ஜாக்டோ ஜியோ அமைப்பினரை சந்தித்த முதல்வர் விஜய்..
ஜாக்டோ ஜியோ அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர்கள், விஜய் தலைமையிலான தமிழக அரசை தலைமைச் செயலகத்தில் சந்தித்து பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஜாக்டோ-ஜியோ அமைப்பின் நிர்வாகிகள், “முதல்வர் விஜய் எங்களை இன்முகத்துடன் வரவேற்றார். ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் மனதில் இடம்பிடித்த முதல்வராக அவர் உள்ளார். மாநில ஒருங்கிணைப்பாளர்கள் ஒவ்வொருவரிடமும் தனித்தனியாக பேசி, நாங்கள் முன்வைத்த கருத்துகளை கவனமாக கேட்டறிந்தார்.
ஜாக்டோ ஜியோ அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர்கள், விஜய் தலைமையிலான தமிழக அரசை தலைமைச் செயலகத்தில் சந்தித்து பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஜாக்டோ-ஜியோ அமைப்பின் நிர்வாகிகள், “முதல்வர் விஜய் எங்களை இன்முகத்துடன் வரவேற்றார். ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் மனதில் இடம்பிடித்த முதல்வராக அவர் உள்ளார். மாநில ஒருங்கிணைப்பாளர்கள் ஒவ்வொருவரிடமும் தனித்தனியாக பேசி, நாங்கள் முன்வைத்த கருத்துகளை கவனமாக கேட்டறிந்தார். மேலும், ‘எங்களுடைய ஆட்சி உங்களுக்கு நல்லாட்சியை வழங்கும்’ என்று உறுதியளித்தார்” என தெரிவித்தனர். மேலும், “மூன்று மாதத்திற்கு ஒருமுறை ஜாக்டோ-ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்களை அழைத்து, அவர்களது குறைகளை நேரடியாக கேட்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தோம். அதற்கு முதல்வர், ‘நிச்சயமாக அதை செய்கிறேன்’ என்று உறுதி அளித்தார்” என்றும் கூறினர்.
