AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

114 ஆண்டுகளுக்கு பிறகு திருக்குறுங்குடியில் நடக்கும் மகாகும்பாபிஷேகம்…

Grand Mahakumbabishekam at Thirukkurungudi: திருக்குறுங்குடியில் 114 ஆண்டுகளுக்கு பிறகு ராயகோபுர கும்பாபிஷேகம் நாளை நடக்கிறது. மார்ச் 25 காலை 9.20–10.30 மணிக்குள் நிகழ்வு நடைபெறும் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. அழகிய நம்பி 5 வடிவங்களில் அருள்பாலிக்கும் திவ்ய தேசம் திருக்குறுங்குடி ஸ்ரீ அழகிய நம்பி கோயில்.

114 ஆண்டுகளுக்கு பிறகு திருக்குறுங்குடியில் நடக்கும் மகாகும்பாபிஷேகம்…
திருக்குறுங்குடி ஸ்ரீ அழகிய நம்பி கோயில் Image Source: social media
Sivasankari Bose
Sivasankari Bose | Published: 25 Mar 2026 12:30 PM IST

திருக்குறுங்குடி ஸ்ரீ அழகிய நம்பி கோயிலில் மார்ச் 25, 2026 அன்று மகாகும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
காலை 9.20 முதல் 10.30 மணி வரை புனித நிகழ்வு நடைபெற உள்ளது. 114 ஆண்டுகளுக்கு பிறகு ராயகோபுரத்திற்கு கும்பாபிஷேகம் நடைபெறுவது சிறப்பு.இது திருநெல்வேலி மாவட்டத்தின் முக்கிய திவ்ய தேசங்களில் ஒன்றாகும். அழகிய நம்பி 5 வடிவங்களில் அருள்பாலிக்கும் தனிச்சிறப்பு கொண்ட தலம்.
ஆழ்வார்கள் மங்களாசாசனம் செய்த புனித தலமாகும்.

மகாகும்பாபிஷேக விழா நடைபெறும் நேரம்

25.3.2026 – புதன் அன்று, திருநெல்வேலி மாவட்டம் திருக்குறுங்குடியில் அமைந்துள்ள ஸ்ரீ அழகிய நம்பி திருக்கோயிலில் மகாசம்ப்ரோக்ஷணம் (மஹாகும்பாபிஷேகம்) நடைபெறுகிறது. 2026 – ஆண்டு, மார்ச் 25 – ஆம் தேதி இன்று காலை 9.20க்கு மேல் 10.30 மணிக்குள் நடைபெற உள்ளது. இந்த நிகழ்வு பக்தர்களிடையே மிகுந்த ஆனந்தத்தையும் பக்தி உணர்வையும் ஏற்படுத்தியுள்ளது.

114 ஆண்டுகளுக்குப் பிறகு ராயகோபுர கும்பாபிஷேகம்

114 வருடங்களுக்கு பிறகு ராயகோபுரத்திற்கு கும்பாபிஷேகம் நடைபெற இருப்பது சிறப்பு. இது கோயிலின் வரலாற்றில் முக்கியமான நிகழ்வாக கருதப்படுகிறது. நீண்ட காலத்திற்குப் பிறகு நடைபெறும் இந்த புனித நிகழ்வை காண பக்தர்கள் பலரும் திரளாக வருகை தருகின்றனர்.

திவ்ய தேசத்தின் புனித நிலம்

திருக்குறுங்குடி திவ்ய தேசம், திருநெல்வேலி மாவட்டத்தில் வானமாலை திவ்ய தேசத்திற்கு அருகாமையில் உள்ளது. வாமன க்ஷேத்திரம் என்றும் அழைக்கப்படும் இது நம்பியாறு (நம்பி நதி) கரையிலும், மஹேந்திர கிரி மலையின் அடிவாரத்திலும் உள்ளது. இயற்கை அழகும், ஆன்மிகச் சிறப்பும் இணைந்த புனித தலமாக இது விளங்குகிறது.

அழகிய நம்பியின் ஐந்து வடிவங்கள்

அழகிய நம்பி ராயர் என்ற திருநாமத்தோடு 5 விதமான வடிவங்களில் காட்சியளிக்கிறார். பிரதான மூர்த்தி (பெருமாள்) நின்ற நம்பி ஆவார். அவரது இடதுபுறத்தில், மேலும் 2 சந்நதிகள் உள்ளன. இங்கு கிடந்த நம்பி (உறங்கும் நம்பி) மற்றும் இருந்த நம்பி ஆகியோர் காணப்படுகின்றனர்.

Also Read: சுவாமிநாராயன் அக்‌ஷர்தாமில் 108 அடி நீலகண்ட வர்ணி சிலை பிரதிஷ்டை.. சிறப்புகள் என்ன?

பிற சன்னதிகளின் சிறப்பு

பிரதான கோயிலுக்கு வெளியே, ஒரு தனி கோயிலில், திருப்பாற்கடல் நம்பி (க்ஷீராப்திநாதன் – வாமன நம்பி) இருக்கிறார். மஹேந்திர கிரியின் (மஹேந்திர மலை) உச்சியில் மலை மேல் நம்பிக்கு தனி சந்நதி உள்ளது. சந்நதிக்கு அருகில் அழகிய நீர்வீழ்ச்சிகளும் உள்ளது.

ஆழ்வார்கள் பாடிய தலம்

மூலவர் எம்பெருமான் வர்ண கலபத்தில் (வண்ண வடிவம்) காணப்படுகிறார். இக்கோயிலில் சிவனுக்கும் இடம் உண்டு. திருமங்கை ஆழ்வார் அவரை ‘‘பக்கம் நின்றார்’’ (நின்ற நம்பியின் பக்கத்தில் நின்றவர்) என்று பாடுகிறார். நம்மாழ்வார் தனது பாசுரங்களில் நம்பி எம்பெருமானின் தெய்வீகத் தோற்றத்தை அனுபவித்தார். திருமழிசை ஆழ்வார், பெரியாழ்வார், திருமங்கை ஆழ்வார் ஆகியோரும் நம்பி எம்பெருமானுக்கு மங்களாசாசனம் செய்துள்ளனர். திருமங்கை ஆழ்வார் முத்தி பெற்ற தலம் இது.

இந்த மகாகும்பாபிஷேக விழா, பக்தர்களுக்கு ஆன்மிக நிறைவை அளிப்பதோடு, திருக்குறுங்குடி திவ்ய தேசத்தின் பெருமையையும் உலகறியச் செய்கிறது.

Follow Us