AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

450 டன் எடை, 85 அடி உயரத் தேர்.. நெல்லையப்பர் கோயில் தேரோட்டம் கோலாகலம்!

இந்தியாவிலேயே மிக அதிக எடையும், பிரம்மாண்ட அமைப்பும் கொண்ட தேர்களில் நெல்லையப்பர் கோயில் தேர் முதன்மையானது. சுமார் 85 அடி உயரமும், 450 டன் எடையும் கொண்ட இந்தத் மாபெரும் தேரானது, நான்கு ரதவீதிகளின் எந்தவொரு முனையிலிருந்து பார்த்தாலும் நகர்ந்து வருவது தெளிவாகத் தெரியும் வகையில் பிரம்மாண்டமாகத் தட்டமைப்புகள் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

450 டன் எடை, 85 அடி உயரத் தேர்.. நெல்லையப்பர் கோயில் தேரோட்டம் கோலாகலம்!
நெல்லையப்பர் கோவில் தேர் திருவிழா
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 28 Jun 2026 09:22 AM IST

திருநெல்வேலி, ஜுன் 28: ஆசியாவிலேயே இரண்டாவது மிகப்பெரிய சிவத்தலமாகவும், திருநெல்வேலி என்ற பெயர் உருவாவதற்குக் காரணமாகவும் விளங்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க நெல்லையப்பர் காந்திமதி அம்மன் கோயிலின் 520-வது ஆணிப் பெருந்திருவிழா தேரோட்டம் இன்று கோலாகலமாகத் தொடங்கியது. பிரம்மாண்டமாக நடைபெற்று வரும் இந்தத் தேரோட்டத்தைக் காண தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் நான்கு ரதவீதிகளிலும் திரண்டுள்ளதால் நெல்லை மாநகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.

40 நாட்கள் நடைபெறும் வரலாற்றுத் திருவிழா:

நெல்லையப்பர் கோயிலின் ஆணிப் பெருந்திருவிழா என்பது தமிழகத்தில் மிக நீண்ட நாட்கள் நடைபெறும் ஒரு மாபெரும் திருவிழாவாகும். துணைக்கோயில்களின் உற்ஸவங்களையும் சேர்த்து மொத்தம் 40 நாட்கள் நடைபெறும் இந்தத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான மூலவர் கோயிலின் திருவிழா, கடந்த ஜூன் 20-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து கடந்த 8 நாட்களாக சுவாமி-அம்பாள் வீதியுலா, சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் ஆராதனைகள் விமரிசையாக நடைபெற்று வந்தன. திருவிழாவின் சிகர நிகழ்வான ஒன்பதாம் நாளான இன்று (ஞாயிற்றுக்கிழமை) வரலாற்றுப் பிரசித்தி பெற்ற தேரோட்டம் நடைபெறுகிறது.

450 டன் எடையும்.. 85 அடி உயரமும்:

இந்தியாவிலேயே மிக அதிக எடையும், பிரம்மாண்ட அமைப்பும் கொண்ட தேர்களில் நெல்லையப்பர் கோயில் தேர் முதன்மையானது. சுமார் 85 அடி உயரமும், 450 டன் எடையும் கொண்ட இந்தத் மாபெரும் தேரானது, நான்கு ரதவீதிகளின் எந்தவொரு முனையிலிருந்து பார்த்தாலும் நகர்ந்து வருவது தெளிவாகத் தெரியும் வகையில் பிரம்மாண்டமாகத் தட்டமைப்புகள் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

முன்னொரு காலத்தில் இந்தத் தேர் நிலைத்து நின்று, நான்கு ரதவீதிகளையும் சுற்றி நிலைக்கு வர 10 முதல் 15 நாட்கள் வரை ஆகும். ஆனால் நவீன தொழில்நுட்பக் கட்டைகள் மற்றும் முறையான நிர்வாக ஏற்பாடுகள் காரணமாக, தற்காலத்தில் தேரோட்டம் தொடங்கப்படும் ஒரே நாளிலேயே நிலைக்குக் கொண்டு வரப்படுகிறது.

வடம்பிடித்துத் தொடங்கி வைத்த அமைச்சர்கள்:

இன்று காலை நடைபெற்ற தேரோட்டத் தொடக்க நிகழ்வில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ், அமைச்சர் மதன் மற்றும் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் ஆகியோர் நேரில் பங்கேற்று, வடம்பிடித்துத் தேரோட்டத்தை முறைப்படி தொடங்கி வைத்தனர்.

அமைச்சர்கள் தொடங்கி வைத்ததைத் தொடர்ந்து, “நமச்சிவாய” கோஷங்கள் விண்ணதிர, ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வடங்களைப் பிடித்துத் தங்கள் கரங்களால் தேரை இழுத்துச் செல்லத் தொடங்கினர். 85 அடி உயரத் தேர் அசைந்தாடி ரதவீதிகளில் நகர்ந்து வரும் காட்சியைக் காணக் கண் கோடி வேண்டும் என்று பக்தர்கள் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

மாலை நேரத்திற்குள் தேர் நான்கு ரதவீதிகளையும் வலம் வந்து மீண்டும் அதன் நிலையை வந்தடையும் வகையில் விரிவான பாதுகாப்பு மற்றும் குடிநீர் வசதிகளை மாவட்ட நிர்வாகமும், காவல் துறையும் இணைந்து செய்துள்ளன.

Follow Us