். ஒரு குழந்தையைப் பேணுவது போல அன்போடும் பக்தியோடும் இந்த வழிபாட்டைத் தொடர்ந்து செய்து வரும்போது, தீய சக்திகள் யாவும் விலகி, வீட்டில் உள்ள எதிர்மறை எண்ணங்கள் மறைந்து, வாழ்வில் நிம்மதியும் வியக்கத்தக்க நன்மைகளும் உண்டாகும்.

Follow Us