House Fly: மழை வந்ததும் வீட்டிற்குள் ஈ வருகிறதா..? விரட்ட எளிய குறிப்புகள் இதோ!
House Flies Home Remedies: ஈக்கள் தம்மோடு பல வகையான பாக்டீரியாக்களையும் பூஞ்சைகளையும் கொண்டு வருகின்றன. இதனால், உங்களுக்குப் பல நோய்கள் வர வாய்ப்புள்ளது. இவை உங்கள் உணவிலும் மொய்க்கின்றன. அதனால்தான் பல நோய்கள் ஏற்படுகின்றன. அந்தவகையில், ஈக்கள் பிரச்சனையில் இருந்து எப்படி தப்பிக்கலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.
மழைக்காலம் தொடங்கும் போது, வீட்டிற்குள் (Home Clean) ஈக்கள் வர தொடங்கும். சமையலறை முதல் படுக்கையறை, கூடம் வரை எல்லா இடங்களிலும் ஈக்கள் தென்படத் தொடங்குகின்றன. வீட்டில் ஈக்களைக் கண்டால், அதை நீங்கள் சற்றும் புறக்கணிக்கக் கூடாது. ஏனெனில், பல இடங்களில் உள்ள அழுக்குகளில் ஈக்கள் மொய்த்துள்ளன. ஈக்கள் (Housefly) தம்மோடு பல வகையான பாக்டீரியாக்களையும் பூஞ்சைகளையும் கொண்டு வருகின்றன. இதனால், உங்களுக்குப் பல நோய்கள் வர வாய்ப்புள்ளது. இவை உங்கள் உணவிலும் மொய்க்கின்றன. அதனால்தான் பல நோய்கள் ஏற்படுகின்றன. இதற்கிடையில், வீட்டிலிருந்து இதுபோன்ற ஈக்களை விரட்ட என்ன செய்ய வேண்டும்? வீட்டில் நீங்கள் என்ன செய்யலாம்? வாருங்கள் தெரிந்து கொள்வோம்…
ALSO READ: மீன் வாங்குறீங்களா? இந்த அறிகுறிகளை மறக்காதீங்க!
குப்பைகளை உடனடியாக அகற்றுங்கள்..
ஈக்கள் அசுத்தமான இடங்களில் வாழ்கின்றன. குப்பை மற்றும் அழுகிய பொருட்கள் போன்ற இடங்களை ஈக்கள் விரும்புகின்றன. அதனால்தான் பாக்டீரியாக்களும் உங்கள் வீட்டிற்குள் நுழைகின்றன. இது உணவு நஞ்சாக மாறக்கூடும். காலரா மற்றும் பிற நோய்த்தொற்றுகள் ஏற்படவும் வாய்ப்புள்ளது. ஆனால், உங்கள் வீட்டில் உள்ள ஈக்களை நீங்கள் உடனடியாக விரட்டலாம். அதற்காக நீங்கள் அதிக பணம் செலவழிக்க வேண்டிய தேவையில்லை. நீங்கள் வீட்டிலேயே ஒரு செய்முறையை தயாரித்து, உங்கள் வீட்டிலிருந்து ஈக்களை விரட்டலாம்.




ALSO READ: பறவைகளை நெருக்கமாக பார்க்க ஆசையா? திருச்சியில் புதிய ஸ்பெஷல் ஸ்பாட்!
வீட்டிலிருந்து ஈக்களை எப்படி விரட்டுவது?
உங்கள் வீட்டில் உள்ள ஈக்களை விரட்ட விரும்பினால், நீங்கள் பணம் செலவழிக்கத் தேவையில்லை. உங்கள் வீட்டில் உள்ள பொருட்களைக் கொண்டே ஒரு ஈ விரட்டியை தயாரிக்கலாம். இதற்கு, உங்களுக்கு ஒரு கப் தண்ணீர் மட்டுமே போதுமானது. மேலும், ஒரு கரண்டி சர்க்கரை, வினிகர் மற்றும் பாத்திரம் கழுவும் திரவம் ஆகியவையும் இதற்கு தேவைப்படும். அதன்படி, ஒரு பாத்திரத்தில் ஒரு கப் தண்ணீரை எடுத்துக் கொள்ளுங்கள். இந்தத் தண்ணீரில் சர்க்கரையைக் கலக்கவும். மீண்டும் அதில் வினிகரைச் சேர்த்து, சில துளிகள் பாத்திரம் கழுவும் திரவத்தையும் சேர்த்து, கலவையை நன்றாகக் கலக்கவும். வீட்டில் அதிக ஈக்கள் இருக்கும் இடத்தில் இந்தக் கலவையை வைக்கவும். சர்க்கரையின் இனிப்பு, ஈக்களை அந்தக் கலவையின்பால் ஈர்க்கும். ஈக்கள் இந்தக் கலவையின் அருகே வந்தவுடன், அவை அதில் சிக்கிக்கொள்கின்றன. அவற்றால் வெளியே வர முடியாது.