AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

குரு பார்வையால் இரட்டை யோகம்: அதிர்ஷ்டம் குவியும் ராசிகள் என்ன?

Guru Transit 2026: குரு பகவான் மிதுன ராசியில் இருந்து கடக ராசிக்கு பெயர்ச்சி அடைந்தது ஜோதிட ரீதியாக முக்கிய நிகழ்வாக கருதப்படுகிறது. கடகத்தில் அமர்ந்துள்ள குரு தனது 5, 7, 9 பார்வைகளால் விருச்சிகம், மகரம் மற்றும் மீன ராசிகளை ஆசீர்வதிக்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு தொழில், வருமானம், குடும்பம் மற்றும் அதிர்ஷ்டத்தில் சாதகமான பலன்கள் கிடைக்கும் என நம்பப்படுகிறது.

குரு பார்வையால் இரட்டை யோகம்: அதிர்ஷ்டம் குவியும் ராசிகள் என்ன?
அதிர்ஷ்டம் குவியும் ராசிகள்Image Source: tv9
Sivasankari Bose
Sivasankari Bose | Published: 26 May 2026 13:10 PM IST

கோவில்களில் காலம் காலமாகப் பின்பற்றப்பட்டு வரும் ஆகம விதிகளும், வாக்கிய பஞ்சாங்க கணிப்புகளும் அடிப்படையாக கொண்டு இன்று (2026 மே 26, செவ்வாய்க்கிழமை) குரு பெயர்ச்சி சிறப்பாக நடைபெற்றது. நவகிரகங்களில் மிகச் சுபமான கிரகமாகக் கருதப்படும் குரு பகவான், இதுவரை சஞ்சரித்து வந்த மிதுன ராசியிலிருந்து வெளியேறி, கடக ராசிக்குள் பிரவேசித்துள்ளார். ஜோதிடத்தில் குரு பெயர்ச்சி என்பது மிக முக்கியமான மாற்றமாகக் கருதப்படுவதால், அதன் தாக்கம் ஒவ்வொரு ராசிக்கும் தனித்தன்மையுடன் அமையும் என நம்பப்படுகிறது. குறிப்பாக குரு பகவான் எந்த ராசியில் அமர்கிறார் என்பதையும் விட, அவர் எந்த ராசிகளை தனது பார்வையால் ஆசீர்வதிக்கிறார் என்பதற்கே அதிக முக்கியத்துவம் வழங்கப்படுகிறது.

“குரு பார்க்க கோடி நன்மை” என்ற ஜோதிட நம்பிக்கை

ஜோதிடத்தில் “குரு பார்க்க கோடி நன்மை” என்ற பழமொழி மிகவும் பிரபலமானது. இதன் பொருள், குருவின் பார்வை கிடைக்கும் இடங்களில் வளர்ச்சி, வளம், நன்மை மற்றும் அதிர்ஷ்டம் அதிகரிக்கும் என்பதாகும். குரு பகவான் தனது சுப பார்வையின் மூலம் மனிதர்களின் வாழ்க்கையில் நேர்மறை மாற்றங்களை ஏற்படுத்துவார் என்று நம்பப்படுகிறது. இந்த குரு பெயர்ச்சியிலும் குரு இருக்கும் இடம் மட்டுமல்லாமல், அவர் பார்க்கும் ராசிகளுக்கும் அதிக பலன்கள் கிடைக்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது. இதனால் பலர் தங்கள் வாழ்க்கையில் புதிய முன்னேற்றங்களையும், எதிர்பாராத வாய்ப்புகளையும் சந்திக்கலாம் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

குருவின் 5, 7, 9 பார்வையால் பலன் பெறும் ராசிகள்

கடக ராசியில் தற்போது அமர்ந்துள்ள குரு பகவான் தனது 5-ஆம் பார்வையால் விருச்சிக ராசியையும், 7-ஆம் பார்வையால் மகர ராசியையும், 9-ஆம் பார்வையால் மீன ராசியையும் பார்க்கிறார். ஜோதிட சாஸ்திரப்படி இந்த பார்வைகள் மிகவும் வலிமையானதாகக் கருதப்படுகின்றன. அதனால் இந்த மூன்று ராசிக்காரர்களுக்கும் வாழ்க்கையின் பல துறைகளில் சாதகமான மாற்றங்கள் ஏற்படும் என கூறப்படுகிறது. தொழில், வருமானம், குடும்ப அமைதி, திருமண வாய்ப்பு, குழந்தை பாக்கியம், சொத்து சேர்க்கை போன்ற பல அம்சங்களில் முன்னேற்றம் காணப்படும் சூழல் உருவாகலாம். சிலருக்கு நீண்ட காலமாக தடைபட்டிருந்த காரியங்கள் கூட இப்போது நிறைவேறும் வாய்ப்பு இருப்பதாக ஜோதிடர்கள் கருதுகின்றனர்.

Also Read: கோடி நன்மைகள் தரும் குரு பெயர்ச்சி: மிதுனத்தில் இருந்து கடக ராசிக்கு குடிபுகுந்தார் குரு பகவான்!

இரட்டை யோகத்தைப் பெறும் அதிர்ஷ்ட காலம்

இந்த குரு பெயர்ச்சியின் முக்கிய சிறப்பம்சமாக, குருவின் சுப பார்வை கிடைக்கும் விருச்சிகம், மகரம் மற்றும் மீனம் ஆகிய ராசிக்காரர்கள் “இரட்டை யோகம்” பெறுவார்கள் என்ற நம்பிக்கை நிலவுகிறது. அதாவது ஒரே நேரத்தில் இரண்டு விதமான அனுகூல பலன்கள் சேர்ந்து கிடைக்கும் காலமாக இது அமையக்கூடும். பொருளாதார முன்னேற்றத்துடன் மனநிம்மதியும், தொழில் வளர்ச்சியுடன் குடும்ப மகிழ்ச்சியும், கல்வி முன்னேற்றத்துடன் புதிய வாய்ப்புகளும் சேர்ந்து கிடைக்க வாய்ப்பு உள்ளது. எனினும், ஜோதிட பலன்கள் ஒவ்வொருவரின் ஜாதக அமைப்பையும், கிரக நிலைகளையும் பொறுத்து மாறுபடக்கூடும் என்பதால், இதனை பொதுப் பலனாகவே எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow Us